என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விருத்தாசலம் அருகே பெயிண்டரை கொல்ல முயன்ற 2 பேர் கைது
விருத்தாசலம்:
விருத்தாசலம் காந்திநகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). பெயிண்டர். இவருக்கு விருத்தாசலத்தைச் சேர்ந்த நவீன், பரத்ராஜ், சுகுந்த், பிரேம், சுரேஷ் மற்றும் சிலர் நண்பர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் சதீஷ்குமார் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய நவீன் உள்ளிட்டவர்கள் சதீஷ்குமாரை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
இதில் முகம், கைகளில் காயமடைந்த அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் சதீஷ்குமாரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைராகி மடத்தைச் சேர்ந்த பரத்ராஜ் (26), மேட்டுத்தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்