search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Velachery"

    வேளச்சேரி அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேளச்சேரி:

    கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 18). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் தனது செல்போனில் அடிக்கடி ‘கேம்’ விளையாடி வந்தார். இதனை அவரது தாய் கண்டித்து செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டனர். இதனால் மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேளச்சேரி நீச்சல் குளத்தில் மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    நங்கநல்லூரை சேர்ந்தவர் சாய் ஸ்ரீ வத்சன். தாம்பரத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தில் ஸ்ரீ வத்சன் நீச்சல் பயிற்சி பெற்று வந்தார். தந்தையுடன் சென்று அவர் பயிற்சி பெறுவது வழக்கம். இன்று காலையிலும் வழக்கம் போல பயிற்சிக்கு சென்றார்.

    நீச்சல் அடித்துக் கொண்டு இருந்த போது, சாய் ஸ்ரீ வத்சன் முதுகு வலிப்பதாக கூறி உள்ளார். இதையடுத்து அவரை கரையேறுமாறு தந்தை கூறினார். குளத்தில் இருந்து வெளியே வந்த போது ஸ்ரீவத்சனுக்கு மயக்கம் ஏற்பட்டது.

    உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு ஸ்ரீவத்சனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பயிற்சியின் போது உயிரிழந்த ஸ்ரீவத்சன் காஞ்சீபுரம் மாவட்ட அளவில் நீச்சல் பயிற்சியில் 2-ம் இடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வேளச்சேரியில் டாக்டர் வெளிநாடு செல்வதை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பள்ளிக்கரணை:

    சென்னை வேளச்சேரி விஜயநகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் அழகர்சாமி. தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளிநாடு சென்று இருந்தார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று வீடு திரும்பினார். வீட்டிற்குள் நுழைந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்து வீடுகள் உள்ள இடத்தில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    டாக்டர் வெளிநாடு செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

    இதுகுறித்து வேளச்சேரி போலீசில் டாக்டர் அழகர் சாமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டாக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #Tamilnews
    வேளச்சேரியில் பட்டபகலில் அதிமுக பிரமுகரின் தாயாரை 3 பேர் கும்பல் தாக்கி நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆலந்தூர்:

    வேளச்சேரி நேரு நகரை சேர்ந்தவர் முல்லை செல்வம். அ.தி.மு.க. வட்ட செயலாளராக உள்ளார். இவரது தாய் பூமயில் (வயது 64).

    இன்று காலை பூமயில் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக அருகில் உள்ள பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார்.

    காமராஜபுரம், குமரன் தெருவில் வந்த போது அவரை ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் வழிமறித்தனர். திடீரென அவர்கள் பூமயில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த பூமயில் கொள்ளையர்கள் பிடியில் இருந்து நகையை பாதுகாக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பூமயிலை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் அவர் அணிந்திருந்த நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயம் அடைந்த பூமயிலுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
    வேளச்சேரியில் லாட்ஜில் சூதாட்டமாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    வேளச்சேரி அன்னை இந்திரா நகரில் உள்ள லாட்ஜில் அறைகளை வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் லாட்ஜில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது 4 அறைகளை வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது.

    சூதாட்டத்தில் ஈடுபட்ட தேனாம்பேட்டையை சேர்ந்த ஜான்சன், புரசைவாக்கத்தை சேர்ந்த ஜோசப், மேற்கு தாம்பரத்தை சேர்ந்த முத்து, குன்றத்தூரை சேர்ந்த வெங்கடேஷ், கொளத்தூர் கங்கேஸ்வரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சூதாட்டம் நடந்த லாட்ஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் சரவணன், முன்னாள் கவுன்சிலரான இவர் தினகரன் ஆதரவாளர் ஆவார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளார்.

    ×