search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nirmala devi"

    பாலியல் வழக்கில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லாததால் விடுதலை செய்யக்கோரி நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். #NirmalaDevi
    விருதுநகர்:

    கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி 7 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லை. எனவே எங்கள் 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று இன்று விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. #NirmalaDevi
    மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுகிறது என்று ஜி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். #gramakrishnan #parliamentelection #bjp #communistparty

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டேலுக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு சிலை அமைத்துள்ளது. இதனை விளம்பர படுத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளனர்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு காரணமாக மக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து வருகிறது.

    தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதாகவும், இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் தமிழக சட்டசபையில் அமைச்சரே தெரிவித்து உள்ளார். அந்த அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. திருப்பூரில் ஏற்றுமதி குறைந்துவிட்டது. தொழிற்சாலைகள் செயல்பட வில்லை.

    எனவே தான் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுகிறது.

    அடிமைகள் ஒருபோதும், தங்களை அடிமைகள் என்று ஒப்புக்கொள்வதில்லை. மத்திய அரசு தமிழகத்தில் நிறைவேற்ற துடிக்கும் மக்கள் விரோத திட்டங்களை இப்போதைய அரசு எதிர்ப்பதில்லை.

    அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலரும் ஊழல் வழக்கில் சிக்கி இருப்பதுதான் இதற்கு காரணமாகும். இந்த நிலை மாற வேண்டும். இப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தும் சோதனையில் அதிகாரிகள் சிக்கியிருப்பது இதற்கு எடுத்து காட்டாகும்.

    தமிழகத்தில் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் கூடுதல் வரிவிதிப்பை அரசு அமல்படுத்தி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத போது வரி விதிப்பை அமல் படுத்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும். இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேராசிரியை நிர்மலா தேவி வாக்குமூலம் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. வி.ஐ.பி.க்களை தப்ப வைக்க இந்த நடவடிக்கையா என்று எண்ண தோன்றுகிறது.


    எனவே இந்த வழக்கின் விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும்.

    கேரளாவில் நடந்து வரும் சபரிமலை விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல் படுத்தும் கேரள அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.

    அரசியலுக்காக போராடும் இவர்கள் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்? என்பதை விளக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் இதே நிலைப்பாட்டுடன்தான் போராடுகிறார்கள்.

    குமரியில் ஓகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இங்கு கொண்டுவரப்பட்ட தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

    இம்மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இம்மாத இறுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கை மாநாடு நடக்கிறது. டிசம்பர் மாதம் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியும் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நூர்முகம்மது, லீமா ரோஸ் ஆகியோர் உடன் இருந்தனர். #gramakrishnan #parliamentelection #bjp #communistparty

    நிர்மலாதேவியுடன் பல்கலைக்கழக அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருந்தது. அவர்களை கைது செய்யாமல், தன் கணவரை முக்கிய குற்றவாளியாக காட்டுவது ஏன்? என பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா பேட்டி அளித்தார். #Nirmaladevi #DevangarCollege
    மதுரை:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் பேராசிரியர் முருகன் மனைவி சுஜா மதுரையில் நிருபர்களிடம் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் எனது கணவர் முருகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனது கணவருக்காகத்தான் மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசியதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பொய் வாக்குமூலம் தயாரித்துள்ளனர்.

    நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சிக்கு வந்தபோது அவர் தங்குவதற்காக அறை ஒதுக்குவது பற்றி கேட்டுள்ளார். அப்போது கூட கருப்பசாமியிடம் சென்று உங்கள் கோரிக்கையை தெரிவிக்கலாம் என்று என் கணவர் கூறியிருக்கிறார்.

    பிரச்சினை பெரிதான போது தனக்கு உதவி செய்யுமாறு நிர்மலாதேவி என் கணவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார். ஆனால் “யாருக்காக மாணவிகளிடம் நீங்கள் பேரம் பேசினீர்களோ. அவர்களிடம் போய் உதவி கேளுங்கள். என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று என் கணவர் கூறிவிட்டார்.

    சுஜா

    என் கணவர் எப்போதுமே நிர்மலாதேவிக்கு போன் செய்து பேசியதே கிடையாது. அப்படி இருக்கும்போது அவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக என் கணவர் மீது போலீசார் கூறியுள்ளது தவறான குற்றச்சாட்டு. நிர்மலாதேவி என் கணவர் பெயரை போலீசில் சொல்லவே இல்லை. பிறகு அவரை ஏன் இதில் தொடர்புபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை?

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு நிர்மலாதேவி வந்தபோது அவரை வரவேற்கவும், வழி அனுப்பவும் பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகாரியின் கார் பயன்படுத்தப்பட்டது. நிர்மலாதேவியுடன் பல்கலைக்கழக அதிகாரிகள் மேலும் சிலருக்கு தொடர்பு இருந்தது. அவர்களையெல்லாம் இந்த வழக்கில் போலீசார் ஏன் கைது செய்யவில்லை?. இந்த வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லாத என் கணவரை முக்கிய குற்றவாளியாக காட்டுவது ஏன்?

