என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கிருமாம்பாக்கம் அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி - 2 வாலிபர்கள் கைது
கிருமாம்பாக்கம்:
கிருமாம்பாக்கம் அருகே மணப்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 46). விவசாயி.
இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் 2 மணியளவில் இவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கும் சத்தம் கேட்டது.
திடுக்கிட்டு ஜெயராமன் எழுந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுபற்றி உடனே ஜெயராமன் கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் கிருமாம்பாக்கம் ஏரிக்கரையில் சந்தேகத்திற் கிடமான முறையில் நின்ற 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பேட் பகுதியை சேர்ந்த ராஜி (35) மற்றும் ஜானகிராமன் (19) என்பதும் இவர்கள் ஜெயராமன் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்