search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலாதேவி விவகாரம் வெளியே வந்தால் பெருச்சாளிகள் சிக்குவார்கள்- பொன். ராதாகிருஷ்ணன்
    X

    நிர்மலாதேவி விவகாரம் வெளியே வந்தால் பெருச்சாளிகள் சிக்குவார்கள்- பொன். ராதாகிருஷ்ணன்

    நிர்மலாதேவி விவகாரம் வெளியே வந்தால் பல பழம் பெருச்சாளிகள் சிக்குவார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan #NirmalaDevi
    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நிர்மலாதேவி விவகாரம் வெளியே வந்தால் பல பழம் பெருச்சாளிகள் சிக்குவார்கள். இதில் கவர்னரை தொடர்பு படுத்தி பேசுவதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது. அரசு இது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்.

    துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் என்றால் ஒரு விசயத்தை கவர்னர் சொல்லும் போது முழு ஆதாரமும் தெரிந்த பிறகுதான் கூறி இருப்பார். எந்த காலகட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிவிக்கவில்லை. அந்த உண்மைகள் வெளிவந்தால் பலரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

    யாரையும் பின்னால் இருந்து இயக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இயக்க வேண்டும் என்றால் முன்னாள் இருந்தே இயக்குவோம்.


    சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் இதுவரை நாங்கள் தலையிட்டது இல்லை. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்கள் பற்றி போலீசிடம்தான் கேட்க வேண்டும்.

    அ.தி.மு.க. அரசு மீது தி.மு.க. ஊழல் பட்டியல் கொடுப்பதாக கூறுகிறீர்கள். அதோடு அவர்கள் ஆட்சி காலத்தில் நடந்த தவறுகள் பற்றிய புகாரையும் சேர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #NirmalaDevi
    Next Story
    ×