என் மலர்

    நீங்கள் தேடியது "farmer murder"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணேசனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
    • பழிக்குப்பழியாக கணேசன் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் கணேசன் (வயது 38), விவசாயி. இவர் நேற்று முன்தினம் சேரன்மகாதேவியில் கோர்ட்டு விசாரணைக்கு வந்துவிட்டு, மாலையில் தனது மோட்டார் சைக்கிளில் தருவைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

    வெட்டிக்கொலை

    அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியம்மாள்(56) என்பவர் கடந்த 24-8-2022 அன்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கணேசனை போலீசார் கைது செய்தனர். அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தேடுதல் வேட்டை

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுதொடர்பாக கணேசனின் பெற்றோர் அளித்துள்ள மனுவில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 5 நபர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடிச்சென்ற போது அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

    இதனால் அந்த நபர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் அடைந்து தேடி வருகின்றனர். அதேநேரத்தில் அவர்களது செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளதால் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்போது தக்காளியின் விலை உச்சத்தை எட்டி உள்ளது.
    • நீண்ட நேரம் ஆகியும் மதுகர் ரெட்டி வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் தக்காளி தோட்டத்திற்கு வந்து பார்த்தனர்.

    திருப்பதி:

    தக்காளி விலை கிலோ ரூ.150 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் தக்காளி தட்டுப்பாடு காரணமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி மதிப்பு எங்கேயோ சென்று விட்டது.

    ஆந்திராவில் கடந்த வாரம் தக்காளி விற்பனை செய்து விட்டு பணத்துடன் வீடு திரும்பிய விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் மற்றொரு விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளார்.

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பெட்ட திப்பா சமுத்திரத்தை சேர்ந்தவர் மதுகர் ரெட்டி. விவசாயி.

    இவருக்கு ஊருக்கு வெளியே விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு உள்ளார்.

    தற்போது தக்காளியின் விலை உச்சத்தை எட்டி உள்ளதால் கொள்ளையர்கள் தக்காளியை பறித்து சென்று விடுவார்கள் என எண்ணி தினமும் தக்காளி தோட்டத்திற்கு பாதுகாப்பாக காவல் இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு மதுகர் ரெட்டி தக்காளி தோட்டத்திற்கு காவலுக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் தக்காளிகளை பறித்தனர்.

    இதனைக் கண்ட மதுகர் ரெட்டி தக்காளி பறிக்கும் நபர்களை விரட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மதுகர் ரெட்டியின் கழுத்தை நெரித்தனர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து தோட்டத்தில் இருந்து தக்காளிகளை கும்பல் பறித்து சென்றனர்.

    நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் மதுகர் ரெட்டி வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் தக்காளி தோட்டத்திற்கு வந்து பார்த்தனர்.

    அப்போது மதுகர் ரெட்டி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மதுகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அருணாசலம் கோர்ட்டில் ஆஜராகி முருகனுக்கு எதிராக சாட்சி கூற தயாராகி வந்துள்ளார்.
    • ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் மேலூரை சேர்ந்தவர் அருணாசலம் என்ற கக்கன் (வயது 60). விவசாயி. இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

    அதே ஊரை சேர்ந்தவர் பிச்சைக்கண்னு மகன் முருகன். கடந்த 2021-ம் ஆண்டு தளபதிசமுத்திரம் குளத்தில் மீன் குத்தகை எடுப்பதில், அருணாசலம் தரப்பினருக்கும், முருகன் தரப்பினருக்கும் போட்டி ஏற்பட்டது.பின்னர் அருணாசலத்தின் தரப்பினருக்கு மீன் குத்தகை ஏலம் வழங்கப்பட்டது.

    தனது தரப்பினருக்கு மீன் குத்தகை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த முருகனுக்கு, அருணாசலத்தின் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு நாங்குநேரி கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் அருணாசலம், முருகனுக்கு எதிராக சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து கோர்ட்டில் முருகனுக்கு எதிராக அருணாசலம் சாட்சி சொல்ல முடிவு செய்திருந்தார். இந்நிலையில் முருகன், அருணாசலத்திடம் தனக்கு எதிராக சாட்சி கூற கூடாது என்று கூறியுள்ளார்.

