search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளச்சேரி நீச்சல் குளத்தில் மாணவன் பலி
    X

    வேளச்சேரி நீச்சல் குளத்தில் மாணவன் பலி

    வேளச்சேரி நீச்சல் குளத்தில் மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    நங்கநல்லூரை சேர்ந்தவர் சாய் ஸ்ரீ வத்சன். தாம்பரத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தில் ஸ்ரீ வத்சன் நீச்சல் பயிற்சி பெற்று வந்தார். தந்தையுடன் சென்று அவர் பயிற்சி பெறுவது வழக்கம். இன்று காலையிலும் வழக்கம் போல பயிற்சிக்கு சென்றார்.

    நீச்சல் அடித்துக் கொண்டு இருந்த போது, சாய் ஸ்ரீ வத்சன் முதுகு வலிப்பதாக கூறி உள்ளார். இதையடுத்து அவரை கரையேறுமாறு தந்தை கூறினார். குளத்தில் இருந்து வெளியே வந்த போது ஸ்ரீவத்சனுக்கு மயக்கம் ஏற்பட்டது.

    உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு ஸ்ரீவத்சனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பயிற்சியின் போது உயிரிழந்த ஸ்ரீவத்சன் காஞ்சீபுரம் மாவட்ட அளவில் நீச்சல் பயிற்சியில் 2-ம் இடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×