search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்ரீத் பண்டிகை"

    • உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தஞ்சை இர்வீன்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

    தஞ்சாவூர்:

    இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி இன்று உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா மண்டப வளாகத்தில் இன்று காலை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொ ருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    இதேபோல் தஞ்சை இர்வீன்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் அனைவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

    இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றன.

    பின்னர் இஸ்லாமியர்கள் பலர், தங்கள் வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுத்து அவற்றை 3 சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு 3-வது பங்கை தங்கள் தேவை களுக்கு பயன்படுத்தினர்.

    மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கும் உணவு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர்.

    கும்பகோணம்:

    தியாகத்திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் மற்றும் சிறப்பு திடலில்  அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம், மேலக்காவேரி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், கருப்பூர், செறுகடம்பூர், சிக்கல் நாயக்கன்பேட்டை, திருலோகி,கதிராமங்கலம், சோழபுரம், திருமங்கலக்குடி, ஆடுதுறை, அவனியாபுரம் என  பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

    இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர்.

    இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும்  அதிகாலை முதலே  திடலில் குவிந்தனர்.

    சரியாக 7.00 மணியளவில் பெருநாள் தொழுகையை நடத்திய இமாம்கள் ஆற்றிய உரையில் இறை நம்பிக்கை மனிதனை நல்லவனாக ஆக்குவதற்கு உதவியாக இருக்கின்றது.

    இறை தூதர்கள் உலகில் இறைவனுடைய இறை பணிகளை நடைமுறை படுத்துவதற்காகவே இறைவன் அனுப்பினான் இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்களில் இப்ராஹிம் நபி அவர் தன் மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்து பலியிட முயன்ற போது இறைவனுக்கு மனிதர்களை நரபலி கொடுப்பது கூடாது என்பதற்காக அதற்கு பரிகாரமாக இஸ்லாமியர்கள் கால்நடை போன்ற  பிராணிகளை அறுத்து  இறைவனுக்காக குர்பானி என பலியிடுகின்றார்கள் என்றார்.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

    • திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் நடுத்தெரு திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஒரே இடத்தில் தொழுகை செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நாச்சிகுளம் நடுத்தெரு திடலில் நாச்சிகுளம் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

    ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஒரே இடத்தில் தொழுகை செய்தனர்.

    அதே தொடர்ந்து

    நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளி இமாம் முகமது தெளபிக் ஹஜ் பெருநாள் குறித்து உரை நிகழ்த்தினார்.

    அதன் பின் ஒருவொரை ஒருவர் கட்டி அனைத்து வாழ்த்துகளை பரிமாரிக் கொண்டனர்.

    இதில் மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன் மாவட்ட துனை தலைவர் அஸாருதீன் கிளை பொருளாளர் கமருதீன் கிளை துனை தலைவர் செய்யது அபுபக்கர் கிளை துனை செயலாளர் மைதீன் கல்பான் அமீரக பொறுப்பாளர் மூசா மீரான் சாதிக் பாட்சா என 500க்கும் மேற்பட்டோர் இச்சிறப்பு தொழுகையில் கலந்துக் கொண்டனர்.

    • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
    • நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    நாகூர் தர்காவில் நடைபெற்ற தொழுகைக்கு பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

    இதேபோல நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 66 பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    • தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகை செய்பவர்களுக்காக தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்கப்பட்டன, வடமாநில் தொழிலாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    கோவை,

    இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டி கையை கொண்டாடி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப் படுகிறது. பக்ரீத் பண்டிகையை யொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பரிமாறி உற்சாகம் அடைந்த னர்.

    தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள்.

    மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடு பட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதல் சிறுவர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மைதானங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடைகளுடன் திரளாக வந்திருந்து சிறப்பு தொழுகை நடத்தினார்கள். அதன்பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி, பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் தக்னி ஜமாத் பள்ளிவாசலில் தமிழகம் மட்டுமின்றி வடமாநில தொழிலாளர்களும் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகை செய்பவர்களுக்காக தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்கப்பட்டன. இதனை வடமாநில் தொழி லாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் மப்டி உடையில் ரோந்து சென்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிநவீன கருவிகள் மூலம் பள்ளிவாசல் வளாகம், வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் அதிரடியாக சோதனை மேற்கொ ண்டனர்.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இன்று காலை யில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. மற்றும் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்ற னர். தொழுகை முடிந்த பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இன்று காலையில் பக்ரீத் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில்

    1000- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதேபோல் சென்னை பெரம்பூர், ஓட்டேரி, ராயபு ரம், புரசைவாக்கம், அண்ணா நகர், ஐஸ் அவுஸ், வண்ணாரப் பேட்டை, தண்டையார் பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்ற னர். 

    • கடலூர் முதுநகரில் ஜீம்அ மஸ்ஜித் திடலில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழிலில் ஈடுபட்டனர்.
    • ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினார்கள்.

    கடலூர்:

    இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நெல்லிக்குப்பம் பகுதியில் கொண்டாடப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் இன்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஊர்வலமாக நகரின் முக்கிய சாலை வழியாக கொத்பா பள்ளிவாசலுக்குச் சென்றனர். அங்கு சிறப்பு தொழுகை நடந்தது. பிறகு ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக ஏழைகளுக்கு இறைச்சி, மளிகைப் பொருட்கள் போன்றவற்றை குர்பானியாக வழங்கினர். இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், செம்மண்டலம், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் கடலூர் முதுநகரில் ஜீம்அ மஸ்ஜித் திடலில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழிலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினார்கள்.

    பண்ருட்டிகாந்தி ரோட்டில்உள்ளபழமை வாய்ந்த முகமது ஷா அவுலியா தர்கா வில்இருந்துஊர்வலமாக வந்துபண்ருட்டி -கடலூர் சாலையில் உள்ள ஈத்காமைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்குரமேஷ் எம்.பி. , வேல்முருகன் எம்.எல்.ஏ. ,சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன்,அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்,முன்னாள்எம்.எல்.ஏ.க்கள் சொரத்தூர்ராஜேந்திரன்,சத்யாபன்னீர்செல்வம்,சிவக்கொழுந்து,முன்னாள் நகர் மன்ற  தலைவர்கள் பஞ்சவர்ணம், பன்னீர்செல்வம், சென்னை  ஜேப்பியார்ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர்வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதி பள்ளிவாசல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • 2 ஆயிரம் பேர் பங்கேற்பு
    • தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டி தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டா டப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படு கிறது.

    இப்பண்டிகையை ஒட்டி முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்க ளும், பெண்களும் அணிவ குத்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று சுன்னத்துல் ஜமாத், தல்ஹீத் பிரிவினர் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாக இஸ்லாமியர்கள் குடும்பத்தினரோடு இன்று காலையில் ரமலான் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையி லான 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மீராசா ஆண்டவர் பள்ளியில் இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அப்பகுதியைச் சார்ந்த ஆயி ரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டி தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

    • ரூ.1 கோடி வரை ஏலம் போன செம்மறி ஆட்டுக்கு தற்போது சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது.
    • தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் செம்மறி ஆட்டுக்கு கொடுக்கப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூசிங். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் செம்மறி ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆட்டின் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவர், அந்த கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்தார். அப்போது செம்மறி ஆட்டின் உடலில் 786 என்ற எண்கள் காணப்பட்டது தெரிய வந்தது. இந்த 786 என்ற எண்கள் இஸ்லாமிய மதத்தில் புனிதம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

    இதனால் அந்த செம்மறி ஆட்டை விற்பதற்கு ராஜூசிங் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    செம்மறி ஆட்டின் உடலில் என்ன வாசகம் இடம்பெற்றிருந்தது என எனக்கு தெரியாது.

