search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்த காட்சி.
    X
    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் அமைச்சர் தங்கமணி திடீர் ஆய்வு

    தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அமைச்சர் தங்கமணி அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மின்வாரிய அதிகாரிகள் உடன் சென்றனர். #TNMinister #Thangamani
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது தூத்துக்குடி அனல் மின்நிலையம். இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தபப்ட்டது.

    இதனால் தற்போது 860 முதல் 890 மெகாவாட் வரையே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இதனிடையே 2-வது யூனிட் நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தெரியவந்தது.

    ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதை மறுத்தனர். 6 நாட்கள் வரை மின்உற்பத்தி செய்வதற்கு போதுமான நிலக்கரி உள்ளது. இதனால் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை’ என அதிகாரிகள் கூறினர்.

    அனல்மின் நிலையத்தில் நிலக்கரி குவித்து வைக்கப்பட்டுள்ள காட்சி.

    இந்த நிலையில் தமிழக மின்வாரிய அமைச்சர் தங்கமணி இன்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அவர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மின்வாரிய அதிகாரிகள் உடன் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மின்உற்பத்தி தடைபடாமல் தொடர்ந்து நடைபெற செய்ய உரிய ஆலோசனைகளை வழங்கினார். #TNMinister #Thangamani

    Next Story
    ×