search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Market"

    • பகுதி வாரியாக கடைகளை கட்ட வலியுறுத்தல்
    • மார்க்கெட் கட்டுமானப் பணி நடைபெறும் இடைப்பட்ட காலத்தில் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் மைய பகுதியான ரங்கப்பிள்ளை வீதி நேரு வீதி இடையில் பெரியமார்க்கெட் உள்ளது.

    இங்கு 500-க்கும் மேற்பட்ட நிரந்தர கடை களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடிக்காசு கடை களும் உள்ளது. நாளுக்குநாள் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மார்க்கெட் நெரிசல் மிகுந்த பகுதியாக மாறியுள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு உள்ளது.

    இதை கருத்தில்கொண்டு மார்க்கெட்டை முழுமையாக இடித்துவிட்டு, ரூ.36 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மார்க்கெட்டை நவீனப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    மார்க்கெட் கட்டுமானப் பணி நடைபெறும் இடைப்பட்ட காலத்தில் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்திருந்தனர்.

    இதற்காக ரோடியர் மில் திடலுக்கு தற்காலிகமாக பெரிய மார்க்கெட்டை மாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் வருவாய் இழப்பு நேரிடும்.

    கடைகளின் பொருட்க ளுக்கு பாதுகாப்பு இருக்காது. குறித்து காலத்தில் பணிகளை முடித்து மீண்டும் கடைகளை ஒப்படைக்க ஆண்டுக் கணக்கில் காலதாமதம் ஏற்படும். எனவே ஒட்டு மொத்தமாக இடிக்காமல், பகுதி, பகுதியாக கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதை வலியுறுத்தி இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியமார்க்கெட்டில் உள்ள மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் அடைத்து வியாபாரிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் வியாபாரிகள் அனைவரும் திருவள்ளுவர் நகரில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்துக்கு மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொறுப் பாளர்கள் சிவகுருநாதன், சுப்பிரமணி, பாலாகுமார், குருசாமிநாயுடு, முருகன், அருள், சுரேஷ், ஆறுமுகம், உதயகுமார், செல்வம், செல்வக்குமார், ஜெயவேல், ரமா, மலர், மணி, இப்ராகிம், கந்தசாமி, கணபதி, ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்த னர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செய லாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பெரிய மார்க்கெட்டை ஒட்டு மொத்தமாக இடிப்பதை கைவிட்டு தேவையற்ற சில பகுதிகளை இடித்து கடைகளை கட்டி வியா பாரிகளுக்கு வழங்க வேண்டும். பழைய கடை களை இடிக்காமல் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும். கழிப்பறைகளை இடித்துவிட்டு நவீன கழிப்பிடங்களாகவும், உட்புற சாலைகளை சீரமைத்தும் தர வேண்டும்.

    இந்த பணிகளை மேற்கொள்ள இடையூறாக இருக்கும் கடைகளை நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகத்தில் தற்காலிகமாக கடை அமைத்து செயல்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர். மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் கடைகளை திறந்த வியாபாரத்தை மேற்கொண்டனர்.

    • ஜெட் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.
    • 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இட்லிப்:

    சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷியா இருந்து வருகிறது.

    இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் பகுதியில் இயங்கிவரும் காய்கறி சந்தையில் ரஷிய படையினர் அதிரடி வான் வெளி தாக்குதல் நடத்தினார்கள். ஜெட் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.

    இந்த திடீர் தாக்குதலில் காய்கறி சந்தைக்கு வந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிந்து இருந்தனர். இவர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

    ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டமாஸ்கஸ் தெரிவித்து உள்ளது. ஆனால் இது குறித்து சிரியாவோ, ரஷியாவோ எந்த கருத்தையும் கூறவில்லை. படுகாயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டு சிரியாவில் நடந்த மோசமான சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர்.
    • சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு அகில் மேடை வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் வளாகத்தில் அம்மா உணவகம் கடந்த 11 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 10 சுய உதவி குழுவை சேர்ந்த பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த ஊழியர்கள் டோக்கன் வழங்குதல், சமையல் செய்வது, உணவு பரிமாறுதல் என தங்களுக்குள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் இந்த அம்மா உணவகத்தில் மேலும் 2 பெண் ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தபட்டனர். அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் டோக்கன் மட்டுமே வழங்கி வந்துள்ளனர். மற்ற வேலைகளை செய்யவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மற்ற ஊழியர்கள் அவர்களிடம் நீங்களும் இங்கு மற்றவர்கள் போல அனைத்து வேலைகளை செய்ய வேண்டும். டோக்கன் போடும் வேலை மட்டும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.