    கொலை, கொள்ளை வழக்குகளில் கைதானவர்களுக்கு கூட சில நாட்களிலேயே ஜாமீன் வழங்கப்படுகிறது. ஆனால் எந்த குற்றமும் செய்யாத என் கணவர் கைது செய்யப்பட்டு 7 மாதங்களாகியும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இதற்கு பின்புலமாக சில பிரபலங்கள் இருக்கிறார்கள். இந்த வழக்கில் 3 பேரை மட்டும் சிக்க வைத்துவிட்டு, மற்றவர்களை முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வைத்துவிட்டனர்.

    நிர்மலாதேவியையும், எனது கணவரையும் மிரட்டி வாக்குமூல பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இதில் முழுக்க முழுக்க உள்நோக்கம் இருக்கிறது. எனவே என் கணவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்பதை நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான நிர்மலா தேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். #NirmalaDevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    நிர்மலாதேவி, பல்கலைக் கழக பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது. ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    கருப்பசாமி, முருகன் தரப்பில் வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டுமென்று மனு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு இன்று நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவி, பேராசிரியர், முருகன், கருப்பசாமி ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #NirmalaDevi
    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தக்கோரிய மனுவுக்கு பேராசிரியை நிர்மலாதேவி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது. ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கருப்பசாமி, முருகன் தரப்பில் வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என மனு செய்யப்பட்டது.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி லியாகத் அலி முன்பு நேற்று நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி மற்றும் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.



    இந்த வழக்கில் ஆஜரான நிர்மலாதேவி, முருகன் தரப்பு வக்கீல்கள், கற்பழிப்பு வழக்குகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொடர்பான வழக்குகளைத்தான் ரகசியமாக நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகள் ரகசியமாக நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பொருந்தாது. இதற்கு பல தீர்ப்புகள் முன்னுதாரணமாக உள்ளன. ஆனால், அதற்குரிய ஆதாரங்களை கொண்டு வருவதற்கு காலஅவகாசம் வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர்.

    இதனையடுத்து நீதிபதி லியாகத் அலி, அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    முன்னதாக கோர்ட்டுக்கு கருப்பசாமியை போலீசார் அழைத்து வந்தபோது, “பத்திரிகையில் வந்த செய்திகள் அனைத்தும் தவறானது. அதை யாரும் நம்ப வேண்டாம். இதை கோர்ட்டில் சட்டப்படி சந்திப்பேன்” என கத்தியபடி சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege

    ‘மாணவிகள் வேண்டும் என்று கேட்டது முருகனும், கருப்பசாமியும் தான். எனக்கு யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது’ என்றும் சிபிசிஐடி போலீசில் நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்தார். #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege
    சென்னை:

    கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்புகொண்டு தவறான பாதைக்கு அழைத்த உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் 2-வது பகுதி வெளியிடப்படுகிறது. தொடர்ந்து, நிர்மலா தேவி கூறியதாவது:-

    மார்ச் 13-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தங்குவதற்கு தேவையான உடைமைகளை நான் எடுத்துக்கொண்டு செல்லும்போது, அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு கவர்னர் வருவதை தெரிந்துகொண்டேன். கவர்னர் வருகையையொட்டி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சிக்கு நானும் சென்றிருந்தேன். அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முடித்துவிட்டு திரும்பிய கவர்னர் அறிவியல் கண்காட்சியை திறந்துவைக்க வந்தார்.

    கவர்னரை முதன்முறையாக பார்க்கும் ஆவலில், கவர்னர் ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்துவைத்ததை எனது செல்போனில் வீடியோ எடுத்தேன். போட்டோக்களும் எடுத்துக்கொண்டேன். கவர்னர் வருகையின்போது எடுத்த வீடியோவை கணிதம் படித்த 3-ம் ஆண்டு மாணவிகள் மூவர், முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், எனது மகள் வைசாலி மற்றும் பேராசிரியர்கள் சிலருக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினேன். எனக்கு அதிகமான செல்வாக்கு இருப்பதாக மாணவிகள் நம்பி எனது பேச்சை கேட்பார்கள் என்று நினைத்தேன்.

    மார்ச் 15-ந் தேதி மாலை 4.45 மணிக்கு மாணவிகள் 4 பேரும் ஒன்றாக பேசிவைத்துக்கொண்டு, ஒரே இடத்தில் இருந்தபடி ஒரு மாணவியின் செல்போனில் இருந்து எனக்கு பேசினார்கள். மாணவிகள் 4 பேரும் ஒரே இடத்தில் இருப்பதை உறுதிசெய்து கொண்ட நான், உடனே அந்த மாணவி போனுக்கு தொடர்புகொண்டு, ஸ்பீக்கரில் போடச் சொல்லி 4 மாணவிகளிடமும் ஒரே நேரத்தில் சுமார் 20 நிமிடங்கள் பேசி அவர்களை மூளைச்சலவை செய்தேன். அந்த உரையாடலில் பெரிய உயர் அதிகாரி என்று துணை வேந்தர், பதிவாளர் ஆகிய இருவரையும் எண்ணிக்கொண்டு யூகத்தின் அடிப்படையில் பேசினேன். வாய்ப்பு வருவதாக நான் சொல்லும்போது, பாடக் குறிப்பு தயாரிப்பதை மனதில் வைத்தே பேசினேன்.

