என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பயணிகளின் கனிவான கவனத்திற்கு..! நாளை முதல் மீண்டும் இயங்கும் பறக்கும் ரெயில் சேவை
- ரெயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தம்.
- வேளச்சேரியில் இருந்து சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில் சேவைகள் நாளை முதல் தொடங்குவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ரெயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை- வேளச்சேரி ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு, வேளச்சேரியில் இருந்து சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், 4வது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்ததால் சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே இனி புறநகர் ரெயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரெயில் அறிவித்துள்ளது.
Next Story