    இதுபற்றி இஸ்லாமிய சமூக உறுப்பினர்கள் சிலருடன் ஆலோசித்த போதுதான், அது 786 என்ற எண் என கூறினர். பக்ரீத்தையொட்டி இந்த செம்மறி ஆட்டை அதிக விலை கொடுத்து வாங்க சிலர் முன்வந்தனர். ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூட கொடுத்தும் வாங்குவதற்கு முன்வந்தனர். ஆனால் அதனை விற்க நான் தயாராக இல்லை. ஏனென்றால் அந்த ஆடு என்னிடம் மிகவும் அன்பாக உள்ளது என்றார்.

    ரூ.1 கோடி வரை ஏலம் போன அந்த செம்மறி ஆட்டுக்கு தற்போது சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது. தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் கொடுக்கப்படுகிறது.

    • மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.
    • இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும்.

    அரபி மாதங்களில் 12-வது நிறைவு மாதமாக இடம் பெறுவது துல்ஹஜ் மாதம் ஆகும். இந்த மாதத்தின் பத்தாம் நாளன்று உலக முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படக்கூடியது 'பக்ரீத் பண்டிகை' ஆகும். 'பக்ரா' மற்றும் 'ஈத்' எனும் இரண்டு உருது வார்த்தைகளின் இணைப்புதான் 'பக்ரீத்' ஆகும். இதன் பொருள்- 'ஆட்டைப் பலியிட்டு கொண்டாடப்படும் பெருநாள்' என்பதாகும். மேலும் இதற்கு 'குர்பானி பெருநாள்' என்றும் பெயருண்டு.

    'குர்பானி' என்றால் 'தியாகம் செய்தல்' என்பது அர்த்தமாகும். குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. இதற்கு காரணமாக ஒரு சரித்திர நிகழ்வும் உண்டு. நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது 86-ம் வயதில் குழந்தை வரம் கேட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தபோது அவர்களுக்கு இஸ்மாயீல் எனும் ஆண் குழந்தையை இறைவன் வழங்கினான். சில ஆண்டுகள் கழித்து அந்தக்குழந்தையை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதாக கனவு கண்டார்.

    இந்த இறை உத்தரவை செயல்படுத்திட குழந்தையை அறுத்துப் பலியிட துணிந்தார். அவரின் தியாகத்தை ஏற்றுக்கொண்ட இறைவன் குழந்தைக்கு பதிலாக பிராணி ஒன்றை பலியிட வழிகாட்டினார். இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதாவது: "ஆகவே அவ்விருவரும் இறைவனின் விருப்பத்திற்கு முற்றிலும் வழிபட்டு இப்ராகீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட முகங்குப்புறக் கிடத்தினார். அச்சமயம் நாம் 'இப்ராகீமே என அழைத்து உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும் நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்' என்றும் கூறி 'நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்' என்றும் கூறினோம்.

    ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம். அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்". (திருக்குர்ஆன் 37:103-108) 'நபியே நீர் உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக' (திருக்குர்ஆன் 108:3) இந்த தியாகத்திருநாள் குறித்த நபிமொழிகள் வருமாறு: 'துல்ஹஜ் 10-ம் நாளன்று ஆதமின் மகன் செய்யும் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும்.

    அவைகள் மறுமைநாளில் தமது கொம்புகளுடனும் ரோமங்களுடனும் கால்குளம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் ரத்தங்கள் பூமியில் விழும் முன்பாகவே இறைவனிடம் அவை சென்றடைகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி) 'குர்பானி கொடுப்பதினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என நபித்தோழர்கள் வினவிய போது 'அதன் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை உண்டு' என நபி (ஸல்) பதில் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: ஜைத் பின் அர்க்கம் (ரலி) நூல்: அஹ்மது) இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கை மற்றும் செல்வங்கள் கால்நடைகள் ஆகிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திட தியாகப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.

