search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Run Again"

    • நெல்லை மாநகரபகுதி மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்களும் சந்திப்பு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று வருகிறார்கள்.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நடைபெறுவதால் தற்போது சந்திப்புக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் சந்திப்பு பகுதி மிகவும் முக்கியமான இடமாக உள்ளது.

    மாநகரபகுதி மட்டுமல்லா மல் பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்களும் சந்திப்பு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று வருகிறார்கள்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நடைபெறுவதால் தற்போது சந்திப்புக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    தென்காசி உள்ளிட்ட வழித்தட பஸ்கள் சந்திப்பு தேவர் சிலை அருகே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றது. பின்னர் பயணிகள் அங்கிருந்த சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் பயணிகள் சிரமத்தை போக்கும் வகையில் டவுன் சந்திப்பிள்யைார் கோவில் முக்கில் இருந்து புதிய பஸ்நிலையத்திற்கு 1டி என்ற எண் கொண்ட 3 பஸ்கள் இயக்கப்பட்டது.

    இந்த பஸ் நயினார்குளம், எஸ்.என். ஹைரோடு, சந்திப்பு ரெயில் நிலையம் சென்று பின்னர் வண்ணார் பேட்டை வழியாக புதிய பஸ் நிலையம் சென்று வந்தது. இதனால் பயணிகள் பெரிதும் பயன்பெற்று வந்தனர்.

    இந்நிலையில் தற்போது ஒரு மாதமாக இந்த பஸ் நிறுத்தப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி மீண்டும் இநத பஸ்சை இயக்க வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநலச்சங்க தலைவர் அய்யூப் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • மீட்டர் கேஜ் ரயில்கள் ஓடிய நேரத்தில் நெல்லை - கொல்லம் இடையே பகல்நேர ரயில்கள் இயக்கப்பட்டன.
    • 2018-ம் ஆண்டு பிராட் கேஜ் ஆன பிறகு இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை.

    நெல்லை:

    தமிழகத்தில் மீட்டர் கேஜ் ெரயில்கள் ஓடிய நேரத்தில் நெல்லை - கொல்லம் இடையே அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை வழியாக பகல்நேர ெரயில்கள் இயக்கப்பட்டன.

    இப்பாதை 2018-ம் ஆண்டு பிராட் கேஜ் ஆன பிறகு இந்த ெரயில்கள் இயக்கப்படவில்லை.இதனால் நெல்லைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் கேரள மக்கள், இரு மாநில மாணவர்கள், வணிகர்கள் தனியார் மற்றும் அரசு வங்கி ஊழியர்கள், பால் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.


    மேலும் குற்றாலம் அருவிகள், குண்டாறு, அடவிநயினார், பாபநாசம், மணிமுத்தாறு அணைகள், மாஞ்சோலை எஸ்டேட், அகத்தியர் அருவி, ஆரியங்காவு, பாலருவி, தென்மலை சுற்றுலா தலம், கல்லடா அணை, அம்பநாடு எஸ்டேட் ஆகிய இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த ெரயில்களால் பயன் பெறுவர்.


    எனவே இந்த ெரயில்களை விரைவில் இயக்கிட ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும், அந்த ரெயில்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்திட மேற் கண்ணாடி கூரை வசதி உள்ள விஸ்டாடோம் பெட்டி ஒன்று இணைக்க வேண்டும் எனவும் செங்கோட்டை பயணிகள் நலச்சங்கத்தினர் மத்திய ெரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

    ×