search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
    X

    திருவிளக்குப்பூஜையில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.

    ஆலங்குளம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

    • தசரா ஊர்வலத்தை கோவில் நிர்வாகி முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிகள் பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவையொட்டி 1.503 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற தசரா ஊர்வலத்தை கோவில் நிர்வாகி முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் வீதி உலா வந்தனர். சனிக்கிழமை குழந்தைகள் பங்குபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் 1503 பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இன்று காலை கோமாதா பூஜை, இரவு சாமகால பூஜை ஆகியவையும், நாளை (செவ்வாய்க்கிழமை) பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, பால்குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிகள் பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. அன்று இரவு அம்பாள் சப்பரத்தில் வீதி உலா, சாம பூஜையும் நடைபெறுகிறது. புதன்கிழமை சிபு பூஜை, மஞ்சள் நீராட்டு மற்றும் அன்னதானத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாகப் பொறுப்பாளர் எஸ்.எஸ். ராமசுப்பு மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×