search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passenger"

    • 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது.
    • மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பிரிவில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனை அவரப்பாளையம், மற்றும் அருகிலுள்ள பகுதிவாழ் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது. மேலும் குடிமகன்கள் அங்கே அமர்ந்து மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர். மேலும் குடிமகன்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படுத்தும் தூங்குகின்றனர்.

    இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சுவர்கள் பழுதடைந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை பராமரித்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலை போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையாகும்.
    • வாகனங்கள் ஒரே திசையில் மட்டும் வந்து செல்வதால் விபத்து அதிகமாக ஏற்படுகிறது.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலை போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையாகும். இந்த சாலையில் பல இடங்களில் அதிக பள்ளம் இருப்பதினால் வாகன ஓட்டிகள் பகலிலும், இரவு நேரங்களிலும் அதிவேகத்தில் எதிர்புற சாலையில் செல்வதினால் ஒரு மாதத்திற்கு சுமார் 20 வாகன விபத்துகள் ஏற்படுகிறது.

    தினசரி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாண விகள், முதியவர்கள், குடும்பத்தார்கள், தொழிலாளர்கள், அதிகாரிகள் போன்ற ஏராளமானோர் செல்லும் முக்கியமான சாலையில் ஏராளமான இடங்கள் குண்டும், குழியுமாக உள்ளது. வாகனங்கள் ஒரே திசையில் மட்டும் வந்து செல்வதால் விபத்து அதிகமாக ஏற்படுகிறது. விபத்தினை தடுப்பதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் பொது மக்களின் நலனை கவனத்தில் கொண்டு விரைவில் இந்த தார்சாலையை புதுப்பித்து தரவேண்டும் என்று பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தனித்தனியாக மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    • காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது.
    • இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் ரவுண்டானா பகுதியில் சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு மரக்கட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

    அப்போது காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ் கட்டு பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் உரசியது.

    இதில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டைகள் பஸ்சின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகள் மீது விழுந்தது. மேலும் பஸ்சின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

    பஸ்சில் இருந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தொழில் அதிபரை கைது செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அந்த பெண் பயணி திடீரென மனம் மாறியது ஏன்..?
    • நீங்கள் செய்த செயல்களை மன்னிக்க முடியாது என பெண் பயணி கோபத்துடன் கூறினார்.

    அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு சம்பவத்தன்று ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. இதில் பிசினஸ் வகுப்பில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற தொழில் அதிபர் பயணம் செய்தார். அவர் குடிபோதையில் இருந்தார்.

    விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சங்கர் மிஸ்ரா இருக்கையில் அமர்ந்தவாறு திடீரென சிறுநீர் கழித்தார்.

    இதனால் பக்கத்தில் இருந்த பெண் பயணி ஒருவரின் உடை மற்றும் அவரது பையில் சிறுநீர்பட்டு நனைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், விமான பணியாளர்களிடம் இதுபற்றி கூறினார்.

    ஆனால் அவர்கள் பெண் பயணியை தொட மறுத்தனர். அவரது காலணி மற்றும் பை மீது கிருமி நாசினி தெளித்தனர்.மேலும் பைஜாமா மற்றும் கையுறையும் கொடுத்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் தனக்கு இருக்கையை மாற்றி தருமாறு கேட்டார். ஆனால் வேறு இருக்கை இல்லை எனக்கூறி அவருக்கு மாற்று இருக்கை கொடுக்க விமான பணியாளர்கள் மறுத்துவிட்டனர்.

    விமானம் தரை இறங்கியதும் அந்த பெண் பயணி தன் மீது சிறுநீர் கழித்த தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சிறிது நேரம் கழித்ததும் அந்த பெண், தொழில் அதிபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தெரிவித்தார். இதனால் இருவரும் சமாதானமாகி சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொழில் அதிபரை கைது செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அந்த பெண் பயணி திடீரென மனம் மாறியது ஏன் என்பது குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

    சம்பவம் நடந்த அன்று சங்கர் மிஸ்ராவிடம் நடந்த விவரம் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். அந்த சமயம் அங்கு இருந்த பெண் பயணியை பார்த்த அவருக்கு கண்களில் இருந்து பொலபொல வென கண்ணீர் வடிந்தது. நடந்த சம்பவத்திற்காக என்னை மன்னித்து விடுங்கள் என அவர் அந்த பெண்ணிடம் கண்ணீர் விட்டு கதறினார்.

    நீங்கள் செய்த செயல்களை மன்னிக்க முடியாது என பெண் பயணி கோபத்துடன் கூறினார். ஆனாலும் என்னை பற்றி கேள்விபட்டால் மனைவியும் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள்.

