என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முசிறி பஸ்நிலையத்தில் வாலிபரிடம் பிக்பாக்கெட் அடித்த பெண் உள்பட 4 பேர் கைது
முசிறி:
முசிறி அடுத்த மாங்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(45). நேற்று முசிறியிலிருந்து மாங்கரைப்பேட்டை செல்வதற்காக முசிறி நகர பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக ரமேஷ் காத்திருந்தார்.
அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலில் ஒரு பெண் உட்பட 4 பேர் ரமேஷிடம் பிக்பாக்கெட் அடித்துள்ளனர். அவர் சத்தம் போட்டார். உடனே 4 பேரும் தப்பி ஓடினர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் தப்பி ஓடிய நான்கு பேரையும் பிடித்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் விசாரணை மேற்கொண்டதில் பிக்பாக்கெட் அடித்தவர்கள் தொட்டியத்தை சேர்ந்த உஷா (32), முசிறியை சேர்ந்த ராஜா (45), செல்வராஜ்(52), பெரியசாமி (37) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பிக்பாக்கெட் அடித்த ரூ ஆயிரம் மீட்கப்பட்டது. ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பெண் உள்பட நான்கு பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்