search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alankulam"

    • பேரணியை தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றிய கோஷங்களை எழுப்பினர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்ட தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஜேசு ஜெகன் தலைமையில் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். வருவாய் தாசில்தார் கிருஷ்ணவேல், தேர்தல் தனி துணை தாசில்தார் மாசானமூர்த்தி, தேர்தல் வருவாய் உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி ஆலங்குளம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி தாசில்தார் அலுவலகத்தில் முடிவுற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றிய கோஷங்களை எழுப்பினர். இப்பேரணியை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவர்கள் ஜோகன்னா, ஜெய டேவிசன் இம்மானு வேல், ஜெஸிக்காள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பயிற்சியில் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் சரவணன், நெல் பயிரின் ரகங்கள், நெல் பயிரில் விதை உற்பத்தி பற்றி எடுத்துக் கூறினார்.
    • இணை பேராசிரியர் ரஜினிமாலா, நீர்வள நிலவள திட்டத்தின் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியில் இருக்கும் ஆலங்குளம் வட்டாரத்தில் உள்ள அகரம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் முன்னிலையில் அனைத்து துறையின் பங்களிப்புடன் சமூக நிலை மாற்ற மேலாண்மை குழுவிற்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

    இந்த பயிற்சியில் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன், நெல் பயிரின் ரகங்கள், நெல் பயிரில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.மேலும் இணை பேராசிரியர் ரஜினிமாலா, நீர்வள நிலவள திட்டத்தின் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார். இணை பேராசிரியர் ஆல்வின், தேனீ வளர்ப்பு வழி முறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் எளிய முறைகளை எடுத்துக் கூறினார். இப்பயிற்சியில் சுத்தமல்லியில் அமைந்துள்ள வாழைநார் பொருட்கள் தயாரிப்பாளர் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா மற்றும் சுதா ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் வாழைநாரில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட கைவினைப் பொருட்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி செய்முறை செய்து காட்டினர். நிகழ்ச்சியினை நீர்வள நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் சுடலை ஒளிவு மற்றும் அருண் சசிக் குமார் ஏற்பாடு செய்தனர்.

    • முத்துகிருஷ்ணபேரியில் முப்பெரும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) பெருமாள் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
    • ஆர்.கே.காளிதாசன், எஸ்.எம். நாராயண நாடார், நடராஜன், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ண பேரியில், வட்டார வியாபாரிகள் சங்க 5-ம் ஆண்டு தொடக்க விழா, சங்க கொடி ஏற்று விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) பெருமாள் கோவில் திருமண மண்டபத்தில் நடை பெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி மண்டலத் தலைவரும், தென்காசி மாவட்டத் தலைவருமான டி.பி.வி. வைகுண்டராஜா தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்ரம ராஜா சங்க கொடியேற்றுகிறார். எஸ்.எம்.என். ஹரிகிருஷ்ணன், எம்.ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கே.காளிதாசன், எஸ்.எம். நாராயண நாடார், நடராஜன், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

    மேலும், இஸ்மாயில், திவ்யா ரங்கன், அய்யப்பன், சின்னதுரை, செல்வராஜ், சோலையப்பராஜா, காமராஜ் நாடார், ஜெயபாலன், கணேசன், காஜாமுகைதீன், நயன் சிங், ஐ.வி.என். கலைவாணன், அசோ கன், குணசேகரன், காமராஜ், ரத்தினசாமி, உதயராஜ், பால சுப்பிர மணியன், நாராயண சிங்கம், பரமசிவன், முருகன், இசக்கி, விஜய்சிங், சண்முகசுந்தரம், முத்துவேல், வேல்சாமி, சிவன் பாண்டியன், ஆறுமுகம் ஆகி யோரும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    சிவபெருமாள், ராம கிருஷ்ணன், வைத்திலிங்கம், செல்வம், செயற்குழு உறுப்பி னர்கள் பரமசிவன், தங்கராஜ், பொன்னுதுரை ஆகியோர் நன்றி கூறுகின்றனர்.

    ஏற்பாடுகளை சுதர்சன், சங்கரநாராயணன், விஜய முருகன், மாணிக்கராஜா, மதன்ராஜ், சுப்பிரமணியன், செந்தில்குமார், மாரியப்பன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சுப்பாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
    • ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    புளியங்குடியை சேர்ந்த வர் பேச்சிமுத்து. இவரது மனைவி சுப்பாத்தாள் (வயது 70). இவர் தனது உறவினர்களுடன் கல்லிடைக்குறிச்சி செல்வ தற்காக ஆலங்குளத்திற்கு பஸ்சில் வந்துள்ளார்.

