கடற்கரை - வேளச்சேரி இடையே மீண்டும் பறக்கும் ரெயில்: பூங்கா ஸ்டேஷனில் நின்று செல்லாததால் பயணிகள் சிரமம்

கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கின.கடற்கரை - வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
கடற்கரை - வேளச்சேரி இடையே மீண்டும் பறக்கும் ரெயில்: பூங்கா ஸ்டேஷனில் நின்று செல்லாததால் பயணிகள் சிரமம்
Published on

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பறக்கும் மின்சார ரெயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

அதன்படி கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கின.

இதையடுத்து பறக்கும் ரெயில் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் மட்டும் பறக்கும் ரெயில் நிற்காது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் பறக்கும் ரெயில் நிற்காததால் அங்கு காத்திருந்த மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இது தொடர்பாக ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கூறுகையில்,

பறக்கும் ரெயில் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் நிற்காது என்ற தகவலை முன்கூட்டியே அறிவித்து இருக்க வேண்டும்.

வழக்கம்போல ரெயில் நிலையம் மூடப்பட்டிருந்தது. மீண்டும் ஆட்டோ பிடித்து சிந்தாதிரிப்பேட்டை வந்தோம். இதுபோன்ற தகவல்களை 2 நாட்களுக்கு முன்பே சொல்ல வேண்டும். ரெயில்வே துறை சரியான தகவலை கூறவில்லை என்று கூறினார்.

கடற்கரை - வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல் மறுமார்க்கமாக வேளச்சேரி - கடற்கரை வரை காலை 4 முதல் இரவு 10.20 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com