search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளுநருடன் இன்று மாலை முக ஸ்டாலின் சந்திப்பு- நக்கீரன் கோபால் கைது குறித்து பேச வாய்ப்பு
    X

    ஆளுநருடன் இன்று மாலை முக ஸ்டாலின் சந்திப்பு- நக்கீரன் கோபால் கைது குறித்து பேச வாய்ப்பு

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரை சந்திக்க உள்ளார். அப்போது நக்கீரன் கோபால் கைது தொடர்பாக பேச வாய்ப்பு உள்ளது. #NakkeeranGopal #MKStalin #BanwarilalPurohit
    சென்னை:

    பேராசிரியை நிர்மலாதேவி கைது தொடர்பாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை, கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை போலீசார் இன்று கைது செய்தனர். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நேரம் கிடைத்தால் ஆளுநரிடம் நக்கீரன் கோபால் குறித்து பேசப்படும் என்றார்.


    இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது துணைவேந்தர் நியமன விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நக்கீரன் கோபால் கைது தொடர்பாகவும் பேச வாய்ப்பு உள்ளது. #NakkeeranGopal #MKStalin #BanwarilalPurohit
    Next Story
    ×