    அங்கிருந்து அம்பாச முத்திரம் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்த போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சுப்பாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சி களின் அடிப்படையில் தப்பியோடிய அந்த பெண்ணை தேடி வருகின்ற னர்.

    ஆலங்குளம் பஸ் நிலையத்தில் மாலை நேரங்க ளில் மது குடித்து விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களும், பள்ளி, கல்லூரி முடித்து வரும் மாணவ-மாணவிகள் வெகு நேரம் பஸ் நிலையத்திலேயே சுற்றி திரிவதும் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடப்பதாக பேருராட்சி கவுன்சிலர் சாலமோன்ராஜா பலமுறை புகார் தெரிவித்துள்ளார்.

    மேலும் பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்கள் இயங்குகிறதா? முடங்கியுள்ள தா? என்பது தெரியவில்லை. இந்த காரணத்தால் பொதுமக்கள், பெண்கள் ஒருவித அச்சத்துடனேயே பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். எனவே இங்குள்ள காமிராக்களை பழுது நீக்குவதுடன், பயணிகள் அதிகமாக வந்து செல்லும் நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விழாவில் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
    • அங்கன்வாடி பணியாளர்கள் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடனமாடி கர்ப்பிணிகளை மகிழ்வித்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பல்நோக்கு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் மங்கள நாயகி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன், துணை சேர்மன் செல்வக் கொடி ராஜாமணி, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் முத்துலெட்சுமி அன்பழகன், பள்ளி சிறார் மருத்துவர் சித்ரா, நெட்டூர் வட்டார சுகாதார மேற்பார் வை யாளர் கங்காதரன், புள்ளி யல் ஆய்வாளர் சண்முக சுந்தரம், உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் ஆகி யோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் கர்ப்பிணி களுக்கு வளையல் அணி வித்து வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடை பெற்றது. சேலை, பழ ங்கள்,சத்துமாவு அடங்கிய சீர் வரிசைகள் வழங்க ப்பட்டது. 5 வகை யான உணவுகள் வழங்க ப்பட்டது.

    இதில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 120 கர்ப்பிணிகள் பங்கேற்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடனமாடி கர்ப்பிணிகளை மகிழ் வித்தனர். விழாவில் பங்கேற்றவர்கள் அர்சதை தூவி கர்ப்பிணிகளுக்கு ஆசி வழங்கினர்.

    • விடுமுறை தினமான நேற்று பள்ளியின் வாசல் முன்பு மீண்டும் அந்த கழிவு லாரியை போலீசார் நிறுத்தி உள்ளனர்.
    • இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி முன்பாக கழிவுகள் அடங்கிய லாரி மீண்டும் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆலங்குளம்:

    தமிழகத்தில் கேரளாவிற்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், அங்கிருந்து திரும்பி வரும்போது அங்குள்ள இறைச்சி, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து தென்காசி மாவட்டங்களில் கொட்டிவிட்டு சென்று விடுகிறது.

    அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி கேரளாவில் இருந்து பிளாடிக், மருத்துவக்கழிவு என சுமார் 10 டன் கழிவுகளை முறைகேடாக ஏற்றி வந்த லாரியை ஆலங்கு ளத்தில் வாகனச்சோ தனையின்போது போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    பின்னர் அந்த லாரியை போலீஸ் நிலையத்திற்கு அருகே உள்ள ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுத்தினர். அந்த லாரியை அங்கு நிறுத்தியதால், ஆசிரியர்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் மாதக்கணக்கில் போலீசார் அந்த லாரியை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றாமல் உள்ளதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து சில நாட்களாக அந்த லாரி போலீஸ் நிலையம் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று பள்ளியின் வாசல் முன்பு மீண்டும் அந்த லாரியை போலீசார் நிறுத்தி உள்ளனர். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி முன்பாக கழிவுகள் அடங்கிய லாரி மீண்டும் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக போலீசாரிடம், தனியார் பள்ளி முன்பு உங்களால் இப்படி லாரியை நிறுத்த முடியுமா? என ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கேள்வி எழுப்பினர். ஆனால் அதனை போலீசார் கண்டு கொள்ளாமல் அலட்சியமான பதிலை கூறி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். எனவே உடனடியாக அந்த லாரியை காட்டுப்பகுதிக்குள் எடுத்துச்சென்று விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆலங்குளம் தொழிலதிபர் டி.பி.வி.வைகுண்டராஜா நேரில் சந்தித்து வணிகர்களின் குறைகளை எடுத்துரைத்தார்.
    • வணிகர்களுக்கு ஏற்படும் தடைகளை எல்லாம் நீக்கி, பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த அரசு துணையாக நிற்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று கூறினார்.