    உயர் அதிகாரி என்று நான் சொன்னது, துணை வேந்தர், பதிவாளர் மற்றும் தொலைதூர கல்வி இயக்குனர் ஆகியோருக்கு முருகன் நெருக்கமாக இருந்ததால், முருகன் மூலமாக எதையும் சாதிக்கலாம் என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். அடுத்து, “அவர்கள் கொஞ்சம் எதிர்பார்க்கிறார்கள்” என்று நான் சொன்னது, முருகன், கருப்பசாமி ஆகியோர் மாணவிகள் தான் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதைத்தான் அவ்வாறு சொன்னேன். பணத்தை உங்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்கி போட்டுவிடுவேன் என்றும், மாதாமாதம் சம்பளம் கொடுக்கிற மாதிரி உங்கள் வீட்டுக்கு பணம் வரும் என்று மாணவிகளிடம் நான் கூறியதற்கு, அவர்கள் உடன்பட்டு சம்மதித்தால் அதற்குரிய பணத்தை கொடுப்பதாக குறிப்பிட்டேன். ‘என்கிட்ட கேட்டுக்கொண்டே இருக்காங்க’ என்று கருப்பசாமியைத்தான் சொன்னேன். எனக்கு அவர்கள் சில உறுதியை கொடுத்திருக்கிறார்கள் என்பது, மாணவிகளை பற்றிய விவரம் வெளியே தெரியாது என்பதைக் குறிப்பிட்டு கூறினேன்.

    அடுத்த வாரம் ஒரு முக்கியமான ‘அசைன்மெண்ட்’ இருக்கு என்று நான் சொன்னது, கருப்பசாமி அடுத்த வாரம் சென்னை செல்லும்போது தன்னுடன் கல்லூரி மாணவிகளை அனுப்ப ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டதை மனதில் வைத்து சொன்னேன். ‘கவர்னர் வரும் வீடியோவை அனுப்பியிருந்தேன் இல்ல, அப்ப சில விஷயங்கள் நடந்துச்சு. நடுவில் ஸ்கிரீன் இல்ல, கவர்னர் லெவல் கவர்னர் தாத்தா இல்ல’ என்று நான் கூறியதற்கு காரணம், எதார்த்தமாக கவர்னர் வருகையை நான் வீடியோ எடுத்து அனுப்பிய நிலையில், மாணவிகள் என்னை நம்பி சம்மதிப்பார்கள் என்று கூறினேன். ‘ரொம்ப பெரிய லெவல்ல எனக்கு ஆட்களை தெரியும் என கூறினால்தான் மாணவிகள் சம்மதிப்பார்கள்’ என அவ்வாறு கூறினேன்.

    மாணவிகள் நான் கூறிய விஷயத்துக்கு சம்மதிக்கவில்லை. அதற்கு நான் உடனே பதில்கூற தேவையில்லை என்றும், நிதானமாக தங்களுக்குள் கலந்துபேசி, மார்ச் 17-ந் தேதிக்குள் முடிவு சொல்லுமாறு கூறினேன். அவர்களின் முடிவை தெரிந்துகொள்வதற்காக மாணவிகள் 4 பேருக்கும் தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தேன். அவர்களது பதிலில், அவர்களுக்கு இஷ்டமில்லை என்பதை தெரிந்துகொண்டேன். இதனால், நான் அவர்களிடம் இந்த விஷயம் தொடர்பாக இனி பேசமாட்டேன் என்றும், இந்த விவரத்தினை வெளியாட்கள் யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன்.

    பின்னர், வழக்கம்போல் புத்தாக்கப் பயிற்சிக்கு சென்று வந்தேன். 20-ந் தேதி தேவாங்கர் கல்லூரி செயலாளரிடம் இருந்து எனக்கு கடிதம் ஒன்று ஆள்மூலம் வந்து சேர்ந்தது. அந்தக் கடிதத்தை பார்த்தபோது, புத்தாக்கப் பயிற்சியை முடித்துவிட்டு, உடனடியாக கல்லூரிக்கு வந்து அறிக்கை அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் உடனே செயலாளருக்கு போன் செய்து இதுகுறித்து கேட்டபோது, ‘நாளை கல்லூரிக்கு வாங்க, நேரில் பேசிக்கொள்ளலாம்’ என்று கூறிவிட்டார். உடனே நான் பல்கலைக்கழகத்தில் உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரியை நேரில் சந்தித்து விவரத்தை சொன்னேன். அதற்கு அவர், பயிற்சி முடிந்தால் மட்டுமே அனுப்ப முடியும் என்று கூறியதுடன், இது தொடர்பாக கல்லூரி செயலாளருக்கு கடிதம் ஒன்றை என்னிடம் எழுதிக் கொடுத்து அனுப்பினார்.

    பின்னர், அங்கிருந்து நான் தங்கியிருக்கும் இடத்திற்கு புறப்பட்டபோது, அவருடைய காரில் என்னை ஏற்றிக்கொண்டு நான் தங்கியிருந்த இடத்தில் கொண்டுபோய்விட்டார். அப்போது, அவர் என்னுடைய அறைக்கு வந்தார். நாங்கள் இருவரும் அறையில் முத்தமிட்டுக் கொண்டோம். பின்னர், அங்கிருந்து மீண்டும் அவரது காரில் புறப்பட்டோம். பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகேயுள்ள பஸ் ஸ்டாப்பில் என்னை அவர் இறக்கிவிட்டுச் சென்றார். நான் அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டு அருப்புக்கோட்டைக்கு வந்துவிட்டேன்.

