search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மணல் கொள்ளை
    X

    தொடர் மணல் கொள்ளை

    • பட்ட பகலில் கடத்தல் படுஜோராக நடைபெறுகின்றன
    • பொதுமக்கள் குற்றச்சாட்டு

    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட விண்ணமங்கலம், வாழைப்பந்தல், தச்சூர், மருசூர், அகிலாண்டபுரம், உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆற்றுபடுக்கையில் இரவு பகலாக டிராக்டர் லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றன.

    இது சம்மந்தமாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தாலும் கண்டு கொள்ளாமல் உள்ளதால் பட்ட பகலில் மணல் கடத்தல் படுஜோராக நடைபெறுகின்றன.

    இதனால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் போலீஸ், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிப்பதால் சில தினங்களில் 7 டிராக்டர் 5 லாரி 3 பொக்லைன் எந்தி ரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதனையடுத்து கல்பூண்டி செய்யாற்று படுக்கையில் பட்டப் பகலில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரி டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமிக்கு பொது மக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டன.

    ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில் வருவாய் துறையினர் நேரில் சென்று பொக்லைன், டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். வருவாய் துறையினரை கண்ட பொக்லைன் டிராக்டர் டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் டிராக்டரை பையூர் வி.ஏ.ஓ கார்த்தி ஒட்டி வந்து ஆரணி தாலுக்கா போலீசில் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×