    ஆலங்குளம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொழிலதிபரும், வியாபாரிகள் சங்கத் தலைவருமான டி.பி.வி.வைகுண்டராஜா நேரில் சந்தித்து வணிகர்களின் குறைகளை எடுத்துரைத்தார். அதன் விவரங்கள் குறித்து வியாபாரிகள் சங்க தலைவர் வைகுண்டராஜா கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்ற காரணங்களால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வணிகர்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

    இதுகுறித்தும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அத்துமீறல் குறித்தும் முதல்- அமைச்சரிடம் தெரிவித்து ள்ளோம். நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, அறநிலையத்துறைக்கு சொந்தமான கடை வாடகை விகிதங்கள் குறித்தும், நுகர்வோர் அமைப்பு என்னும் பெயரில் தேவையில்லாமல் வழக்குகள் போட்டு வணிகர்களை அலைக்கழிப்பது பற்றியும் தெரியப்படுத்தினோம்.

    இன்னும் ஒரு மாதத்திற்குள் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தி தருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். வணிகர்களுக்கு ஏற்படும் தடைகளை எல்லாம் நீக்கி, பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த அரசு துணையாக நிற்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆலங்குளம் வந்த சபாநாயகர் அப்பாவுவிற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பின்னர் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு குற்றாலம் செல்லும் வழியில் ஆலங்குளம் வந்தார். அவர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

    ஆலங்குளத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு இடம் தேர்வு செய்வது குறித்து பிரச்சினை எழுந்த போது, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இடத்தில் சிலை அமைக்க உத்தரவிட்டார். மேலும் இப்பகுதி மக்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் 5 நாட்கள் தங்கி வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டு 3 நாட்கள் தங்க வனத்துறையினர் அனுமதி அளித்திருந்த நிலையில் நம் பகுதி மக்கள் 5 நாட்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த அரசு அனைத்து சமய வழிபாடுகளுக்கும் துணை நிற்கும் அரசு. எந்த ஜாதி. மத இனம் அனைத்திற்கும் அப்பாற்பட்டு வழிபாட்டுத் தலங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்

    அப்போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஒன்றியக் குழுத்தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன். சமுத்திர பாண்டியன் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் எழில்வா ணன், நகர தி.மு.க. செயலாளர் நெல்சன், ஒன்றிய செயலாளர்கள் செல்லதுரை, அன்பழகன், மாரி வண்ணமுத்து, மகேஷ் மாயவன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் தங்க செல்வம் மற்றும் கவுன்சிலர் பொன் செல்வம், காங்கிரஸ் மாநில செயலர் ஆலடி சங்கரய்யா, ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஞானபிரகாஷ், நகரச் செயலாளர் வில்லியம் தாமஸ், பொறியாளர் அணி அமைப்பாளர் மணி கண்டன், மாவட்ட பிரதிநிதி சாமுவேல் ராஜா, முன்னாள் கவுன்சிலர் மோகன்லால், அருணாசலம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பயிற்சியில் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் நெல் பயிரின் ரகங்கள், நெல் பயிரில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.
    • மேலும் 59 நெல் பாரம்பரிய வகைகளை விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியில் இருக்கும் ஆலங்குளம் வட்டாரத்தில் உள்ள அகரம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் முன்னிலையில் அனைத்து துறையின் பங்களிப்புடன் சமூகநிலை மாற்ற மேலாண்மை குழுவிற்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

    இப்பயிற்சியில் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் நெல் பயிரின் ரகங்கள், நெல் பயிரில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார். மேலும் இணை பேராசிரியர் ரஜினிமாலா, நீர்வள, நிலவள திட்டத்தின் செயல்பாடுகளை எடுத்து கூறினார். இணை பேராசிரியர் ஆல்வின் தேனி வளர்ப்பு வழிமுறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் எளிய முறைகளை எடுத்து கூறினார்.

    லெட்சுமி தேவி, பாரம்பரிய நெல் வகைகளை பயிர் செய்து குறைந்த மகசூலில் போதிய லாபம் பெறும் வழிமுறைகள் மற்றும் அதன் குணாதிசயங்கள், முக்கியத்துவம் போன்றவற்றை கூறினார். மேலும் 59 நெல் பாரம்பரிய வகைகளை விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    கால்நடை உதவி அலுவலர் ராமசெல்வம் கால்நடை துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார். வேளாண்மை உதவி அலுவலர் முருகன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கஸ்தூரி கலந்து கொண்டு வேளாண்மைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை எடுத்து கூறினார். நிகழ்ச்சியினை நீர்வள நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் சுடலை ஒளிவு மற்றும் அருண் சசிக்குமார் ஏற்பாடு செய்தனர்.

