search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murder"

    • கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி காதலி மல்லிகா பேகத்திடம் கிருஷ்ணன் தகராறு செய்தார்.
    • கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணன். இவரது காதலி மல்லிகா பேகம் ரஹமான்சா அப்துல் ரஹ்மான். ஏற்கனவே திருமணமான கிருஷ்ணன், மல்லிகா பேகத்தையும் காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி காதலி மல்லிகா பேகத்திடம் கிருஷ்ணன் தகராறு செய்தார்.

    வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி காதலியை சரமாரியாக தாக்கினார். மதுபோதையில் இருந்த கிருஷ்ணன் காதலியின் தலையை சுவரில் மோத வைத்தும், முகத்தில் அறைந்தும், விலா எலும்பில் குத்தியும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மல்லிகா பேகம் இறந்தார். இதையடுத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த வாரம் கோர்ட்டில் விசாரணையின்போது கிருஷ்ணன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் காதலியை கொன்ற வழக்கில் கிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ருத்ரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ருத்ரேஷ்(வயது28). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை உள்ளது.

    பெயிண்டர் வேலை செய்து வந்த ருத்ரேஷ் சமீப காலமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த கவுதம் என்பவரும் கஞ்சா விற்று வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் கஞ்சா விற்பதில் தொழில் போட்டி இருந்து வந்தது.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இது தொடர்பாக இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கவுதமனை கத்தியால் ருத்ரேஷ் வெட்டினார். இதில் கவுதமனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தில் ருத்ரேஷ் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ருத்ரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

    இந்த பால்குட ஊர்வலத்தில் ருத்ரேசின் தாய் மற்றும் சகோதரியும் பங்கேற்றதால் அதனை காண ருத்ரேஷ் கோவில் எதிரே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் கவுதமன் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் வந்தனர். இதனை கண்டதும் ருத்ரேஷ் ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அறிந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் சுற்றி வளைத்து ருத்ரேசை சரமாரியாக அரிவாளால் தலையில் வெட்டியது.

    இதில் ருத்ரேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் பைக்கில் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதனை பார்த்ததும் பால்குடம் ஏந்தி வந்த பெண்களும், அங்கிருந்த பொதுமக்களும் அலறி அடித்து ஓடினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ருத்ரேசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ருத்ரேஷ் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் காரணமாக பெரியார் நகர் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலையம்பட்டி ஈ.பி. காலனியை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 45).

    இவர் நெல்லை சந்திப்பு பாபுஜி நகர் காட்டுப்பகுதியில் நேற்று மாலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா, சந்திப்பு உதவி கமிஷனர் வெங்கடேசன் உள்ளிட்டவர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிராஜை கொலை செய்த கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த இடத்தில் காளிராஜிக்கு சொந்தமான கார் நின்றது. அந்த காரை திறந்து பார்த்தபோது சில நில பத்திரங்கள், ஆதார் அட்டையின் நகல்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை இருந்தது. அதன் மூலம் நடத்திய விசாரணையில் அவரது மனைவி வளர்மதியின் தொடர்பு எண் கிடைத்தது.

    அதன் மூலமாக அவரிடம் செல்போனில் நடத்திய விசாரணையில், காளிராஜ் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலங்களை வாங்கி விற்பனை செய்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் என்பதும், சம்பவத்தன்று நிலம் வாங்கி விற்பனை செய்வதற்காக நெல்லையில் ஒருவர் அழைத்ததாகவும் அதன் பேரில் அங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து காளிராஜை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? நிலம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களிலும் கொலை கும்பல் உருவங்கள் தெளிவாக தெரியவில்லை.

    இதனால் உதவி போலீஸ் கமிஷனர்கள் செந்தில் குமார், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு காளிராஜை கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட காளிராஜ் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • காயமடைந்த அருண்ராஜ் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • கொலை சம்பவம் லால்குடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னி மங்கலம் மாதாகோயில் தெரு சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது 41). இவர் ஜல்லிக்கட்டு வீரர். இவருக்கு லாரன்ஸ் மேரி என்ற மனைவியும் 15 வயதுக்குட்பட்ட 2 மகன்களும் உள்ளனர். அருண்ராஜ் ஜல்லிக்கட்டு வீரர் என்பதால் ஜல்லிக்கட்டு காளை அடக்குவது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தயாளன் உள்ளிட்டோர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இது தொடர்பான முன் விரோதத்தில் கடந்த பிப்ரவரி மாதம் லால்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது அருண்ராஜை தயாளன் தரப்பினர் தாக்க முயன்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு அருண்ராஜ் வாக்கு செலுத்த சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள பாசன வாய்க்கால் கரையில் மது அருந்தி கொண்டிருந்த தயாளன், ஹானஸ்ட்ராஜ், பிரபு, சங்கர், அலெக்ஸ் உள்ளிட்டோர் அருண் ராஜை வழிமறித்து கட்டையால் தலையில் தாக்கினர்.

