search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லால் அடித்து கொலை"

    • ஆத்திரமடைந்த அந்த ஆபாச நடன கும்பல் சூரஜ்பாலை கல், கம்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றால் தாக்கினார்கள்
    • ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் பைரேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 'ஹோலி' கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.இதில் வாலிபர்கள் பேண்ட்-ஐ கழற்றி நிர்வாணமாக நடனம் ஆடினார்கள்.

    இந்த ஆபாச நடனத்தை அப்பகுதியை சேர்ந்த சூரஜ்பால் (வயது 35) என்பவர் தட்டிக் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆபாச நடன கும்பல் சூரஜ்பாலை கல், கம்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றால் தாக்கினார்கள்

    இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆபாச நடனம் ஆடிய தட்டிக்கேட்ட நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒருவர் கைது
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள சிங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47) இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கன்னியம்மாள், இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள், உள்ளனர்.அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, (45).

    வெங்கடேசன், ராஜா, இருவருமே கட்டிட தொழிலாளிகள், சக தொழிலாளியான இவர்களுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 27ஆம் தேதி இரவு வெங்கடேசன் சிங்கமுண்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மறைந்திருந்த ராஜா, கல்லால் வெங்கடேசனை, தலையில் தாக்கி உள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசனை, அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன், ாரிதபமாக இறந்தார். இது குறித்து தேசூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

    ×