    அன்று இரவே அவர் கொடுத்த கடிதத்தை எடுத்துக்கொண்டு தேவாங்கர் கல்லூரி செயலாளர் வீட்டிற்கு சென்றேன். அப்பொழுது அவரது குடும்பத்தினர் நாளை கல்லூரிக்கு சென்று பார்க்குமாறு கூறிவிட்டனர். மார்ச் 21-ந் தேதி காலை தேவாங்கர் கலை கல்லூரிக்கு சென்றுவிட்டதால் நான் புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. கல்லூரிக்கு சென்று செயலாளரை சந்தித்தபோது, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடும்படியும், செயலாளருக்கு அந்த அதிகாரி கொடுத்த கடிதத்தை தலைமைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு கணிதத்துறைக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.

    நான் செய்முறை தேர்வு நடந்து கொண்டிருந்த கம்ப்யூட்டர் அறைக்கு சென்றுவிட்டேன். மதியம் 12 மணியளவில் அலுவலக உதவியாளர் என்னிடம் வந்து அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். அலுவலக தலைமைப் பொறுப்பாளரை நான் சந்தித்தபோது என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அலுவலக கடிதம் ஒன்றை கொடுத்தார். அதை பிரித்து பார்த்தபோது, என்னை பணியிடை நீக்கம் செய்திருந்தது தெரியவந்தது. என்ன காரணத்திற்காக என்னை பணியிடை நீக்கம் செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எனவே, கல்லூரியில் இருந்த பேராசிரியர்களிடம் இதுகுறித்து கேட்டுப்பார்த்தேன். யாரும் காரணம் சொல்லவில்லை. உடனே நான் செயலாளரை சென்று பார்த்தபோது, கல்லூரி கமிட்டி முன்பு விசாரணை வரும்போது உங்கள் விளக்கத்தை கொடுக்கலாம் என்று கூறினார்.

    அந்த ஆணையில் நான் அருப்புக்கோட்டையை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், என்னுடைய உடைமைகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து எடுத்து வருவதற்காக செயலாளரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு பல்கலைக்கழகம் வந்து பெண் அதிகாரி ஒருவரை சந்தித்து பணியிடை நீக்க ஆணையை காண்பித்தேன். பின்பு இதுசம்பந்தமாக முருகனையும் சந்தித்து உதவி கேட்டேன். அவரும் அனைத்துவித உதவிகளையும் செய்வதாக கூறினார். ஆனால், என்ன காரணத்திற்காக என்னை பணியிடை நீக்கம் செய்தார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது.

    இந்த நிலையில், மனிதவள மேம்பாட்டு அதிகாரியை சந்தித்து அவரிடம் அந்தக் கடிதத்தை காண்பித்தேன். கடிதத்தில், பணியிடை நீக்கத்திற்கான காரணம் குறித்து குறிப்பிடப்படாததால் என்னை தொடர்ந்து பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுமாறு கூறினார். மேலும், கல்லூரி நிர்வாகத்தை சந்தித்து காரணம் மற்றும் விளக்கத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு, அதற்கு ஏற்றார்போல் செயல்படுமாறு எனக்கு அவர் ஆலோசனை வழங்கினார். அடுத்த 2 நாட்கள் அங்கேயே தங்கி பயிற்சியை தொடர்ந்தேன்.

    அப்போது, எனது கணவரின் நண்பருக்கு போன் செய்து, சஸ்பெண்டு செய்யப்பட்ட தகவலை சொன்னேன். அவர் எனது கணவரிடம் போன் செய்து, கல்லூரி செயலாளரிடம் சஸ்பெண்டுக்கான காரணம் குறித்து கேட்கச் சொன்னார். எனது கணவரும் அங்கு சென்று காரணம் கேட்டபோது, கணிதத்துறையை சேர்ந்த மாணவிகள் 4 பேர் ஒரு ஒலிப்பதிவு நாடாவை கொடுத்து என் மீது புகார் மனு அளித்ததால், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கல்லூரி செயலாளர் கூறியுள்ளார். இதை என்னிடம் கணவரின் நண்பர் போன் மூலம் தெரிவித்தார்.

    நான் இந்தத் தகவலை முருகனிடம் போனில் தெரிவித்தபோது, அவர் கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறினார். மனிதவள மேம்பாட்டு அதிகாரி எனக்கு போன் செய்தார். அப்போது, என்னை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை சொன்னேன். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகள் வேண்டும் என்று தொடர்ந்து கேட்டதால்தான், நான் இவ்வாறு பேசி மாட்டிக்கொண்டேன் என்றும் அவரிடம் சொன்னேன். அப்போது அவர் யாருக்காக கேட்டார்கள் என்று என்னிடம் கேட்டார். நான் உயர் அதிகாரிகள் என்று மட்டும் கூறினேன். பிறகு அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டேன்.