    ஆனால் அந்த 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை மற்ற 10 ஊழியர்கள் உணவை பரிமாறாமல் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை உணவு சாப்பிட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதார ஆய்வாளர் மணிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த 2 ஊழியர்களும் மற்றவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறினர்.

    அதற்கு அதிகாரிகள் முதலில் பொதுமக்களுக்கு உணவை பரிமாறுங்கள். பின்னர் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றனர்.

    இதனை ஏற்று அம்மா உணவக ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது. 

    • திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
    • வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து, 40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேதாரண்யம் சாலை பள்ளிவாசல் மைதானத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்தச் சந்தையில் உள்ளூர் விவசாயிகள் மட்டுமன்றி மதுரை, ராஜகிரி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், தஞ்சாவூர், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.

    இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சந்தையில் வழக்கத்தை விட கூடுதலாக வியாபாரிகள் ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனர். இதே போல ஆடுகளை வாங்கவும் ஏரா ளமானோர் வந்திருந்தனர்.

    பக்ரீத் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை யானதாக சந்தை ஏற்பா ட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • வியாபாரிகள்,பொதுமக்கள் கோரிக்கை
    • மாட்டு சந்தையில் தற்போது அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், மதகடிப்பட்டில் வார மாட்டு சந்தை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

    செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தையில் புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இந்த சந்தையில் கூடி மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

    மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், தங்களின் விவசாய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த மாட்டு சந்தையில் தற்போது அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.

    மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக சந்தை காட்சியளிப்பது வழக்கமாக உள்ளது. மேலும் வெயில் காலங்களில் வெட்ட வெளியில் வியாபாரம் நடைபெறுவதால் பொது மக்கள் மிகவும் சிரமத்துடன் வந்து செல்கின்றனர்.

    அதோடு குடிநீர், கழிவறை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. வியாபாரிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தை வைத்து அதிநவீன கட்டமைப்பை இந்த சந்தை யில் உருவாக்க முடியும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

    வருடத்திற்கு 5 லட்சம் முதல் 21 லட்சம் வரை ஏலத்தில் எடுக்கப்படும் இந்த வார சந்தையை தனியார் நிர்வாகித்து வருவதால், அரசு இந்த சந்தையினை கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • சாதாரண வாரங்களிலேயே ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.
    • சென்ற ஆண்டு விற்பனையான தொகையில் இருந்து ரூ.3 ஆயிரம் வரை ஆடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது.

    இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். மதுரை, தேனி, ராமநாதபுரம் , சிவகங்கை, நெல்லை, தென்காசி, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

    இங்கு சாதாரண வாரங்களிலேயே ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும்.

    அந்த வகையில் வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை வியாபாரம் இன்று களை கட்டியது. இன்று அதிகாலை முதல் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது

    வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு, கொடி ஆடு என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்தனர்.

    7 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8 ஆயிரத்திற்கு விலை போனது. மேலும் எடைக்கு ஏற்ப ரூ.33 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை இருந்தது. ஜோடி ஆடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை விலை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பக்ரீத் பண்டிகையில் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதால் அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டுகளை விட ஆடுகளின் விலை இந்த ஆண்டு அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர். இது சென்ற ஆண்டு விற்பனையான தொகையில் இருந்து ரூ.3 ஆயிரம் வரை ஆடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. ரூ.6 கோடிக்கு ஆடுகளின் விற்பனை இருந்ததாக வியாபாரிகள் கூறினர்.

    • கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் வெங்காயம் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.
    • வெளி மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி தற்போது அதிகளவில் உள்ளது.

    நெல்லை:

    வீட்டு சமையல் மட்டுமின்றி ஓட்டல்கள், சுபநிகழ்ச்சிகள் பரிமாறப்படும் சமையலில் அத்தியாவசிய இடத்தை பிடிப்பது வெங்காயம் ஆகும். வெங்காயம் இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதன் பங்கு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

    உற்பத்தி குறைவு

    இதனால் அதன் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வெங்காயம் குளிர்கால பயிராகும். தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் அதன் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் வெங்காயத்தின் உற்பத்தி வழக்கத்தைவிட குறைந்தது.

    ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி தற்போது அதிகளவில் உள்ளது. இதனால் தேவையை கருத்தில் கொண்டு வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வெங்காயம் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் மூலமும் சிறிய வியாபாரிகள் தெருத்தெருவாக சென்று வெங்காயம் விற்பனை செய்து வருகிறார்.