    • அனுப்பிரியாவுக்கு சக்தி என்பவருடன் திருமணமாகி 2 மாத கைக்குழந்தை உள்ளது.
    • கணவர் வீட்டில் பிரச்சினை காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே அனுப்பிரியா ஆலங்குளத்திற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

    தென்காசி:

    ஆலங்குளம் பஞ்சாயத்து ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் அனுப்பிரியா(வயது 19). இவருக்கு கடந்த ஆண்டு பாவூர்சத்திரம் அருகே உள்ள ராசப்பநாடானூரை சேர்ந்த சக்தி என்பவருடன் திருமணமாகி 2 மாத கைக்குழந்தை உள்ளது.

    இந்நிலையில் அனுப்பி ரியா நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில், திடீரென காணாமல் போய்விட்டார். குழந்தை மட்டும் வீட்டில் தனியாக அழுது கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அனுப்பிரியாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்து மகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுப்பிரியாவை தேடி வருகின்றனர். திருமணமான சில மாதங்களிலேயே அவர் கணவர் வீட்டில் பிரச்சினை காரணமாக ஆலங்குளத்திற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிரச்சினை காரண மாக அவர் மாயமானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கபடி போட்டியில் 58 கபடி அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.
    • 6-ம் பரிசு மலையராமபுரம் அணியினருக்கு முன்னாள் அமைச்சர் பூங்கோதை வழங்கினார்.

    தென்காசி:

    ஆலங்குளம் அருகே தெற்கு காவலா குறிச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆலடிஅருணா அறக்கட்டளை மற்றும் ஆர்.கே.சி கபடி கிளப் இணைந்து நடத்திய கபடி போட்டி நடந்தது. இதில் 58 கபடி அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். முன்னாள் அமைச்சர் பூங்கோதை தலைமை தாங்கினார்.

    வெற்றி பெற்ற அணிகளில் முதல் பரிசு ஆர்.கே.சி. அணியினருக்கும், 2-ம் பரிசு வடமலைப்பட்டி அணியினருக்கும், 3-ம் பரிசு ரோலக்ஸ் அணியினருக்கும், 4-ம் பரிசு புளியங்குடி அணியினருக்கும், 5-ம் பரிசு கொடிய குறிச்சி அணியினருக்கும், 6-ம் பரிசு மலையராமபுரம் அணியினருக்கும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மாஞ்சோலை துரை, கிளைச்செயலாளர் மகேந்திரன், தி.மு.க. பிரமுகர்கள் ஹரிஹரன், முருகையா பாண்டியன், அந்தோணி, சுப்பையா பாண்டியன், துரைராஜ், வடிவேல் முருகன், சேக்கப்பாண்டியன், மகேஷ் பாண்டியன், இசக்கி வேல், தங்கராஜன், செல்லதுரை, மாரிதுரை, காளைச்சாமி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சரவணன் நன்றி கூறினார்.

    ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் புதிதாக உதயமாகும் போது தென்காசிக்கு வந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலங்குளத்தில் புதிய மகளிர் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார். மறு ஆண்டே இந்தக் கல்லூரி வாடகை கட்டிடத்தில் செயல்பட தொடங்கியது.

    இரண்டே ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். தற்போது செயல்பட்டு வரும் வாடகை கட்டிடத்தில் போதிய வசதிகள், வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

      இந்தக் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட ஆலங்குளம் மலை அடிவாரத்தில் சுமார் 16 ஏக்கர் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதில் வெறும் ஐந்து ஏக்கர் மட்டுமே தற்போது கல்லூரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில்தான் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆலங்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரி சொந்தக் கட்டிடம் கட்ட ரூ.11.33 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.‌

    இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட கலெக்டர், நெல்லை எம்.பி. ஆகியோர் வந்து அடிக்கல் நாட்டினர்.

    கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் போதுமானதாக இல்லை என பொதுமக்கள் கருதுகின்றனர். ஏனெனில் வரும் காலங்களில் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட தற்போதுள்ள இடம் போதுமானதாக இருக்காது.

    16 ஏக்கர் நிலமே கல்லூரிக்கு குறைவான இடம் என்ற சூழலில் நீதிமன்றத்திற்கும் ஒதுக்கீடு செய்தால் வரும் காலத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

     இதுகுறித்து ஆலங்குளம் பொதுமக்கள் சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் தீயணைப்புத் துறைக்கு சொந்தக் கட்டடம் கட்ட தற்போது கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு நேர் எதிரே ஆண்டிப்பட்டி கிராமத்தில் சுமார் 8 ஏக்கர் நிலம் உள்ளது.

    இதனை நீதிமன்றத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் ஒதுக்கீடு செய்து கல்லூரிக்கு முழுவதும் உள்ள 16 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×