    மார்ச் 30-ந் தேதி வக்கீல் பாபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் எனக்கு போன் செய்து திருத்தணி சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கொடைக்கானல் வருவதாகவும், அவருக்காக என்னை அங்கு வரச் சொன்னார். நானும் பாபுவின் ஜூனியர் வக்கீல் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் காரில் புறப்பட்டு கொடைக்கானல் சென்றேன். போகும்போது, ராஜேஷ் என்னிடம் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். கொடைக்கானலில் ஒரு ஓட்டலில் 2 அறைகள் முன்பதிவு செய்திருந்தார்கள். ஓட்டல் பெயர் எனக்கு தெரியவில்லை. அடுத்தநாள் முழுவதும் நான் திருத்தணி சரணவன் மற்றும் பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.

    ஏப்ரல் 1-ந் தேதி என் செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் வாரப் பத்திரிகை ஒன்றில் இருந்து பேசுவதாகவும், மாணவிகளுடன் நான் பேசிய ஆடியோ பதிவு குறித்து பேச வேண்டும் என்றும் கூறினார். இதைக்கேட்டு நான் பதறிப்போய் பல்கலைக்கழக அதிகாரிக்கு போனில் இந்த தகவலை சொன்னேன். அப்போது அவர் என்னிடம், இந்த முருகனுக்கும், கருப்பசாமிக்கும் ‘சப்ளையிங் சர்வீஸ்’ செய்வதே வேலை என்றும், துணைவேந்தர் அல்லது பதிவாளருக்குத்தான் ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கலாம் என்றும் கூறினார்.

    ஏப்ரல் 6-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று நான் முருகனை நேரில் சந்தித்தேன். அப்போது அவருடன் கருப்பசாமி, அவரது நண்பர் ராஜபாண்டியன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் உடன் இருந்தனர். நான் வாரப் பத்திரிகை நிருபர் போன் செய்த விவரத்தை சொன்னேன். அதற்கு முருகன், ‘எதுனாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்’ என்று கூறினார். நான் முருகனிடம் துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் சொல்லி எங்கள் கல்லூரி செயலாளரிடம் பேச சொல்லச் சொன்னேன். அதற்கு முருகன் ‘சொல்கிறேன்’ என்று சொன்னார். மேலும், நான் வேலை பார்த்த கல்லூரியில் இந்த விஷயம் குறித்து அவர் விசாரித்ததாகவும், கல்லூரியில் இருந்து என்னை பணிநீக்கம் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

    நான் ஏற்கனவே கொடைக்கானல் சென்றபோது, வக்கீல் ராஜேஷ் என்பவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக நான் தெரிந்துகொண்டதை முருகனிடம் சொல்லி கல்லூரி மாணவிகளின் விவரம் கேட்டு சொல்லவா என்று கேட்டேன். அதற்கு அவர், தற்போது சூழ்நிலை சரியில்லை என்று கூறி மறுத்துவிட்டார். அதைக்கேட்ட பின்னர், மனிதவள மேம்பாட்டு அதிகாரியை நேரில் சந்தித்தேன். அவரிடம் என்னுடைய பணியிடை நீக்கம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ஏற்கனவே பலமுறை என்னிடம் போனில் கூறியதுபோல, முருகன் மூலமாக பதிவாளர் மற்றும் துணைவேந்தரிடம் சிபாரிசு செய்யச் சொல்லுமாறு மறுபடியும் கூறினார். பின்னர் என்னுடைய காரில் அவரை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விருதுநகர் நோக்கி சென்றபோது, 4 வழிச்சாலையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, இருவரும் காரிலேயே உடலுறவு கொண்டோம். இந்த பிரச்சினை முடிந்தவுடன் நாம் இருவரும் எங்கேயாவது வெளியே செல்லலாம் என்று நான்கூற, அதற்கு அவர் கொடைக்கானல் போகலாம் என்றார். அவரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்டுவிட்டு, அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டேன்.

    ஏப்ரல் 8-ந் தேதி மதியம் நான் மாணவிகளுடன் பேசிய ஆடியோ பதிவு வாரப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த தகவல் எனக்கு தெரியவந்தது. பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போவதால், இதுகுறித்து முருகனிடம் பேசலாம் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செல்ல முடிவெடுத்து பல்கலைக்கழக அதிகாரிக்கு ஏப்ரல் 10-ந் தேதி காலை எஸ்.எம்.எஸ். செய்தேன். அவர் சாயங்காலம் எல்லோரும் கிளம்பிய பிறகு வாருங்கள் என்று எனக்கு போன் செய்து கூறினார். அதன்படி, மாலை 6 மணிக்கு பல்கலைக்கழகம் வந்து முருகனை சந்தித்து பேசினேன். அவருடைய கார் டிரைவர் அப்போது அங்கிருந்தார்.



    முருகன் என்னைப் பார்த்து, “ஏம்மா இங்க வந்தீங்க. பல்கலைக்கழகத்தில் யாராவது பார்த்தா, இப்ப உங்களை எல்லாருக்கும் தெரியுமே” என்று சொல்லி காளவாசல் அருகில் உள்ள ஒரு பேக்கரி கடை அருகே காத்திருக்க சொன்னார். ஆனால், அங்கு கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், நான் அங்கு செல்லாமல், காளவாசல் போகும் வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு காத்திருந்தேன். அப்போது முருகன் எனக்கு போன் செய்து மாட்டுத்தாவணி அருகே வரச்சொன்னார். நான் அங்கு கிளம்பி சென்று கொண்டிருந்தபோது, முருகன் மறுபடியும் போன் செய்து மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அருகேயுள்ள பாலத்திற்கு வரச்சொன்னார். நான் அங்கு சென்றபிறகு முருகனும் அங்கு வந்தார். ‘என்னை எப்படியாவது இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று நான் அவரிடம் சொன்னேன்.