    அதனால் தன்மீது புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் என கெஞ்சினார். அந்த பெண் அவர் மீது மேலும் குற்றம் சுமத்தினால் கடினமாக இருக்கும் என நினைத்து நடந்ததை கெட்ட கனவாக எண்ணி புகார் கொடுக்காமால் சமாதான மாக சென்று விட்டார். இதனால் தொழில் அதிபர் தண்டணையில் இருந்து தப்பிவிட்டார்.

    • 3 மாத காலம் மேட்டுப்பாளையம்,நெல்லை ரெயில் இயக்கப்பட்டது.
    • மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந் திர ரெயில் 5 வாரங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட டது.

    கோவை 

    மேட்டுப்பாளையம் -நெல்லை வாராந்திர ரெயில்,பயணிகளின் கோரிக் கையை ஏற்று கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த மே மாதம் முதல் 3 மாத காலம் மேட்டுப்பாளையம், கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்டது.

    வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரெயில் மறுநாள் சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு நெல்லையை அடையும்.

    மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேரும். 3 மாத காலத்துக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்த ரெயில் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதற்கு ரெயில் பயணிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

    மேலும் 70 சதவீத பயணிகளுடன் சென்ற இந்த ரெயில் ஏன் ரத்து செய்யப்பட்டது என்று ரெயில் பயணிகள் சங்கங்கள் தரப்பில் கண்டனம் எழுப்ப பட்டது. இதை தொடர்ந்து அந்த வாராந்திர ரெயில் ஜூலை மாதம்21-ந் தேதி முதல் ஆகஸ்ட் 19-ந் தேதி வரை 5 வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அது நேற்றுடன் முடிவடைந்து. மீண்டும் அந்த ரெயிலை இயக்குவது குறித்து அறிவிப்பு ஏதும் இல்லாத தால் மேட்டுப்பாளையம்- நெல்லை ரெயில் 2-வது முறையாகரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அடுத்த வாரம் அந்த ரெயில் இயக்கப்படாது. இது ெரயில் பயணிகளிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம்- நெல்லை ரெயிலில் கடந்த 2 வாரங்களாக முன் பதிவுக்கு டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே ரெயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் அந்தரெயிலை நீட்டிக்காமல் ரெயில்வே நிர்வாகம் மவுனமாக உள்ளது. ஆனால் கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு இயக் கப்பட்டு வரும் வாராந் திர ரெயில் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி முதல் 5 மாதங்களுக்கு நீட்டித்து. அதாவது நவம்பர் மாதம் வரை நீட்டித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டது.

    ஆனால் அதே மாதம் நீட்டிக்கப்பட்ட மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந் திர ரெயில் 5 வாரங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட டது. அதன்பிறகு நீட்டிப்பது பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.இதில் தென்னக ரெயில்வே பாரபட்சத்துடன் நடப்பதோடு மட்டு மல்லாமல் கோவையை வஞ்சிப்பதாகவும் தெரிகிறது. எனவே ரெயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந்திர ரெயிலை மீண்டும் இயக்குவ தோடு மட்டுமல்லாமல் அதை நிரந்தர ரெயிலாகவும் மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பாலக்காடு டவுன்-ஈரோடு ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்கள் இயக்கப்படும்.
    • ஈரோடு-கோவை முன்பதிவில்லா தினசரி ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பாலக்காடு டவுன்-ஈரோடு செல்லும் முன்பதிவில்லா ரெயில் (எண்.06818) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்கள் இயக்கப்படும். இந்த ரெயில் தினமும் பாலக்காடு டவுனில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 7.10 மணிக்கு சென்றடையும். கோவைக்கு 4.17 மணிக்கும், வடகோவைக்கு 4.27 மணிக்கும், பீளமேடுக்கு 4.37 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 4.42 மணிக்கும், இருகூருக்கு 4.49 மணிக்கும், சூலூருக்கு 4.57 மணிக்கும், சோமனூருக்கு 5.09 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 5.19 மணிக்கும், திருப்பூருக்கு 5.29 மணிக்கும், ஊத்துக்குளிக்கு 5.49 மணிக்கும், ஈரோடுக்கு 7.10 மணிக்கும் சென்றடையும்.

