search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Thangamani"

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பெற்றால் தான் அரசியலை விட்டே விலக தயார் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். #SenthilBalaji #ADMK
    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய அ.தி.மு.க. அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு இன்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:-

    முட்டிப்போட்டு முதல்வரான எடப்பாடி பழனிசாமி தற்போது வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார். நன்றி விசுவாசத்திற்கும், விருந்து உபசரணைக்கும் பெயர் போன பகுதி மேற்கு மண்டலம். ஆனால் சசிகலா, தினகரனால் முதல்வரான எடப்பாடி பழனிசாமி அவர்களை கட்சியில் இருந்து நீக்கி துரோகம் செய்து அந்த மண்ணுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார்.

    சசிகலா, டி.டி.வி. துணையில்லாமல் நாங்கள் அமைச்சர் பதவிக்கு வந்தோம் என்று தங்கமணியும், வேலுமணியும் கோவிலில் சாமி முன்பு சத்தியம் செய்யட்டும். நான் சூடனை அணைத்து சத்தியம் செய்கிறேன். 100 தடவை சசிகலாவின் காலில் விழுந்தவர் தங்கமணி. 1½ கோடி உறுப்பினர்கள் உள்ள அ.தி.மு.க.வில் இப்போது 40 முதல் 50 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.


    தமிழக மக்களுக்கு பிடிக்காத திட்டங்களை திணிக்கும் மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு துணை நிற்கிறது. வருகிற 8-ந்தேதி வேலாயுதம்பாளையத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று பேசுகிறார். அதன்பிறகு ஓரிரு நாட்களில் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்து விடும்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பெற்றால் நான் அரசியலை விட்டே விலக தயார்.

    இவ்வாறு அவர் பேசினார். #SenthilBalaji #ADMK
    ஒற்றுமையாக உள்ள முதல்வர் மற்றும் துணை முதல்வரை பிரித்தாலும் சூழ்ச்சியில் தினகரன் ஈடுபட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். #OPS #EPS #TTVDhinakaran #Thangamani
    நாமக்கல்:

    நாமக்கல்லில் இன்று அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் உதய் திட்டத்தில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக இருக்கிற கோரிக்கையை நீக்கப்பட்டபிறகு தான் அந்த ஒப்பந்தத்தில் இணைந்தோம். எனவே, இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

    மழை தொடர்பாக விடப்பட்ட ரெட் அலர்ட் சம்பந்தமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து துறை சார்பில் கூட்டம் நடத்தினார்.

    அதுபோல் மின்வாரியம் சார்பில் எனது தலைமையில் தலைமை செயலகத்தில் நாளை கூட்டம் நடைபெறுகிறது.

    டி.டி.வி.தினகரன் விரக்தியின் விளிப்பிற்கே சென்று விட்டார். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைதேர்தலில் அவருடைய 20 ரூபாய் டோக்கன் செல்லாது.


    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எங்களிடம் தினகரன் தான் கட்சியை அ.தி.மு.க.வுடன் இணைப்பதாக தூதுவிட்டார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

    நேரம் வரும்போது தினகரன் தூதுவிட்டதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். அ.தி.மு.க.ஏற்றுக் கொள்ளாததால் விரத்தியின் விளிம்பில் தங்க தமிழ்ச்செல்வன் உளறுகிறார். ஓற்றுமையாக உள்ள முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை பிரித்தாளும் சூழ்ச்சியை தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மூலமாக மேற்கொண்டார்.

    ஆட்சியில் இல்லாத போதும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வெளியே ஓட்டல் கட்டி வரும் அவர் தான் ஊழல் செய்துள்ளார். இப்போது ஊழல், ஊழல் என்று சொல்கிறார். ஊழலுக்கு தலைவரே அவர் தான்.

    மு.க.ஸ்டாலின், நாங்கள் காற்றாலையில் முறைகேடு செய்வதாக கூறி வருகிறார். நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. இது சம்பந்தமாக அவர்கள் வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Thangamani #OPanneerSelvam #TTVDhinakaran
    தற்போது நடைபெறும் ஆட்சியை கட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி. தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளனர் என்று அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டித்து பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.

    கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    காலம் முழுவதும் கருணாநிதியை எதிரியாக கொண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது தான் அ.தி.மு.க. ஆகும். அதன் வழியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தற்போது சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றனர்.

    ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்துகொண்டு இருந்தபோது, அவர் எப்படியும் சிறைக்கு சென்றுவிடுவார், நாம் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேசியுள்ளனர். இதற்கான ஆதாரம் ஜெயலலிதாவின் கையில் கிடைத்ததை அடுத்து, அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களை கட்சியை விட்டே ஒதுக்கி வைத்தார்.

    கருணாநிதி ஆட்சியில், 1996-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் லண்டனில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் சொத்து வாங்கினார். அதுகுறித்து வழக்கில் ஜெயலலிதாவும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து டி.டி.வி.தினகரன் கருணாநிதியை சந்தித்து, இந்த வழக்கில் இருந்து என்னை மட்டும் விடுவித்துவிட்டு, வழக்கை வேகமாக முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

    இதையடுத்து கருணாநிதிதான் அந்த வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரனை விடுவித்து, ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார். இதனால் கருணாநிதியை விட டி.டி.வி.தினகரன் தான் ஜெயலலிதாவுக்கு துரோகி ஆனார்.

    தற்போது அவர் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து, இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறார். அ.தி.மு.க.வின் எதிரியான தி.மு.க.வுடன், டி.டி.வி.தினகரன் உடன்படிக்கை போட்டு உள்ளார். இதனால் அவர் பக்கம் சென்றவர்கள் இந்த உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

    ஜெயலலிதாவுக்கு இந்த நிலை ஏற்பட காரணம் முழுவதும் டி.டி.வி.தினகரன் தான். அவர் எங்களை பார்த்து ஊழல்வாதி என்கிறார். ஊழலின் தலைவரே டி.டி.வி.தினகரன் தான்.



    கட்சியில் 98 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். டி.டி.வி.தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு, தேர்தலை சந்தித்து இருந்தால் அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்று வைத்து கொள்ளலாம். தற்போது நடைபெறும் ஆட்சியை கட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி. தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterThangamani
    அமைச்சர் தங்கமணி பற்றி அவதூறு பரப்பியதாக கைதான முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாமக்கல்:

    அமைச்சர் தங்கமணியை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ.சரஸ்வதி வாட்ஸ்-அப்பில் அவதூறாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி சரஸ்வதியை கைது செய்தனர்.

    இவர் மீது 505 (பி) பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுதல், 153- ஆத்திரம், கோபம் ஏற்படும் வகையில் தகவல் பரப்புதல், 194(பி)-அசிங்கமாக திட்டுதல், 504- கோபமாக பொதுமக்களுக்கு பீதி ஏற்படும் வகையில் பேசுதல், 506(1)-கொலை மிரட்டல் விடுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி கைது செய்யப்பட்டதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, நீதிமன்றத்தை அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜாவையும், தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய கருணாசையும் கைது செய்ய முடியாத நிலையில், வாட்ஸ்-அப்பில் பொய்யான தகவல் பரப்பியதாக கூறி பொய் வழக்கு போட்டு தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இது குறித்து தலைமையிடத்தில் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    1 வாரத்தில் என் மீது வழக்கு தொடராவிட்டால் அமைச்சர் தங்கமணி மீது வழக்கு தொடருவேன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TNMinister #Thangamani #DMK #MKStalin

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக மின்சார வாரியம் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்து இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நான் கூறினேன்.

    இதற்கு அமைச்சர் தங்கமணி அளித்துள்ள பதில் தெளிவாக இல்லை. இதற்காக என்மீது வழக்கு தொடருவேன் என்றும் கூறியுள்ளார்.

     


    இதேபோல் குட்கா ஊழலை முதன் முதலில் நான் வெளிக்கொண்டு வந்தேன். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என் மீது வழக்கு தொடரப்போவதாக கூறினார். ஆனால் இதுவரை அவர் என் மீது எந்த வழக்கும் தொடரவில்லை. ஆனால் நான்தான் அவர் மீது வழக்கு தொடர்ந்தேன்.

