search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painter"

    • உதயமூர்த்தி, சக்திவேல் ஆகிய இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு மது பாட்டில்களை கண்ணன் வீட்டில் வீசி வந்துள்ளனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் முகில் அரசன், சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உதயமூர்த்தி, சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் உதயமூர்த்தி (23) ,சக்திவேல் (20). இவர்கள் இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு மது பாட்டில்களை கண்ணன் வீட்டில் வீசி வந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை கண்ணன் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவும் குடித்து விட்டு மது பாட்டில்களை கண்ணன் வீட்டில் வீசி உள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த உதயமூர்த்தி மற்றும் கண்ணன் ஆகிய 2 பேரும் கம்பு, கட்டைகளால் கண்ணனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.காயம் அடைந்த கண்ணன் தூத்துக்குடி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் முகில் அரசன், சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உதயமூர்த்தி, சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    உதயமூர்த்தி மீது சிப்காட் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 8 வழக்குகள் இருப்பதாகவும், சக்திவேல் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் 2 பேர் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கணேசமூர்த்தி நாங்குநேரியான் கால்வாய் பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறு, பாலத்தில் உள்ள சிறிய தூணில் மோதியது.
    • இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், பாண்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது32). பெயிண்டர். இவர் கடந்த 8-ந்தேதி மாலை வேலைக்கு சென்று விட்டு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவர் களக்காடு-சிதம்பரபுரம் சாலையில் உள்ள நாங்குநேரியான் கால்வாய் பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறு, பாலத்தில் உள்ள சிறிய தூணில் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சம்பவத்தன்று இரவு ஆறுமுகம் தனது மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி பஜாரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • நடராஜர் நகர் விலக்கு அருகே செல்லும்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி காணியாளர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆறுமுகம் (65). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி பஜாரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நடராஜர் நகர் விலக்கு அருகே செல்லும்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது. இதில் கீழே விழுந்த ஆறுமுகம் படுகாயம் அடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சை க்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆனந்த ரூபன் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
    • பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அறிவொளி நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ஆனந்த ரூபன் (வயது 48). பெயிண்டராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆனந்த ரூபன் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனிமையில் இருந்த அவர் சாணி பவுடரை கரைத்து குடித்து உள்ளார். இதில் மயக்கம் அடைந்தார். இதனைப் பார்த்த அவரது வீட்டினர் உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த ரூபன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார்.
    • ஆத்திரமடைந்த வாலிபர் அரிவாளில் வெட்டினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 46) .

    இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகள் கீழவாசல் முள்ளுக்கார தெருவை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (22) என்பவருடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று பிலோபாநந்தவனம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆனஸ்ட்ராஜிடம், எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார்.

    இதில் ஆனஸ்ட்ராஜ் ஆத்திரமடைந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டினார்.

    இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்குப் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனஸ்ட்ராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சேந்தமங்கலம் அருகே முட்டாஞ்செட்டி அருந்த தியர் தெருவை சேர்ந்தவர் நாமக்கல்லில் பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
    • வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் வளையபட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது மோகனூரில் இருந்து வளையபட்டி நோக்கி வந்த லாரி நடேசன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முட்டாஞ்செட்டி அருந்த தியர் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது 60). இவர் நாமக்கல்லில் பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் தனது மகள் சண்முக வள்ளியின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அவரது வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் வளையபட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது மோகனூரில் இருந்து வளையபட்டி நோக்கி அதி வேகமாக வந்த லாரி நடேசன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    லாரியை ஒட்டி வந்த டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து நடேசன் மகன் செந்தில்குமார் மோகனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • மார்ட்டின்ராஜ் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
    • மார்ட்டின்ராஜை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் சார்லஸ். இவரது மகன் மார்ட்டின்ராஜ்(வயது 25). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர் திடீரென விஷம் குடித்து மயங்கினார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுஜித் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
    • சுஜித் கஞ்சம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ருத்திராயம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித் (வயது 22). பெயிண்டர். இவருக்கும் மகேஷ் என்ற பெண்ணுக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    கடந்த 20-ந் தேதி இவர் தனது மனைவியிடம் கஞ்சம்பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது சுஜித் கஞ்சம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சுஜித்தின் உடலை ஆய்வு செய்த போது அவர் மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து அன்னூர் போலீசார் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுஜித் திருட்டுத்தனமாக கள் எடுத்து குடிக்க மரத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் விவசாயியான பனைமரத்து ேதாட்டத்தை சேர்ந்த துரை (59), ஊத்துபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி (45), ருத்திராயம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் (49), கிழக்குவலவை சேர்ந்த பழனிசாமி (57), தாசம்பாளையத்தை சேர்ந்த வெங்கிட்டான் (50), கஞ்சம்பள்ளியை சேர்ந்த முத்துக்குமார் (50) ஆகியோரை கைது செய்தனர்.