    இதுபோல் ஈரோடு-பாலக்காடு டவுன் முன்பதிவில்லா ரெயில் (எண்.06819) வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தினமும் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுனை காலை 11.45 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் ஊத்துக்குளிக்கு காலை 7.59 மணிக்கும், திருப்பூருக்கு 8.13 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 8.24 மணிக்கும், சோமனூருக்கு 8.34 மணிக்கும், சூலூருக்கு 8.44 மணிக்கும், இருகூருக்கு 8.51 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 8.56 மணிக்கும், பீளமேடுக்கு 9.04 மணிக்கும், வடகோவைக்கு 9.14 மணிக்கும், கோவைக்கு 9.30 மணிக்கும் சென்றடையும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு-கோவை முன்பதிவில்லா தினசரி ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஈரோட்டில் தினமும் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு காலை 9.45 மணிக்கு சென்றடைந்தது. இந்தநிலையில் ஈரோட்டில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 10.15 மணிக்கு சென்றடையும் வகையில் நேர மாற்றம் செய்யப்பட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.

    ஈரோட்டில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு ஊத்துக்குளிக்கு 8.35 மணிக்கும், திருப்பூருக்கு 8.49 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 8.59 மணிக்கும், சோமனூருக்கு 9.09 மணிக்கும், சூலூருக்கு 9.19 மணிக்கும், இருகூருக்கு 9.27 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 9.34 மணிக்கும், பீளமேடுக்கு 9.41 மணிக்கும், வடகோவைக்கு 9.49 மணிக்கும், கோவைக்கு 10.15 மணிக்கும் சென்று சேரும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பயணிகள் ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
    • ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    சேலம்:

    விருத்தாசலம்-சேலம் இடையே பயணிகள் ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், ரெயில் பயணிகள், சேவை சங்கங்களின் கோரிக்கையினை ஏற்று இனி ஞாயிற்றுக்கிழமையிலும் இயக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    அதன்படி இன்று சேலம்-விருத்தாசலம் இடையே இந்த ரெயில் இயக்கப்பட்டது. ஆத்தூர் ரெயில்நிலையத்துக்கு இந்த ரெயில் இன்று காலை 7.05 மணிக்கு வந்தது. இதை தொடர்ந்து ரெயிலுக்கு ரோட்டரி மிட்டவுன் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆத்தூர் ரோட்டரி மிட்டவுன் சங்க தலைவர் சீனிவாசன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • இதுவரை மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து பழனி ஒட்டன்சத்திரம் வழியாக தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில்கள் இல்லை.
    • நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து மதுரை, பழனி வழியாக இந்த சிறப்பு ரெயிலை கோவைக்கு நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தென்காசி:

    தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இயங்கும் நெல்லை- மேட்டுப் பாளையம் வாராந்திர ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி விதி எண் 377 ன் கீழ் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் எழுப்பியுள்ள கேள்வியில், பழனி முருகன் கோவில் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பழனிக்கு வருவது வழக்கம். இதில் பழனி ரெயில் நிலையம் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    மேலும் கொடைரோடு ரெயில் நிலையமானது கொ டைக்கானல் செல்வதற்கு மிக முக்கியமான ரெயில் நிலையமாகும். இதுவரை மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து பழனி ஒட்டன்சத்திரம் வழியாக தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில்கள் இல்லை.

    அந்தக் குறையைப் போக்கும் வகையில் தற்போது பழனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி வழியாக இயங்கி கொண்டிருக்கும் மேட்டுப்பாளையம் - நெல்லை வாராந்திர ரெயிலை பொதுமக்களின் நலன் கருதி நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த மேட்டுப்பாளையம் - நெல்லை சிறப்பு ரெயிலானது மருதமலை, பழனி, மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சங்கரன்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர், தோரணமலை முருகன் கோவில், பாபநாசம் உள்ளிட்ட முக்கிய புண்ணிய தலங்கள் வழியாக செல்வதால் இந்த சிறப்பு ரெயிலை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து மதுரை, பழனி வழியாக இந்த சிறப்பு ரெயிலை கோவைக்கு நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த சிறப்பு ரெயிலானது 11 வாரங்களில் ரூ.80 லட்சம் வரை வருமானம் தந்துள்ளது.

    • தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பஸ் பாய்ந்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியிருந்த பஸ்சை மீட்டனர்.

    பாவூர்சத்திரம்:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், நெல்லை வழியாக ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ் இன்று அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

    பஸ்சை டிரைவர் மாடசாமி ஓட்டி வந்தார். பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பஸ் பாய்ந்தது.

    இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறல் சத்தம் போட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இன்றி உயிர்தப்பினர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியிருந்த பஸ்சை மீட்டனர்.

