search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடியில் இடப்பிரச்சினையில் விவசாயி வெட்டிக்கொலை
    X

    புளியங்குடியில் இடப்பிரச்சினையில் விவசாயி வெட்டிக்கொலை

    • மைதுகனியின் வயலுக்கு அருகே புளியங்குடியை சேர்ந்த சகோதரரான 2 பேருக்கு சொந்தமான வயல் உள்ளது.
    • மைதுகனியை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நேரத்தில் அவர்கள் 2 பேரும் வெட்டிக்கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு யாரேனும் இதனை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணி அம்பேத்கார் 1-வது தெருவை சேர்ந்தவர் மைது கனி(வயது 46). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    புளியங்குடி நவசாலை ஊருக்கு சற்று தொலைவில் உள்ள காடுவெட்டி குளத்திற்கு அருகே ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மைதுகனி குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார்.

    நேற்று மாலை மைதுகனி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அவரை தேடி வயலுக்கு சென்றனர். அப்போது வயல் பாதையில் மைதுகனி வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த மைதுகனி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மைதுகனியை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மைதுகனியின் வயலுக்கு அருகே புளியங்குடியை சேர்ந்த சகோதரரான 2 பேருக்கு சொந்தமான வயல் உள்ளது.

    இவர்களுக்கும், மைதுகனிக்கும் வயலில் பயிர் வைப்பது சம்பந்தமாக இடப்பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சமீபத்தில் மைதுகனி வளர்த்து வந்த நாய், அந்த தரப்பினரின் கோழிகளை கடித்துக்கொன்றதாகவும், அது தொடர்பாகவும் 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மைதுகனியை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நேரத்தில் அவர்கள் 2 பேரும் வெட்டிக்கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு யாரேனும் இதனை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×