    சுஜித் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து முக்கிய குற்றவாளியான துரையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- நான் விவசாய தொழில் செய்து வருகிறேன். ஆனால் அதில் எனக்கு போதிய வருமானம் இல்லை. இதனையடுத்து எனது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் கள் எடுத்து விற்பனை செய்யலாம் என முடிவு செய்தேன். அதன்படி 110 தென்னை மரத்தில் இருந்து கள் எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தேன். இரவு நேரத்தில் நான் வீட்டிற்கு சென்ற போது தென்னை மரத்தில் இருந்து கள் திருட்டு போனது. இதனை தடுப்பதற்காக 110 தென்னை மரங்களிலும் இரும்பு கம்பியால் சுற்றி இரவு நேரத்தில் மட்டும் அதில் மின்சாரம் செலுத்தி வந்தேன். இதனால் கள் திருட்டு குறைந்தது. கடந்த 21-ந் தேதி ஏற்கனவே போதையில் இருந்த சுஜித் கள் குடிப்பதற்காக எனது ேதாட்டத்துக்கு வந்துள்ளார். நான் விற்பனையை முடித்து விட்டு சென்று விட்டேன். இதனையடுத்து அவர் தென்னை மரத்தில் மின் இணைப்பு இருப்பது தெரியாமல் கள் எடுப்பதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி இறந்தார். மறுநாள் காலையில் ேதாட்டத்துக்கு சென்ற நான் அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் கள் குடிக்க வந்த 5 பேருடன் சேர்ந்து சுஜித்தின் உடலை சிறிது தூரம் கொண்டு சென்று போட்டு விட்டு வந்தோம்.

    சட்டவிரோதமாக மின் இைணப்பு கொடுத்து இருந்தால் விசாரணை நடத்தி போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் தென்னை மரங்களில் சுற்றி இருந்த இரும்பு கம்பிகளை அகற்றினேன். பின்னர் ஏதும் தெரியாதது போல இருந்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். கைது செய்யப்பட்ட 6 பேர் மீது கொலைக்கு நிகரான உயிரிழப்பை ஏற்படுத்துதல், ஆதாரங்களை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.   

    • ரத்தவெள்ளத்தில்,படுகாயங்களுடன் ஒருவர் கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் நேற்று காலை ரத்தவெள்ளத்தில்,படுகாயங்களுடன் ஒருவர் கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற போலீசார் அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் காயம் பட்டவர் பல்லடம் அருகே மாதப்பூரில் வசிக்கும் அய்யாசாமி மகன் மாரிமுத்து( 45) என்பதும் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணையில், இவரும் பல்லடம் வடுகபாளையம் பகுதியில் வசிக்கும் சக பெயிண்டிங் தொழிலாளியான முத்துவேல்(52) என்பவரும் அதிகாலையிலேயே மதுபானம் அருந்திவிட்டு பஸ் நிலையத்திற்குள் வந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இந்தநிலையில் முத்துவேல் அருகே கிடந்த மதுபான பாட்டிலை எடுத்து உடைத்து மாரிமுத்துவின் கழுத்து, மற்றும் முதுகு ஆகிய இடங்களில் குத்தியுள்ளார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற, முத்துவேல் பல்லடம், பனப் பாளையம் செக்போஸ்ட் அருகே மறைந்திருந்த போது, போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுடுகாட்டில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • கொலை செய்த முத்துகிருஷ்ணன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தம்பி முத்துசெல்வம் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பாலமுருகன் (வயது 37). பெயிண்டர். நேற்று இவர் ராஜபாளையம் அருகே காளவாசலில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு மாலையில் இறுதி ஊர்வலம் நடந்தது.அப்போது ஊர்வலத்தில் பங்கேற்ற பாலமுருகன் சுடுகாட்டுக்கு செல்லும் வழி நெடுகிலும் பூக்களை தூவியபடி சென்றார்.

    அப்ேபாது பால முருகனுக்கும், இறுதி சடங்கிற்கு வந்திருந்த சிவகாசி பாலையா புரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்தனர். அதன்பின் காளவாசல் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உறவினர் உடலை தகனம் செய்யும் பணி நடந்தது.

    அப்போது முத்து கிருஷ்ணன் தனது தந்தை சுந்தர்ராஜன், சகோதரர் முத்து செல்வம் ஆகியோருடன் அங்கு வந்தார். சுடுகாட்டில் நின்றிருந்த பாலமுருகனிடம் மீண்டும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். திடீரென தந்தை மற்றும் 2 மகன்கள் உருட்டுக்கட்டையால் பாலமுருகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தந்தை-2 மகன்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த கொலை குறித்து பாலமுருகனின் மனைவி முத்துலட்சுமி கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மன்னவன் வழக்குப்பதிவு செய்து வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த முத்துகிருஷ்ணன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தம்பி முத்துசெல்வம் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்.

    • கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்த கார்த்திக் திடீர் என உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
    • திருக்குறுங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள இறையடிக்காலை சேர்ந்த கார்த்திக் (வயது31). இவர் பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்த கார்த்திக் திடீர் என உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதில் உடல் கருகிய கார்த்திக்கை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாவூர்சத்திரம் அருகே திருட்டு வழக்கில் பெயிண்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    வீ. கே.புதூர்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை  நடத்தி வந்தனர். 

    மேலும் சி.சி.டி.வி. காட்சிகளின்  உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது மடத்தூர் சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த தவளை என்கிற ஆனந்த் (வயது 22) என்பது தெரிய வந்தது.

    போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில்  அவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் இருந்து திருடிய பணம் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருட்டு வழக்கில் ஈடுபட்ட ஆனந்த் பெயிண்டர் மற்றும் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார்.
    ×