    இப்போது அமைச்சர் தங்கமணி என்மீது வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார். காற்றாலை மின்சார கொள்முதலில் நடந்த ஊழலுக்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். எனவே அமைச்சர் தங்கமணி என்மீது வழக்கு தொடர தயாரா?

    ஒருவாரம் வரை காத்திருக்கிறேன், அவர் என் மீது வழக்கு தொடரட்டும். இல்லையெனில் நான் அவர் மீது வழக்கு தொடருவேன். அமைச்சர் தங்கமணி மீது நான் கூறிய புகார் ஆதாரப்பூர்வமானது. அறிக்கையில் நான் கூறிய விவரங்களுக்கு அமைச்சர் தெளிவாக பதில் அளிக்கவில்லை.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #TNMinister #Thangamani #DMK #MKStalin

    காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #TNMinister #Thangamani #DMK #MKStalin
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது தூத்துக்குடி அனல் மின்நிலையம். இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்கு இயங்கிவந்த இரு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக மின் வாரிய அமைச்சர் தங்கமணி இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அவர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து அவர் அனல்மின் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மின் உற்பத்தி தடைபடாமல் தொடர்ந்து நடைபெற உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தற்போது இங்கு 1 லட்சத்து 2 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. வருகிற 25‍-ந்தேதி ஒரு கப்பலில் நிலக்கரி வர உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது.

    தமிழகத்தில் தற்போதைய சூழலில் காற்றாலைகள் மூலமாக 3500 மெகாவாட், சூரிய சக்தி மூலமாக 1500 மெகாவாட், தண்ணீர் மூலம் 2500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மின் உற்பத்தி அதிகமாக இருப்பதாலேயே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. நிலக்கரி தட்டுப்பாடு என்பது தவறான தகவல்.

    தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் உடன்குடி, எண்ணூர், வடசென்னை ஆகிய இடங்களில் புதிய அனல் மின்நிலையங்கள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கடல் நீரை சுத்தம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மழை நீரை சேகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


    காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது. தனியார் நிறுவனம்தான் அரசுக்கு ரூ9.17 கோடி செலுத்தவேண்டியுள்ளது.

    பாளையங்கோட்டையில் 50 கிலோவாட் மின்சக்தி திறன் கொண்ட துணை மின் நிலையத்தை 80 கிலோவாட் சக்தி கொண்டதாக மாற்ற திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்குவதாக இருந்தது. அதற்காகவே மின்தடை அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Thangamani #DMK #MKStalin

    மின்சார துறையில் நடந்த ஊழலை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளேன் என் மீது வழக்கு போட தங்கமணி தயாராக உள்ளாரா? என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #DMK #Thangamani
    சென்னை:

    தமிழக மின்சார துறையில் காற்றாலை மின்சார உற்பத்தில் என்ற பெயரில் ஊழல் நடந்திருப்பதாக கூறி திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதனை மறுத்த அமைச்சர் தங்கமணி பொய்யான குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறினார்.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், “காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல் புகாரில் அமைச்சர் தங்கமணி தெளிவாக பதிலளிக்கவில்லை. குட்கா விவகாரத்தில் வழக்கு தொடர்வதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை வழக்கு தொடரவில்லை. ஆதாரத்துடன் ஊழலை வெளிப்படுத்தியுள்ளேன். என் மீது வழக்கு தொடர தங்கமணி தயாராக உள்ளாரா?” என கூறினார்.

    மேலும், தங்கமணி வழக்கு போட வில்லை என்றால், அவர் மீது நான் வழக்கு போடுவேன் எனவும் ஸ்டாலின் கூறினார். 
    தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அமைச்சர் தங்கமணி அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மின்வாரிய அதிகாரிகள் உடன் சென்றனர். #TNMinister #Thangamani
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது தூத்துக்குடி அனல் மின்நிலையம். இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தபப்ட்டது.

    இதனால் தற்போது 860 முதல் 890 மெகாவாட் வரையே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இதனிடையே 2-வது யூனிட் நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தெரியவந்தது.

    ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதை மறுத்தனர். 6 நாட்கள் வரை மின்உற்பத்தி செய்வதற்கு போதுமான நிலக்கரி உள்ளது. இதனால் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை’ என அதிகாரிகள் கூறினர்.

    அனல்மின் நிலையத்தில் நிலக்கரி குவித்து வைக்கப்பட்டுள்ள காட்சி.

    இந்த நிலையில் தமிழக மின்வாரிய அமைச்சர் தங்கமணி இன்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அவர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மின்வாரிய அதிகாரிகள் உடன் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மின்உற்பத்தி தடைபடாமல் தொடர்ந்து நடைபெற செய்ய உரிய ஆலோசனைகளை வழங்கினார். #TNMinister #Thangamani

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பியதாக முன்னாள் பெண் எம்.எல்.ஏ. சரஸ்வதியை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (60).

    இவர் கடந்த 1995-ம் ஆண்டு கபிலர் மலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்தார்.

    இந்நிலையில் கீரம்பூரை சேர்ந்த அ.தி.மு.க. கிளை கழக செயலாளர் ராஜா நாமக்கல் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ சரஸ்வதி வாட்ஸ் அப்பில் அவதூறு தகவலை பரப்பி வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்ட போது ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டினார் என புகாரில் தெரிவித்தார்.

    இதனைதொடர்ந்து முல்லை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நாமக்கல் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் சரஸ்வதியை இன்று காலை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    நாமக்கல் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தகவலறிந்து தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் மற்றும் திமுகவினர் கைது செய்யப்பட்ட சரஸ்வதியை பார்க்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #MinisterThangamani
    புதுடெல்லி:

    தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி கூறியதாவது:-

    தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். கூடுதல் நிலக்கரி வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. தினமும் நிலக்கரி அனுப்புவதாகவும் கூறியுள்ளார்கள்.



    தமிழகத்தில் மழை காரணமாக மின்சார தேவை குறைந்திருப்பதால் உற்பத்தியையும் குறைத்திருக்கிறோம். வடசென்னையில் 3 நாட்களுக்கான  நிலக்கரியும், தூத்துக்குடியில் 6 நாட்களுக்கான நிலக்கரியும் கையிருப்பு உள்ளது. ஒடிசாவில் ஏற்பட்ட மழை காரணமாகவே கடந்த வாரத்திற்கான நிலக்கரி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

    தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றன. அரசியல் செய்வதற்காக மின்வெட்டு இருப்பதாக பேசி வருகிறார்கள். தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு என்பதே வராது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterThangamani

    தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி பெறுவதற்காக அமைச்சர் தங்கமணி நேற்று டெல்லி புறப்பட்டார். இன்று மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை வைக்கிறார். #MinisterThangamani
    சென்னை:

    தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகவும், போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், கூடுதல் நிலக்கரி பெறுவதற்காக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டார். அவருடன் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் விக்ரம் கபூரும் டெல்லி சென்றார்.

    அமைச்சர் தங்கமணி, இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயல் மற்றும் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ராஜாங்க மந்திரி(தனி பொறுப்பு) ஆர்.கே.சிங் ஆகியோரை சந்திக்க இருக்கிறார். தனது டெல்லி பயணம் குறித்து அமைச்சர் தங்கமணி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது மின் பற்றாக்குறை மற்றும் நிலக்கரி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதே போன்று வடசென்னை அனல் மின்நிலையத்தில் 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக தமிழகத்தில் மின் தேவை குறைந்து உள்ளது. இதனால் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் விக்ரம் கபூருடன் டெல்லி செல்கிறேன்.

    இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்திக்கிறேன். அவரிடம் கூடுதலான வேகன்களில் நிலக்கரி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்க இருக்கிறேன். அதாவது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிறகு 10 வேகன்களில் வந்த நிலக்கரியானது தற்போது 13 வேகன்களில் வந்து கொண்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கையையும் அதிகரித்து 20 வேகன்கள் வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளேன். நிலக்கரி கையிருப்பு தற்போது நிறைய மாநிலங்களிலும் குறைவாகத்தான் இருக்கிறது.

