search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குறுங்குடி அருகே தீக்குளித்த பெயிண்டர் சாவு
    X

    திருக்குறுங்குடி அருகே தீக்குளித்த பெயிண்டர் சாவு

    • கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்த கார்த்திக் திடீர் என உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
    • திருக்குறுங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள இறையடிக்காலை சேர்ந்த கார்த்திக் (வயது31). இவர் பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்த கார்த்திக் திடீர் என உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதில் உடல் கருகிய கார்த்திக்கை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×