    விலை வீழ்ச்சி

    வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த ஒரு வாரமாகவே வெங்காயத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. அதன்படி ரூ. 15 முதல் ரூ. 18 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நெல்லை மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 12 முதல் ரூ. 17 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. விலை சரிந்துள்ளதால் பொதுமக்களும் போட்டி போட்டு அதிகளவில் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.

    • மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.
    • எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    மதுரை:

    வெங்காயம் இல்லாத உணவை வீடுகளில் பார்க்க முடியாது. சமையலின் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் தமிழகத்தில் போதிய அளவு விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    மதுரையில் கீழவெளி வீதியில் வெங்காயம் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயம் பல்வேறு பகுதிகளுக்கு மூட்டை மூட்டையாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    வெங்காயம் குளிர்கால பருவ பயிராகும். தற்போது இந்தியா முழுவதும் கோடை காலம் என்பதால் வெங்காய பயிர் விளைச்சல் குறைந்துள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்து மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.

    அவ்வாறு வரும் வெங்காயம் இங்கு நிலவும் அதிக வெப்ப சூழ்நிலை காரணமாக அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் இருந்து மதுரைக்கு லாரிகளில் வந்த சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் அழுகிவிட்டன. இதன் காரணமாக அதனை வைத்துக் கொள்ள முடியாமல் வியாபாரிகள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டினர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறோம். ஆனால் இங்கு நிலவும் வெப்பம் காரணமாக வெங்காயம் தாக்குபிடிக்க முடியாமல் அழுகி விடுகிறது. இதனால் எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என கவலையுடன் தெரிவித்தனர்.

    • சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தேவையான சொந்த இடம் இல்லாமலும், எந்தவித நிரந்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிறிய வாடகை இடங்களில் இந்த விற்பனைகூடம் உள்ளது.
    • இந்நிலையில் இதற்கு தீர்வு காண, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, இன்று வரை இந்த விற்பனை கூடத்திற்கு தேவையான சொந்த இடம் இல்லாமலும், எந்தவித நிரந்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிறிய வாடகை இடங்களில் இந்த விற்பனைகூடம் உள்ளது. இந்நிலையில் தற்போது விற்பனைகூடம் வயலூரில் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தினால், கடந்த 60 ஆண்டு காலமாக, இப்பகுதி விவசாயிகளுக்கும் மற்றும் வணிகர்களுக்கும் எந்தவித சேவையும் செய்யவில்லை.

    விற்பனைக்கூடத்திற்கு, வெளியே நடக்கும் வணிகத்திற்கு மட்டும் சந்தை கட்டணம் வசூலித்து வருகின்றனர். விற்பனைக்கூடம் வெறும் கட்டண வசூலிப்பு அலுவலகம் போல் மட்டும் செயல்பட்டு வருகின்றது. சரியான முறையில் இந்த விற்பனைகூடம் செயல்பட்டால் இங்குள்ள விவசாயிகளும் வணிகர்களும் விற்பனை கூடத்தின் சேவையைப் பெற்று பயன்பெறுவர். இந்நிலையில் இதற்கு தீர்வு காண, சிதம்பரம் வர்த்தகர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது. இந்த இடைக்கால உத்தரவு நிரந்தரமாக்கவும், சிதம்பரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விற்பனை க்கூடம் அமைக்கவும் அங்கு நடைபெறும் வணிகத்திற்கு மட்டுமே சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்கும், உரிய நடவடிக்கை எடுக்க சங்கம் முயற்சி செய்யும் என வர்த்தகர் சங்க தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

    • தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
    • ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்தபோது நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது.

    இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை, மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    பள்ளிகள் கோடை விடுமுறை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடை களுக்கு கிராக்கி நிலவுகிறது.

    இதேப்போல் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் மொத்த விற்பனை 25 சதவீதம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    பழைய மார்க்கெட் கட்டிடம் சேர்மன் உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.
    குமாரபாளையம்:

     குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

    கட்டு–மான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில்  அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற பூமி பூஜையும் போடப்பட்டது. 

    பணிகள் துரிதமாக நடைபெற பழைய மார்க்கெட் கட்டிடம் சேர்மன் விஜய்கண்ணன் உத்திரவுப்படி இடிக்கப்பட்டது.
    குமாரபாளையத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட் கட்டப்பட உள்ளது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  2 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட்  கட்டப்பட உள்ளது. 

    கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில்  அமைக்க,  சேர்மன் விஜய்கண்ணன், நகராட்சி கமிஷனர், பொறியாளர் மற்றும் கவுன்சிலர்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டது.

    ×