    அதற்கு அவர், ‘கருப்பசாமியால் நீங்களும், நானும் இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். நான் இப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். என்னை இந்த பிரச்சினையில் இழுத்துவிட்டுவிடாதீர்கள். ஏற்கனவே, துணைவேந்தருக்கும், பதிவாளருக்கும் நிறைய பணம் செலவு பண்ணிட்டேன். உங்க பொண்ணுக்கு இந்த வருடம் கல்விக் கட்டணம் கட்ட ரூ.5 லட்சம் தருகிறேன்’ என்று சொன்னார். நான் உடனே ‘இப்ப அவசரமாக ரூ.1 லட்சம் கொடுங்கள்’ என்று கேட்டேன். அவரும் கையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை என்னிடம் கொடுத்தார். வேறு ஏதாவது பல்கலைக்கழகத்தில் எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் சொன்னார்.

    அதன்பிறகு, நான் அங்கேயே நின்றபடி, பல்கலைக்கழக அதிகாரிக்கு போன் செய்து அவரை வரச்சொன்னேன். அவரும் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தார். நான் அவரது காரில் ஏறிக்கொண்டேன். அப்போது, முருகனை சந்தித்தது குறித்தும், அவர் எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருவதாக கூறியதையும் அவரிடம் கூறினேன். பிறகு அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டேன்.

    அங்கு இருந்தபடி, கருப்பசாமியை போனில் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் என்னுடைய எண்ணை ‘பிளாக்’ செய்துவிட்டார். ஏப்ரல் 14-ந் தேதி அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன், பதில் இல்லை. பின்னர், முருகனுக்கு போன் செய்து நிலைமை மோசமாவதை கூறி உதவி செய்யுமாறு கேட்டேன். பிறகு 15 மற்றும் 16-ந் தேதிகளில் முருகனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். ஆனால் பதில் இல்லை. ஏப்ரல் 12-ந் தேதி முருகனின் நண்பர் ராஜபாண்டியனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எஸ்.எம்.எஸ். அனுப்பி, முருகனிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம் பெற்றுத்தருமாறு கூறினேன். அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. 14 மற்றும் 15-ந் தேதிகளில் மாணவிகள் 4 பேருக்கும் தொடர்ச்சியாக எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அவர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை.

    ஏப்ரல் 16-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு எனது தாயார் வசிக்கும் தெருவை சேர்ந்த ஒருவரின் மைத்துனர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மற்றொருவருடன் என்னை வந்து சந்தித்து, 2 சமூக ஆர்வலர்கள் என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார்கள். நானும் சரி என்று அவர்களை சந்திக்க வரச்சொன்னேன். ஆறுமுகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும், அவருடன் மற்றொருவரும் என்னை வந்து சந்தித்து, கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடைபெறுவதாகவும் என்னை கைது செய்ய எந்த நேரத்திலும் போலீஸ் வரலாம் என்றும் கூறினார்கள். மேலும், நான் விருப்பப்பட்டால் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக கூறியதன்பேரில், நான் அதற்கு சரி என்று கூறியதால், அவர்கள் 5 நிமிடத்தில் வருவதாக கூறிச் சென்றார்கள்.

    அவர்கள் வெளியே சென்றவுடன் ராஜாவிடம் இருந்து எனக்கு போன் வந்தது. போலீஸ் என் வீட்டிற்கு வருவதாக தகவல் சொன்னார். நான் உடனே வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு, உள்ளே இருந்தபடி ராஜா மற்றும் ஆறுமுகத்துக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என்னை கைது செய்து அழைத்து சென்றார்.

    நான் சிறையில் இருந்தபோது என்னை யாரும் பார்க்க வரவில்லை. எனக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகிய யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. நான் அவர்களிடம் நேரிலோ, போனிலோ பேசியது இல்லை. அறிவியல் கண்காட்சியை திறந்துவைக்க வந்தபோதுதான் கவர்னரை நான் நேரில் பார்த்தேன். அதற்கு முன்பாக அவரை தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்கிறேன். மேலும், நான் இந்த மாணவிகளை தவிர இதற்கு முன் வேறு எந்த கல்லூரி மாணவியையும் இத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு அழைத்தது இல்லை.

    இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நிர்மலா தேவி கூறியுள்ளார்.  #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege
    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? என்ற தகவல் சிபிசிஐடி போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் வாயிலாக தற்போது வெளியாகியுள்ளது. #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege
    சென்னை:

    கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி (வயது 46) கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    சிறையில் இருந்த நிர்மலா தேவியை ஏப்ரல் 25-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து, விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை நிர்மலா தேவி நீண்ட நெடிய வாக்குமூலமாக அளித்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2003-ம் ஆண்டு எனது கணவர் சென்னையில் பணிபுரிந்தபோது, கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தோம். அப்போது, பக்கத்து வீட்டு பெண்ணுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

    எனது உறவினர்கள், கணவர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கக்கூடாது என்று என்னை கண்டித்தனர். அதன்பிறகு, எனது கணவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் நெருக்கமாக பழக என்னை வற்புறுத்தினார். இதனால், எங்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம்.

