search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "expansion work"

    • இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கின்றன.
    • பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் இருந்து வந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது சாலையின் இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைத்தும், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றியும் அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடலூர் மஞ்சகுப்பம் ஆல்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக 43 வீடுகள் இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு தலைமையில் பல ஆண்டுகளாக வசித்து வந்த வீடுகளை இடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் நாங்கள் உடனடியாக இடத்தை காலி செய்வதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் 43 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் இருந்து வந்த பயணிகள் நிழற்குடை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் முழுவதுமாக இடிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து விடிய விடிய காத்திருந்தனர். மேலும் ஏதேனும் வீடுகள் இடிக்கப்பட உள்ளதா? என பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    தற்போது முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

    மேலும் 43 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள், எங்கள் வீடுகளை இடிக்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது போல் எங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு எங்கள் வீடுகளை இடிப்பதற்கு அனுமதிப்போம். இதற்கான நடவடிக்கை காலதாமதம் ஆனால் தமிழ்நாடு முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஆகையால் மாவட்ட நிர்வாகம் எங்களது அடிப்படை கோரிக்கையான மாற்று குடியிருப்பை உடனடியாக அதற்கான சான்று வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அகலப்படுத்தி புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது.
    • விரிவாக்கம் காரணமாக ஓரமாக இருந்த பழமை வாய்ந்த 3 மரங்கள் சாலையின் உட்புறம் வந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை-பேட்டை நெடுஞ்சாலையில் கோடீஸ்வரன்நகர் அருகே குளத்தாங்கரை தர்ஹா உள்ளது. அதில் இருந்து காட்சி மண்டபம் வரையிலும் சேதம் அடைந்து காணப்பட்ட சாலையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வந்தனர்.

    சாலை விரிவாக்கம்

    இந்நிலையில் சமீபத்தில் அந்த பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அகலப்படுத்தி புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது. இதனால் முன்பிருந்த சாலையின் அகலத்தை விட சாலை அகலமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஆனால் அதே நேரத்தில் சாலை விரிவாக்கம் காரணமாக ஓரமாக இருந்த பழமை வாய்ந்த 3 மரங்கள் சாலைக்குள் வந்துவிட்டது. இந்த மரங்களை கவனிக்காமல் கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றி செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அப்புறப்படுத்த கோரிக்கை

    எனவே சாலையின் பக்கம் சாய்ந்திருக்கும் மரத்தின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி அப்புறப்படுத்தினால் கனரக வாகனங்கள், பஸ்கள் எவ்வித ஆபத்தும் இன்றி அந்த வழியாக சென்றுவரும்.

    எனவே அதற்கான நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என கலெக்டர் கார்த்திகேயனிடம் பொதுஜன பொதுநல சங்க தலைவர் அய்யூப் இன்று கோரிக்கை மனு அளித்தார்.

    • டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழனி என 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பஸ் நிலைய விரிவாக்கப்பணிகளுக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    உடுமலை :

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் நிலையம் 1964ல் கட்டப்பட்டு, 1996ல் விரிவாக்கம் செய்யப்பட்டது.உடுமலை சுற்றுப்புற கிராமங்களுக்கு டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழனி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பஸ்களும் இயக்கப்படுகின்றன.தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள்வந்து செல்கின்றனர். ஆனால் பஸ்கள் நிற்பதற்கான ரேக் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. போதிய வசதியில்லாத, இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில் இரு ஆண்டுக்கு முன் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பஸ் நிலைய விரிவாக்கப்பணிகளுக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    இதில் 15 பஸ்கள் நிற்கும் ரேக், 12 கடைகள், நேரக்காப்பாளர் அறை, பயணிகள் அமரும் வளாகம், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.பணி துவக்க விழா நடந்து 1½ ஆண்டுக்கு மேலாகியும் பணி துவங்காமல் இழுபறியாகி வந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் பணி துவங்கியது.

    துவங்கிய பணியும், ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. எனவே பஸ் நிலைய விரிவாக்கப்பணியை வேகமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×