என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tuticorin Thermal Power Station"

    • முதல்கட்டமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது.
    • தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் என்.எல்.சி.யில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் மூலம் தலா 500 வீதம் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது யூனிட்டும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதற்கிடையே தமிழக அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் ஏற்கனவே சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 2 அலகுகளில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • பல ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக பணி செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் துறைமுகத்தையொட்டி அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த அனல் மின் நிலையத்தில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

    இங்கு 210 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளது. இதன் மொத்த உற்பத்தித்திறன் 1050 மெகாவாட் ஆகும். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அனல்மின் நிலையத்தில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் தீ விபத்தாக மாறி முதல் மற்றும் இரண்டு அலகுகளில் தீ எரியத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 3-வது அலகுக்கும் தீ பரவும் சூழல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக 1,2,3 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    தீ விபத்து குறித்த தகவலை தொடர்ந்து சிப்காட், ஸ்பிக் தொழிற்சாலை, என்.டி.பி. எல்., தூத்துக்குடி புறநகர் பகுதிகள் மற்றும் ஏரல் உட்பட 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக இருக்கும் சூழலில், அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் நிரந்தர தொழிலாளர்களாக 1,550 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 1,270 தொழிலாளர்களும் பணி செய்து வருகின்றனர்.

    இதுபோக பல ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக பணி செய்து வருகின்றனர். கப்பலில் வரும் நிலக்கரியை துண்டுகளாக நொறுக்கப்பட்டு சிறு துண்டுகள் நிலக்கரி அரவை எந்திரங்களில் செலுத்தப்பட்டு தூளாக்கப்படுகிறது.

    தூளாக்கப்பட்ட நிலக்கரி பொடியாக்கி செலுத்தி விசிறிகள் மூலமாக உலைக்குள் வேகமாகச் செலுத்தி எரிக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த அலகுகளில் தான் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நிலக்கரிகள் தண்ணீரில் நனைந்ததாக கூறப்படுகிறது.
    • யூனிட்டுகளை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    யூனிட்டுகளை இயக்குவதற்கு தேவையான நிலக்கரிகள் அங்குள்ள வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நிலக்கரிகள் தண்ணீரில் நனைந்ததாக கூறப்படுகிறது. இதனால் யூனிட்டுகளை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து அனல்மின் நிலையத்தின் 3,4 மற்றும் 5-வது யூனிட்டுகள் இன்று காலை நிறுத்தப்பட்டது.

    1 மற்றும் 2-வது யூனிட்டுகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. இதனால் 630 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது நிலக்கரியின் ஈரப்பதம் காய்ந்த பின்னர் இன்று மாலை அல்லது இரவு முதல் அனைத்து யூனிட்டுகளும் இயக்கப்படும் என தெரிவித்தனர்.

    காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #TNMinister #Thangamani #DMK #MKStalin
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது தூத்துக்குடி அனல் மின்நிலையம். இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்கு இயங்கிவந்த இரு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக மின் வாரிய அமைச்சர் தங்கமணி இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அவர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து அவர் அனல்மின் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மின் உற்பத்தி தடைபடாமல் தொடர்ந்து நடைபெற உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தற்போது இங்கு 1 லட்சத்து 2 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. வருகிற 25‍-ந்தேதி ஒரு கப்பலில் நிலக்கரி வர உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது.

    தமிழகத்தில் தற்போதைய சூழலில் காற்றாலைகள் மூலமாக 3500 மெகாவாட், சூரிய சக்தி மூலமாக 1500 மெகாவாட், தண்ணீர் மூலம் 2500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மின் உற்பத்தி அதிகமாக இருப்பதாலேயே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. நிலக்கரி தட்டுப்பாடு என்பது தவறான தகவல்.

    தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் உடன்குடி, எண்ணூர், வடசென்னை ஆகிய இடங்களில் புதிய அனல் மின்நிலையங்கள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கடல் நீரை சுத்தம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மழை நீரை சேகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


    காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது. தனியார் நிறுவனம்தான் அரசுக்கு ரூ9.17 கோடி செலுத்தவேண்டியுள்ளது.

    பாளையங்கோட்டையில் 50 கிலோவாட் மின்சக்தி திறன் கொண்ட துணை மின் நிலையத்தை 80 கிலோவாட் சக்தி கொண்டதாக மாற்ற திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்குவதாக இருந்தது. அதற்காகவே மின்தடை அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Thangamani #DMK #MKStalin

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இங்குள்ள யூனிட்டுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் அவை சமீபகாலமாக அடிக்கடி பழுதாகி வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

    இங்குள்ள யூனிட்டுகள் ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிக்காக சில நாட்கள் நிறுத்தப்படுவது வழக்கம். அதே போல் கடந்த 1-ந்தேதி 3-வது யூனிட் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. ஆகையால் அந்த யூனிட்டில் மின்உற்பத்தி செய்யப்படவில்லை. இந்த பணிகள் 15 நாட்கள் நடக்கிறது.

    இந்நிலையில் நேற்று 1-வது யூனிட் எந்திரத்தின் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் 1-வது யூனிட்டிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 2 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    ×