    அதன்பிறகு, 2008-ம் ஆண்டு எனது கணவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால், நான் குழந்தைகளுடன் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கினேன். அப்போது, எனது கணவர் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு எனது கணவர் வேலை பார்க்க சென்றார். அவருக்கு அந்த பணி பிடித்திருந்ததால் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.

    நான் பணிபுரிந்த தேவாங்கர் கலை கல்லூரியின் நிர்வாக குழுவில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. 2011-ம் ஆண்டு எனது கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

    நான் அவருடன் நெருக்கமாக பழகினேன். இது எனது கணவருக்கும் தெரியும். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த செல்போனை எனது கணவர் தான் வைத்திருந்தார். அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த தொடர்பால் அவருக்கு பணிபுரிந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், 2016-ம் ஆண்டு எனது கணவர் சரவண பாண்டியன், சவுதி அரேபியாவில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து, அங்கேயே நகராட்சி ஒப்பந்தபணிகளை எடுத்து செய்து வந்தார். அதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடும் பண நெருக்கடி உண்டானது. இந்த நேரத்தில், எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் நான் நெருங்கிப்பழக ஆரம்பித்தேன். அவர் எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்.

    அதன்பிறகு, எனது கணவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து பார்த்தார். அதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால், எனக்கும், எனது கணவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை தீர்த்து வைக்க எனது கணவரின் நண்பர்கள் ராஜூ, ராமச்சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் சிலர் வந்தனர். அவர்களுடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை தெரிந்துகொண்டதால், எனது கல்லூரியில் வேலைபார்ப்பவர்கள் யாரும் என்னுடன் சரியாக பேசுவது கிடையாது. நானும் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன்.

    இந்த சூழ்நிலையில், எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். இதனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி நான் சென்னை வந்துவிட்டேன். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மீண்டும் சந்தித்தேன். திருப்பதி, சென்னை என்று பல இடங்களுக்கு சென்றேன். 24 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.

    அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்து வந்தோம். அதில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ராமநாதனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்து பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, உல்லாசமாக இருந்தோம். அருப்புக்கோட்டையில் நகைக்கடை அதிபர் ஒருவருடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்தேன்.

    2016-ம் ஆண்டு நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது, அங்கு இருந்த அதிகாரியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். நான் 1992-1994-ம் ஆண்டுகளில் பானு சத்திரிய கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்த காலத்தில், வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் எனக்கு தெரியும். அவரது தொலைபேசி எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி பேசினேன். அன்று முதல் அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன்.

    தற்போது, அவர் வெளி கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக வகுப்புகள் நடத்தி வருகிறார். நானும் அவரைப்போல் கவுரவ விரிவுரையாளராக ஆசைப்பட்டு, அவரிடம் உதவி கேட்டேன். இது தொடர்பாக, அடிக்கடி அவருடன் போனில் பேசுவேன். வாட்ஸ்-அப்பிலும் தகவல்களை பரிமாறிக்கொள்வேன். அப்போது, அவர் ஏதாவது கல்லூரிக்கு கவுரவ விரிவுரையாளராக சென்றால், அதை போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்புவார். அவர் 2017-ம் ஆண்டு 2 முறை எனது வீட்டிற்கு வந்து என்னுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

    2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் அதே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள முருகன் என்பவரை தொடர்புகொள்ளுமாறு எனக்கு அவரது செல்போன் எண்ணை கொடுத்தார். நானும் உடனே முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புத்தாக்கப் பயிற்சியில் சேர வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன்.



    நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேவாங்கர் கலைக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை நான் திருத்திக்கொண்டிருந்தபோது முருகனிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அன்று அவர் அருப்புக்கோட்டைக்கு வந்திருப்பதாகவும், என்னை சந்திக்க முடியுமா? என்றும் கேட்டார். நானும் விடைத்தாள் திருத்தி முடித்தவுடன் மாலை 3 மணிக்கு மேல் காந்திநகர் பஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினேன். அவரும் அங்கு எனக்காக காத்திருந்தார். நான் காரில் சென்று அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது, என்னுடன் அவர் உல்லாசமாக இருந்தார்.

    அதன்பிறகு, எனது மகளின் சடங்கு ஆல்பத்தை அவருக்கு காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு உன்னுடைய மகளும் வருவாளா? என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர், உங்கள் சொல்படி கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கின்ற கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கின்றார்களா? என்று என்னிடம் கேட்டார். அவர் கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்கத்தான் கேட்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதற்கு நான் எங்களது கல்லூரி நிலவரம் தற்போது சரியில்லை. இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

    இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்.

    அதன்பிறகு, மார்ச் 7-ந் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ந் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.

    அப்போது முருகன் என்னிடம், “என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று மீண்டும் கேட்டார். “நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்துவைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.

    மார்ச் 12-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.