    இதுகுறித்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பணி நடந்து வருவதை குறிப்பிடும் வண்ணம் அதற்கான எச்சரிக்கை பலகைகள், பாதுகாப்பு மற்றும் பணி உபகரணங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். எவ்வித விபத்துக்களும் இன்றி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழனி என 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பஸ் நிலைய விரிவாக்கப்பணிகளுக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    உடுமலை :

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் நிலையம் 1964ல் கட்டப்பட்டு, 1996ல் விரிவாக்கம் செய்யப்பட்டது.உடுமலை சுற்றுப்புற கிராமங்களுக்கு டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழனி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பஸ்களும் இயக்கப்படுகின்றன.தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள்வந்து செல்கின்றனர். ஆனால் பஸ்கள் நிற்பதற்கான ரேக் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. போதிய வசதியில்லாத, இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில் இரு ஆண்டுக்கு முன் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பஸ் நிலைய விரிவாக்கப்பணிகளுக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    இதில் 15 பஸ்கள் நிற்கும் ரேக், 12 கடைகள், நேரக்காப்பாளர் அறை, பயணிகள் அமரும் வளாகம், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.பணி துவக்க விழா நடந்து 1½ ஆண்டுக்கு மேலாகியும் பணி துவங்காமல் இழுபறியாகி வந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் பணி துவங்கியது.

    துவங்கிய பணியும், ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. எனவே பஸ் நிலைய விரிவாக்கப்பணியை வேகமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீட்டர் கேஜ் ரயில்கள் ஓடிய நேரத்தில் நெல்லை - கொல்லம் இடையே பகல்நேர ரயில்கள் இயக்கப்பட்டன.
    • 2018-ம் ஆண்டு பிராட் கேஜ் ஆன பிறகு இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை.

    நெல்லை:

    தமிழகத்தில் மீட்டர் கேஜ் ெரயில்கள் ஓடிய நேரத்தில் நெல்லை - கொல்லம் இடையே அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை வழியாக பகல்நேர ெரயில்கள் இயக்கப்பட்டன.

    இப்பாதை 2018-ம் ஆண்டு பிராட் கேஜ் ஆன பிறகு இந்த ெரயில்கள் இயக்கப்படவில்லை.இதனால் நெல்லைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் கேரள மக்கள், இரு மாநில மாணவர்கள், வணிகர்கள் தனியார் மற்றும் அரசு வங்கி ஊழியர்கள், பால் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.


    மேலும் குற்றாலம் அருவிகள், குண்டாறு, அடவிநயினார், பாபநாசம், மணிமுத்தாறு அணைகள், மாஞ்சோலை எஸ்டேட், அகத்தியர் அருவி, ஆரியங்காவு, பாலருவி, தென்மலை சுற்றுலா தலம், கல்லடா அணை, அம்பநாடு எஸ்டேட் ஆகிய இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த ெரயில்களால் பயன் பெறுவர்.


    எனவே இந்த ெரயில்களை விரைவில் இயக்கிட ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும், அந்த ரெயில்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்திட மேற் கண்ணாடி கூரை வசதி உள்ள விஸ்டாடோம் பெட்டி ஒன்று இணைக்க வேண்டும் எனவும் செங்கோட்டை பயணிகள் நலச்சங்கத்தினர் மத்திய ெரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

    பெங்களூருவில் இருந்து திருப்பூர் சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 28 பயணிகள் உயிர் தப்பினர்.
    சூளகிரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு ஆம்னி சொகுசு பேருந்து புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தின் மேற்கூறையில் அதிக சரக்குகளை ஏற்றி வந்தனர். இன்று அதிகாலை 1.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சின்னாறு அருகே வரும்போது பஸ்சின் மேல்கூறையில் இருந்த பொருட்கள் திடீரென்று தீபிடித்து எரிந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து ஆம்னி பஸ்சின் டிரைவரான பெங்களூருவை சேர்ந்த சவுக்கருக்கு தகவல் கொடுத்தனர். அவர் பஸ்சை நிறுத்தி விட்டு பஸ்சில் பயணம் செய்த 28 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கினார். என்றாலும் தீ மளமளவென்று பரவி பஸ் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. 

    இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓசூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 1  மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. 

    இந்த தீ விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சரியான நேரத்தில் டிரைவருக்கு தகவல் கொடுத்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  பஸ்சின் மேல்கூறையில் தீப்பெட்டி அல்லது பட்டாசுகள் ஏற்றி வரப்பட்டதா? அல்லது மின் வயரில் இருந்து தீப்பொறி பறந்து பொருட்கள் மீது விழுந்து தீப்பிடித்ததா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
    ×