search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரிவாக்கப்பணி"

    • பஸ் நிலையம் விரிவாக்கப்பணிகள் ரூ.20 கோடி மதிப்பில் தொடங்கியது.
    • பொதுமக்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பஸ் நிலையம் விரிவாக்கப் பணிகள் ரூ.20 கோடி மதிப்பில் தொடங்கியதால், 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரி வித்துள்ளது. இது குறித்து ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் கூறியதாவது:-

    நான் ராமநாதபுரம் மையப்பகுதியில் அமைந் துள்ள புதிய பஸ் நிலையம் கட்டிடங்கள், கடைகள் மற்றும் வளாக பகுதியி லுள்ள சந்தைக்கடை ஆகி யவை சேதமடைந்து காணப் பட்டது. தி.மு.க. அரசு வந்ததும் புதிய பஸ் நிலையம் விரிவாக்கப் பணிகளுக்கு அரசானை வெளியிடப்பட்டு, முதற் கட்டமாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இதில் புதிதாக ஒருங் கிணைந்த பஸ் நிலையம் மற்றும் கடைகள், சந்தை கடைகள், அடிப்படை வசதி கள் அடங்கிய உள்கட்ட மைப்பு வசதிகள் அமைக்கப் பட உள்ளன. இந்நிலையில் சேதமடைந்த பழைய கட்டிடங்கள், 50-க்கும் மேற் பட்ட கடைகள், சந்தைகடை கட்டிடங்கள், கழிப்பறைகள், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட வைகளை அகற் றும் பணி உள்ளிட்ட சீர மைப்பு பணிகள் தொடங்கி யுள்ளது. இந்த பணிகள் முழுமை யாக நிறைவடையும் வரை, தற்காலிக பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் சிரம மின்றி சென்று வர போக்கு வரத்து ஏற்பாடு செய்யும்படி கலெக் டர் விஷ்ணுசந்திரன், காதர்பாட்ஷா எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் ஆகி யோரிடம் நகராட்சி நிர்வா கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டு, அவர்கள் ஆய்வு செய்தனர்.

    இதனையடுத்து நகராட்சி சார்பில் தற்போது ரெயில் வே நிலையம் அருகிலுள்ள பழைய பஸ் நிலையம், மதுரை ரோட்டில் உள்ள மூலக்கொத்தலம் பகுதியி லுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி ஆகிய இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பஸ் கள் வந்து செல்ல மற்றும் நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழனி என 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பஸ் நிலைய விரிவாக்கப்பணிகளுக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    உடுமலை :

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் நிலையம் 1964ல் கட்டப்பட்டு, 1996ல் விரிவாக்கம் செய்யப்பட்டது.உடுமலை சுற்றுப்புற கிராமங்களுக்கு டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழனி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பஸ்களும் இயக்கப்படுகின்றன.தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள்வந்து செல்கின்றனர். ஆனால் பஸ்கள் நிற்பதற்கான ரேக் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. போதிய வசதியில்லாத, இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில் இரு ஆண்டுக்கு முன் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பஸ் நிலைய விரிவாக்கப்பணிகளுக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    இதில் 15 பஸ்கள் நிற்கும் ரேக், 12 கடைகள், நேரக்காப்பாளர் அறை, பயணிகள் அமரும் வளாகம், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.பணி துவக்க விழா நடந்து 1½ ஆண்டுக்கு மேலாகியும் பணி துவங்காமல் இழுபறியாகி வந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் பணி துவங்கியது.

    துவங்கிய பணியும், ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. எனவே பஸ் நிலைய விரிவாக்கப்பணியை வேகமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×