    மேலும் உறவினர்கள் மூலம் சமரசமும் செய்துள்ளார். ஆனால் அதற்கு அருணாசலம் மறுத்து விட்டார். மேலும் கோர்ட்டில் முருகனுக்கு எதிராக சாட்சி கூறுவேன் என்று அவர் உறுதியாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

    அந்த வழக்கு சம்பந்தமான விசாரணை நாங்குநேரி கோர்ட்டில் இன்று நடைபெறவிருந்தது. அருணாசலம் கோர்ட்டில் ஆஜராகி முருகனுக்கு எதிராக சாட்சி கூற தயாராகி வந்துள்ளார். இதற்கிடையே நேற்று இரவில் அருணாசலம் அதே ஊரில் உள்ள தனது மகள் முத்துசெல்வி வீட்டின் முன் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த முருகன் உள்பட 5 பேர் சேர்ந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் படுகாயங்களுடன், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி ஏர்வாடி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாசலம் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

    இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பலத்த காயம் அடைந்த தண்டபாணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
    • அலங்கியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை ரோடு தளவாய்பட்டினம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55) விவசாய தொழிலாளி. இவரது மகன் காளிதாஸ் (29).

    காளிதாசுக்கு திருமணமான நிலையில் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் தண்டபாணி வேலைக்கு செல்லுமாறு மகனை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று அறுவடை பணியை முடித்துக்கொண்டு தண்டபாணி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் படுத்திருந்த காளிதாசுக்கும் தண்டபாணிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மகனை கண்டிக்க இரும்பு கம்பியை எடுத்து மிரட்டிய போது அந்த இரும்பு கம்பியை பிடுங்கிய காளிதாஸ், தந்தை என்றும் பாராமல் தண்டபாணியின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த தண்டபாணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தண்டபாணி இறந்தார்.

    இதுகுறித்து அலங்கியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான காளிதாசை தேடி வருகின்றனர். தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெருமாள் தனக்கு விற்ற நிலத்தை புறம்போக்கு நிலம் என்று கூறியதாலும், வீடு கட்டவிடாமல் தடுத்ததாலும் மதன் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கினார்.
    • பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). விவசாயி. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

    பெருமாள் சில வருடங்களாக தனியாக வசித்து வந்தார். பெருமாள் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை உத்திரமேரூர் மருதம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதன் என்பவருக்கு விற்றார்.

    மதனின் மனைவி கோளிவாக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த நிலத்தில் வீடு கட்ட மதன் முடிவு செய்தார். இதற்காக கல், மண் போன்றவற்றை அங்கு இறக்கினார்.

    இன்று காலையில் அங்கு வந்த பெருமாள், இது புறம்போக்கு நிலம். இதில் வீடு கட்டக்கூடாது என்று மதனிடம் கூறினார்.

    பெருமாள் தனக்கு விற்ற நிலத்தை அவரே புறம்போக்கு நிலம் என்று கூறியதாலும், வீடு கட்டவிடாமல் தடுத்ததாலும் மதன் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கினார்.

    இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், டி.எஸ்.பி. ஜூலியர் சீசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மைதுகனியின் வயலுக்கு அருகே புளியங்குடியை சேர்ந்த சகோதரரான 2 பேருக்கு சொந்தமான வயல் உள்ளது.
    • மைதுகனியை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நேரத்தில் அவர்கள் 2 பேரும் வெட்டிக்கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு யாரேனும் இதனை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணி அம்பேத்கார் 1-வது தெருவை சேர்ந்தவர் மைது கனி(வயது 46). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    புளியங்குடி நவசாலை ஊருக்கு சற்று தொலைவில் உள்ள காடுவெட்டி குளத்திற்கு அருகே ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மைதுகனி குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார்.