    இதில் அருண்ராஜ் பலத்த காயம் அடைந்தார். உடனே தயாளன் உள்ளிட்ட் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயமடைந்த அருண்ராஜ் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அருண்ராஜின் மனைவி லாரன்ஸ் மேரி கொடுத்த புகாரின்பேரில் தயாளன், ஹானஸ்ட்ராஜ், பிரபு, சங்கர், அலெக்ஸ், அலெக்சின் சகோதரர் ஆகிய 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

    இதனிடையே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அருண்ராஜ் உடல்நிலை இன்று காலை மோசமானது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அருண்ராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக லால்குடி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகி றார்கள்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொலை சம்பவம் லால்குடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மனைவி கோமதி (வயது 42). இவர்களது மகள் பவித்ரா(24) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பவித்ரா தனது கணவரை பிரிந்து விஸ்வநாதபுரத்தில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். மேலும் அவர் குத்துக்கல்வலசையில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மாலை கோமதியும், பவித்ராவும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த 2 வாலிபர்கள் பவித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றனர். உடனே கோமதி அதனை பார்த்து அவர்களை தடுக்க முயன்றுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 2 வாலிபர்களும் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினர். அதனை தடுக்க வந்த பவித்ராவுக்கும் கழுத்து, தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். உடனே அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோமதி மற்றும் பவித்ரா ஆகியோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பவித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ரா கடையில் வேலை பார்த்தபோது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பவித்ராவை பிடித்துள்ளது. உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பவித்ராவை அந்த வாலிபர் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும், ஆனால் பவித்ரா அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த வாலிபர் தனது நண்பரை அழைத்து வந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஆற்றில் மிதந்த ஹோலி பிராம்லியின் தலை மற்றும் உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இங்கிலாந்து லிங்கன்னஷயர் பகுதியை சேர்ந்தவர் நிக்கோலஸ் மெட்சன். இவரது மனைவி ஹோலி பிராம்லி (வயது26). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று நிக்கோலஸ் மெட்சன் ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை 200-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் வைத்துள்ளார். அதை சமையல் அறையில் உள்ள குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளார். பின்னர் மனைவியின் உடல் பாகங்கள் இருந்த பிளாஸ்டிக் பைகளை ஆற்றில் வீசியுள்ளார். இதற்கு அவரது நண்பன் ஒருவர் உதவியுள்ளார்.

    ஆற்றில் மிதந்த ஹோலி பிராம்லியின் தலை மற்றும் உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் நிக்கோலஸ் மெட்சனை கைது செய்தனர். அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை கீழ ஈரால் அருகே உள்ள எத்திலப்பன் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் பிரபாகரன் (வயது 28). 108 ஆம்புலன்ஸ் டிரைவர்.

    இவருக்கும் கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த தாவீது என்ற குருசாமி மகள் லாவண்யாவுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு லாவண்யா தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று முன்தினம் கயத்தாறில் கோவில் கொடை விழா நடைபெற்றுள்ளது.இதற்காக பிரபாகரன் மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

    இதனால் அவருக்கும் அவரது மாமனார் குரு சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த குருசாமி மற்றும் அவரது மகன்கள் மாரியப்பன்(30), சோலையப்பன்(28) ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரபாகரனை சரமாரியாக அடித்து தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பிரபாகரன் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ் பெக்டர் தமிழ்செல்வன் ஆகியோர் குருசாமி மற்றும் அவரது மகன்கள் மாரியப்பன், சோலையப்பன் ஆகியோரை கைது செய்த னர்.

    • விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம்.
    • தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லும் தண்டனை மீண்டும் தொடங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தலிபான்களின் உச்ச தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசும் ஆடியோ, அரசு தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பட்டது. அதில், விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம். விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும். தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை. அது இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றார்.

    • ஆத்திரமடைந்த அந்த ஆபாச நடன கும்பல் சூரஜ்பாலை கல், கம்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றால் தாக்கினார்கள்
    • ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் பைரேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 'ஹோலி' கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.இதில் வாலிபர்கள் பேண்ட்-ஐ கழற்றி நிர்வாணமாக நடனம் ஆடினார்கள்.

    இந்த ஆபாச நடனத்தை அப்பகுதியை சேர்ந்த சூரஜ்பால் (வயது 35) என்பவர் தட்டிக் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆபாச நடன கும்பல் சூரஜ்பாலை கல், கம்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றால் தாக்கினார்கள்

    இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆபாச நடனம் ஆடிய தட்டிக்கேட்ட நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர்.
    • கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்ட பிணம் கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக இருந்தது. முகம் அழுகிய நிலையில் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது.