    அங்கிருந்து புறப்பட்டபோது, நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கருப்பசாமி கூறியதால் அவருக்காக காத்திருந்தேன். அவர் வந்தவுடன் கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அங்கிருந்து புறப்பட்டபோது, கருப்பசாமி என்னிடம், அடுத்தவாரம் சென்னை செல்வதாகவும், அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார். நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார். அதன்பிறகு, அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன்.

    முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் என்னிடம் தொடர்ந்து நேரிலும், போனிலும் கேட்டுக்கொண்டதால், மார்ச் 12-ந் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமாக பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இந்த விஷயத்தை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.

    இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிர்மலா தேவி, தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் தெரிவித்துள்ளார். அது என்னவென்பது, நாளை(புதன்கிழமை) வெளியாகும். #Nirmaladevi
    #NirmaladeviLuredGirls #DevangarCollege
    நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் 35 ஊழியர்கள், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது. #NakkeeranGopal #HighCourt
    சென்னை:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியர் நிர்மலா தேவியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான செய்தி நக்கீரன் பத்திரிகையில் வெளியானது. இந்த செய்தியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இதையடுத்து கவர்னர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று அவரை மாஜிஸ்திரேட்டு விடுவித்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களை கைது செய்யலாம் என்று கருதி, நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் 35 ஊழியர்கள், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது. #NakkeeranGopal #HighCourt
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரை சந்திக்க உள்ளார். அப்போது நக்கீரன் கோபால் கைது தொடர்பாக பேச வாய்ப்பு உள்ளது. #NakkeeranGopal #MKStalin #BanwarilalPurohit
    சென்னை:

    பேராசிரியை நிர்மலாதேவி கைது தொடர்பாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை, கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை போலீசார் இன்று கைது செய்தனர். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நேரம் கிடைத்தால் ஆளுநரிடம் நக்கீரன் கோபால் குறித்து பேசப்படும் என்றார்.


    இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது துணைவேந்தர் நியமன விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நக்கீரன் கோபால் கைது தொடர்பாகவும் பேச வாய்ப்பு உள்ளது. #NakkeeranGopal #MKStalin #BanwarilalPurohit
    நிர்மலாதேவி விவகாரம் வெளியே வந்தால் பல பழம் பெருச்சாளிகள் சிக்குவார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan #NirmalaDevi
    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நிர்மலாதேவி விவகாரம் வெளியே வந்தால் பல பழம் பெருச்சாளிகள் சிக்குவார்கள். இதில் கவர்னரை தொடர்பு படுத்தி பேசுவதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது. அரசு இது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்.

    துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் என்றால் ஒரு விசயத்தை கவர்னர் சொல்லும் போது முழு ஆதாரமும் தெரிந்த பிறகுதான் கூறி இருப்பார். எந்த காலகட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிவிக்கவில்லை. அந்த உண்மைகள் வெளிவந்தால் பலரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

    யாரையும் பின்னால் இருந்து இயக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இயக்க வேண்டும் என்றால் முன்னாள் இருந்தே இயக்குவோம்.


    சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் இதுவரை நாங்கள் தலையிட்டது இல்லை. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்கள் பற்றி போலீசிடம்தான் கேட்க வேண்டும்.

    அ.தி.மு.க. அரசு மீது தி.மு.க. ஊழல் பட்டியல் கொடுப்பதாக கூறுகிறீர்கள். அதோடு அவர்கள் ஆட்சி காலத்தில் நடந்த தவறுகள் பற்றிய புகாரையும் சேர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #NirmalaDevi
    ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். #NakkeeranGopal #TTVDhinakaran
    சென்னை:

    நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பேராசிரியை நிர்மலா தேவி கைது தொடர்பான செய்தியில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


    நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், நக்கீரன் கோபால்  கைது செய்யப்பட்டதை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார். #NakkeeranGopal #TTVDhinakaran
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள நிர்மலாதேவி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். #NirmalaDeviAudioCase #NirmalaDevi
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. முருகன் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் வாதாடுகையில், நிர்மலாதேவி தான் பேசிய ஆடியோவில், மாணவிகளிடம் நீங்கள் சம்மதித்தால் உயர்மட்டத்தில் இருந்து பணம் கிடைக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்கும் இது வேற லெவல் என பேசி உள்ளார்.

    காமராஜர் பல்கலைக் கழகத்தில் உயர் பதவியில் உள்ள துணைவேந்தர் மற்றும் நிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்புடைய மகளிர் மேம்பாட்டு துறை தலைவர் மற்றும் புத்தாக்க பயிற்சி இயக்குனர் கலைச்செல்வன் ஆகியோர் மீது ஏன் விசாரனை நடத்தி வழக்குப்பதிவு செய்யவில்லை.

    சாதாரண நிலையில் உள்ள முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு பொய்யான வழக்கை பதிந்து உள்ளது. இந்த வழக்கினை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரையும் வைத்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறை முடிக்க நினைக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பல்கலை கழகத்தின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

    மேலும், நிர்மலாதேவி, முருகனுக்கு ஜாமீன் வழங்கினால் அவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்க தயாராக உள்ளனர்.

    எனவே முருகனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

    இதற்கு அரசு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் ஏற்று கொண்ட நீதிபதி இளந்திரையன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். #NirmalaDeviAudioCase #NirmalaDevi
    ×