search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் கொள்ளை: தாலுகா முற்றுகையிட்டு போராட்டம்
    X

    வட்டாட்சியர் பார்த்தசாரதியிடம் போராட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மணல் கொள்ளை: தாலுகா முற்றுகையிட்டு போராட்டம்

    • பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.
    • இதனை கண்டித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

    பரமக்குடி

    மதுரைக்கு அடுத்த படியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். பரமக்குடி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு ஜே.சி.பி. மூலம் லாரிகளில் மணல் திருடியுள்ளனர்.

    கிராமப்புறங்களில் நடந்த மணல் திருட்டு தற்போது நகர்புறங்களிலும் தொடங்கிவிட்டது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி மறத்தமிழர் சேனை நிறுவனர் பிரபாகர் மற்றும் பா.ஜ.க.வினர் மணல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஓட்டப்பா லத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை கோசமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் தாசில்தார் பார்த்தசாரதி, போலீசார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது கூடிய விரைவில் மணல் திருடியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×