    போலீசார் விசாரணையில் பெண்ணின் உடல் இருந்த சூட்கேஸ் கோவையில் வாங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த சூட்கேசை வாங்கியவர் யார் என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சூட்கேஸ் வாங்கிய நபர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பறவைக்கோட்டை பகுதியை சேர்ந்த நட்ராஜ் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

    நட்ராஜூக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அவர் கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அதே நாட்டில் நட்ராஜ் பணிபுரிந்த பகுதியில் தேனி மாவட்டம் முத்துலாபுரத்தை சேர்ந்த சுபலட்சுமியும் (33) வேலை பார்த்து வந்துள்ளார். சுபலட்சுமிக்கு கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவரிடம் விவாகரத்து பெற்று இருந்ததாக தெரிகிறது.

    இருவரும் தமிழர்கள் என்ற முறையில் அறிமுகமான நட்பு நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்ததுடன் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். அதன்பிறகு கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

    கள்ளக்காதலி சுபலட்சுமி பெயரை நட்ராஜ் கையில் பச்சை குத்தி உள்ளார். கோவையில் கணவன்-மனைவியாக கடந்த ஒரு ஆண்டாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு இடையே கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த நட்ராஜ் அங்கு கிடந்த கம்பியை எடுத்து சுபலட்சுமியை தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுபலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    உடனே தன்னுடைய நண்பர் கனிவளவனை வீட்டுக்கு அழைத்து நட்ராஜ் நடந்த விவரங்களை கூறியுள்ளார். அவர் உதவியுடன் சூட்கேஸ் ஒன்றை வாங்கி அதில் சுபலட்சுமி உடலை அடைத்துள்ளனர்.

    பின்னர் வாடகை கார் ஒன்றை இவர்களே எடுத்தனர். டிரைவர் வேண்டாம் என்று கூறி விட்டு நட்ராஜூம், கனிவளவனும் பெண்ணின் உடல் இருந்த சூட்கேசை காரில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளனர். உடலை எங்கு வீசினால் கண்டுபிடிக்க முடியாது என்று இருவரும் திட்டமிட்டனர். அதன்படி காரில் 2 நாட்களாக சுபலட்சுமி உடலுடன் சுற்றி திரிந்துள்ளனர்.

    அப்போதுதான் ஏற்காடு மலைப்பகுதிக்கு மனைவி, குழந்தைகளுடன் நட்ராஜ் சுற்றுலா வந்தது நினைவுக்கு வந்தது. அங்கு சென்று சுபலட்சுமி உடலை வீசினால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்துள்ளார். அதன்படி கடந்த 1-ந் தேதி ஏற்காட்டுக்கு வந்துள்ளனர். அன்று இரவு 40 அடி மலைப்பாதை பகுதியில் சுபலட்சுமி உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை வீசி விட்டு சென்றுள்ளனர்.

    போலீசுக்கு பயந்து ஒரு வாரம் சொந்த ஊரான மன்னார்குடியில் இருந்த நட்ராஜ் அதன்பிறகு கோவையில் சுபலட்சுமியுடன் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வந்ததும், அங்கிருந்து வேலைக்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    உடனே போலீசார் நட்ராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் இருவரையும் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • துர்க்கை ஈஸ்வரனின் உடல் புதைத்த இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
    • டாக்டர்கள் குழுவினர் அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து என்பவரது மகன் துர்க்கை ஈஸ்வரன் (வயது 32). விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் கைக்குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டிலிருந்து போன துர்க்கை ஈஸ்வரன் 17-ந் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.ஆனால் அதிக மது போதையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கருதிய குடும்பத்தினர் அவரது உடலை புதைத்து விட்டனர்.

    இந்தநிலையில் துர்க்கை ஈஸ்வரனின் இறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக விசாரணை மேற்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் சிலர் துர்க்கை ஈஸ்வரனின் மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    உடல் தோண்டியெடுப்பு இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரபு அளித்த புகாரின் பேரில் துர்க்கை ஈஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அதே ஊரை சேர்ந்த ராமேஸ்வரன் (45) என்பவர் முன்விரோதம் காரணமாக துர்க்கை ஈஸ்வரனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் துர்க்கை ஈஸ்வரனின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி துர்க்கை ஈஸ்வரனின் உடல் புதைத்த இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

    பின்னர் டாக்டர்கள் குழுவினர் அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றதும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏரந்தை பகுதியை சேர்ந்தவர் தேவபாலன் (வயது 50). லாரி டிரைவர்.

    இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் ஓடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் தேவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட தேவபாலன் மீது கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு இருந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுதலையானதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று இறந்துள்ளார். அந்த வீட்டிற்கு துரைபாண்டியின் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். இந்நிலையில் தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பழைய வழக்கு தொடர்பான முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக தேவபாலன் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் தகராறு காரணமாக தேவபாலன் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×