search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமாம்பாக்கம் அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி - 2 வாலிபர்கள் கைது
    X

    கிருமாம்பாக்கம் அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி - 2 வாலிபர்கள் கைது

    கிருமாம்பாக்கம் அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருமாம்பாக்கம்:

    கிருமாம்பாக்கம் அருகே மணப்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 46). விவசாயி.

    இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் 2 மணியளவில் இவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கும் சத்தம் கேட்டது.

    திடுக்கிட்டு ஜெயராமன் எழுந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுபற்றி உடனே ஜெயராமன் கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் கிருமாம்பாக்கம் ஏரிக்கரையில் சந்தேகத்திற் கிடமான முறையில் நின்ற 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பேட் பகுதியை சேர்ந்த ராஜி (35) மற்றும் ஜானகிராமன் (19) என்பதும் இவர்கள் ஜெயராமன் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×