    மேலும் மத்திய மின் தொகுப்பில் இருந்து 6 ஆயிரத்து 152 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு தர வேண்டும். ஆனால், தற்போது 3 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் தான் தரப்படுகிறது. எனவே, எஞ்சிய 2 ஆயிரத்து 852 மெகாவாட் மின்சாரத்தையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்க இருக்கிறேன். இது தொடர்பாக மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை ராஜாங்க மந்திரி(தனி பொறுப்பு) ஆர்.கே.சிங்கையும் சந்தித்து பேச இருக்கிறேன்.

    தனியாரிடம் இருந்து 2 ஆயிரத்து 830 மெகாவாட் மின்சாரம் பெற வேண்டும். ஆனால், தற்போது 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் பெறப்படுகிறது. எனவே அதனையும் முழுமையாக பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். எந்த விதத்திலும் தமிழகத்தில் மின்பாதிப்பு இல்லை, மின் வெட்டு இல்லை.

    அரசியலுக்காக தவறான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தமிழகம் மின் மிகை மாநிலம் என்ற பெயரை அ.தி.மு.க. அரசு எப்போதும் நிலைநாட்டும். தற்போது 15 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு வைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அந்த வகையில் நிலக்கரி அனுப்ப வேண்டும் என்பதற்காக மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterThangamani

    தமிழகத்தில் மின்வெட்டு நிலவுவதாக திட்டமிட்டு வதந்தியை பரப்புகிறார்கள் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #MinisterThangamani #PowerShortage #TNGovernment

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கு முழு உரிமை உள்ள இயக்கம் அ.தி.மு.க. தான்.

    ஜெயலலிதா ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், கழகத்திற்கு துரோகம் விளைவித்த தினகரன் மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் மின்வெட்டு வரப்போகிறது என்று பேசி வருகிறார். அது முற்றிலும் தவறானது.

    ஏனென்றால் ஜெயலலிதா இருக்கும்போதே தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி அமைத்துள்ளார். இந்திய சமன்பாட்டு அறிக்கை கூட தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அறிக்கை வழங்கியுள்ளது.

    கடந்த 9-ந் தேதியும் 10-ந் தேதியும் மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் பராமரிப்பு பணிக்காக வழங்கப்படவில்லை. அதேபோல காற்றாலை மின்சாரம் இருந்த காரணத்தால் அனல் மின்சார தயாரிக்கும் பணியை நிறுத்திருந்தோம். திடீரென்று காற்றாலை மின்சாரம் வராத காரணத்தால் அனல் மின்சார உற்பத்தியை திடீரென கொடுக்க முடியாத சூழலில் இருந்தோம்.

    ‌அதை அடுத்த நாளே சரிசெய்து சகஜ நிலைக்கு திருப்பி அமைத்து விட்டோம். மின் விநியோகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது நிலக்கரி இல்லை என்று வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

     


    நிலக்கரி குறித்து பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம் ஒரு நினைவூட்டல் கடிதம் தான். ஏற்கனவே தமிழகத்திற்கு அதிக நிலக்கரி வழங்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுள்ளார். அதற்கான நினைவூட்டல் கடிதம் தான் அது.

    தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டே இல்லாத போலவும், இந்த ஆட்சியில் தான் மின்வெட்டு இருப்பது போலவும் பேசி வருகிறார்கள். மின்வெட்டு குறித்து பேசுவதற்கு தி.மு.க.வுக்கு அருகதை இல்லை.

    முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். நானும் ரெயில்வே மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். வருகிற 18-ம் தேதி மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்து அதிக வேகன்களில் நிலக்கரியை ஏற்றி வந்து வழங்க வேண்டுமென்று கேட்க உள்ளேன்.

    நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இன்னும் 20, 25 நாள்களில் அந்த நிலக்கரியும் வந்து சேரும்.

    ஆகவே, மக்கள் வதந்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் கூடங்குளத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் ஒருபோதும் மின்வெட்டு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். #MinisterThangamani #PowerShortage #TNGovernment

    ×