    நேற்று மாலை மைதுகனி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அவரை தேடி வயலுக்கு சென்றனர். அப்போது வயல் பாதையில் மைதுகனி வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த மைதுகனி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மைதுகனியை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மைதுகனியின் வயலுக்கு அருகே புளியங்குடியை சேர்ந்த சகோதரரான 2 பேருக்கு சொந்தமான வயல் உள்ளது.

    இவர்களுக்கும், மைதுகனிக்கும் வயலில் பயிர் வைப்பது சம்பந்தமாக இடப்பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சமீபத்தில் மைதுகனி வளர்த்து வந்த நாய், அந்த தரப்பினரின் கோழிகளை கடித்துக்கொன்றதாகவும், அது தொடர்பாகவும் 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மைதுகனியை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நேரத்தில் அவர்கள் 2 பேரும் வெட்டிக்கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு யாரேனும் இதனை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கள்ளக்காதலை கண்டித்ததால் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கருமாநாயக்கனூரை சேர்ந்தவர் வையப்பன்(50) இவர் அதேபகுதிைய சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து அங்கேயே தங்கி வந்தார். அப்போது முத்து லட்சுமிக்கும், வையப்ப னுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    இதனை முத்துலட்சுமி யின் சம்பந்தியான சக்திவேல் என்பவர் கண்டித்துள்ளார். இருந்தபோதும் வையப்பன் முத்துலட்சுமியுடன் தொடர்ந்து பழகி வந்தார். நேற்று வீட்டிற்குள் தூங்கிகொண்டிருந்த வையப்பனை சக்திவேல் சுத்தியால் சரமாரியாக தாக்கினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே முத்துலட்சுமி அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி ச்சென்றார். ஆனால் வழியி லேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சந்திரனை சரமாரியாக வெட்டியது.
    • இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் மதுரா பக்ரிமணியம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 60). விவசாயி. இவர் இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சந்திரனை சுற்றிவளைத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சந்திரனை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சந்திரன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சந்திரனை கொலை செய்த நபர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செஞ்சியில் பரபரப்பு நிலத் தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    • ஏலம் முறையினால் நிலம் கைவிட்டு மாறிப்போனதால் ஆத்திரத்தில் இருந்த தர்மராஜுக்கும் அரங்க நாதனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குறிஞ்சிப்பை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 70) விவசாயி அதே பகுதியில் பட்டாபிராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2.77 ஏக்கர் நிலத்தை ஆண்டு தோறும் டெண்டர் முறையில் ஏலம் விடுவார்கள். தற்போது டெண்டர் முறையில் விடப்பட்ட அந்த நிலத்தை தர்மராஜ் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மறு ஏலம் விடப்பட்டது. அந்த மறு ஏலத்தில் அதே பகுதியை சேர்ந்த அரங்கநாதன் என்பவர் அதிகமான தொகைக்கு கேட்டதால் அவருக்கு நிலம் டெண்டர் முறையில் விடப்பட்டது. 

    இன்று காலை அரங்க நாதன் அந்த நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கு தர்மராஜ் இருந்தார். நடைபெற்ற டெண்டர் ஏலம் முறையினால் நிலம் கைவிட்டு மாறிப்போனதால் ஆத்திரத்தில் இருந்த தர்மராஜுக்கும் அரங்க நாதனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில் அரங்கநாதன் தர்மராஜை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே தர்மராஜ் இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் டி.எஸ்பி. பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த தர்மராஜின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரங்கநாதனை தேடி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொலை நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
    • முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மறவபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 65). விவசாயி. இவர் நேற்று இரவு தனது தோட்டத்திற்கு சென்றார். அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. மழை பெய்ததால் அவர் வரவில்லை என்று குடும்பத்தினர் அங்கு சென்று பார்க்கவில்லை.

    இந்த நிலையில் நல்லதம்பி இன்று காலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி நல்லதம்பியின் மகன், பாலமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட நல்லதம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மோப்பநாய் மூலம் துப்புதுலக்கப்பட்டது.

    இந்த கொலை எதற்காக நடைபெற்றது? என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பாலமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print