    இதன்மூலம் இறை நெருக்கத்தையும் பெறமுடிகிறது. இறைவனுக்கு அடிபணிதலையும் காட்டமுடிகிறது. குர்பானி என்பது தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் அனைத்து சமுதாய ஏழை எளியோருக்கும் உணவு மற்றும் மாமிசங்களை வழங்கி உணவு வழங்குவதை விரிவுபடுத்தி பசியில்லாத சமுதாயத்தை உருவாக்குவதும் உறவுகளை ஆதரிப்பதும் விருந்தினர்களை உபசரிப்பதும் அண்டை அயலாரை அன்புடன் நடத்துவதும் நலிந்தோருக்கு தர்மம் செய்வதும் ஆகும்.

    குர்பானி என்பது நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாக வழிமுறையை நினைவு கூர்வதும் அதை கடைப்பிடிப்பதும் ஆகும். குர்பானி என்பது இறைவனின் கூற்றை உண்மைப்படுத்துவதும் இறைவிசுவாசத்தின் மீது உறுதியாக இருப்பதின் சாட்சியமும் ஆகும். இறைவன் பிரியப்படும் விதமாகவும் அவன் பொருந்திக் கொள்ளும் விதமாகவும் அவனது உத்தரவை வெகுவிரைவாக செயல்படுத்துவதும் தான் குர்பானியாகும்.


    பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.



    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை-எளியோரின் பசிதீர்த்து கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்த நாளில், "ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு" என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக்கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.



    இத்தகைய உயரிய நெறியினை கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளை கொண்டாடி அன்பை பரிமாறிக்கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்தி கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவி; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனிதநேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துவதோடு எனது உளங்கனிந்த பக்ரீத்திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


    • சிறப்பு ஆட்டுச் சந்தை நடந்தது
    • வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகள் கொண்டு வரப்பட்டது

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை நடந்தது.

    இதில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு அதிகளவில் கொண்டுவரப்பட்டன.

    வெள்ளாடுகள் அதிகப்பட்சமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ஒரு நாள் மட்டும் இந்த சிறப்பு ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அதேபோல் வேலூரை அடுத்த பொய்கை மாட்டு சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடக்கும். சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    அதன்படி நேற்று நடந்த மாட்டு சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட ஏராளமான மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

    அதன்படி கறவை மாடுகள் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையிலும், எருது மாடுகள் ரூ.60 ஆயிரம் வரையிலும் மற்றும் எருமை மாடுகள் ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ஒரு நாள் மட்டும் பொய்கை வார சந்தையில், அதிக அளவில் ரூ.1.90 கோடிக்கு வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்.
    • விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

    இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள், சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.

    சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை, தியாகத்தை போற்றுகிற நாளாகும்.

    தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்கள்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    உலக முஸ்லிம்களில் பலர் ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்றி, தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    உலக முஸ்லிம்கள் கொண்டாடிடும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா:-

    கொடுங்கோலன் நம் ரூத்தின் அடக்குமுறைகளைத் துணிவுடன் எதிர்கொண்டு வென்ற இறைத் தூதர் இப்ராஹீம் மற்றும் அவரது அருமை மகனார் இஸ்மாயீல் ஆகியோரின் அரும்பெரும் தியாகத்தையும் இறைவனுக்கு அடிபணியும் ஒப்பற்ற தன்மையையும் நினைவு கொள்ளும் வகையில் தியாகத்திருநாள் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது.

    இந்திய துணைக்கண்டத்தில் மாத்திரமல்லாமல் முழு உலகிலும் அமைதியும் வளமும் சுதந்திரமும் உரிமைகளும் மேலோங்குவதற்கும் பிரார்த்தனை செய்வோம். அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணிராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், திருநாவுக்கரசர் எம்.பி., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது ஆகியோரும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • குறைந்தபட்சம் ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
    • உசிலம்பட்டியில் இருந்து வந்த நாட்டு செம்மறி ஆடு ரூ.65 ஆயிரத்துக்கு விலை போனது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாடு விற்பனையும், செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனையும் நடக்கிறது.

    இங்கு அண்டை மாவட்டங்களான தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதற்கு வருவார்கள். வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இஸ்லாமியர்கள் அதிக அளவில் ஆடுகள், மாடுகளை வாங்கி குர்பானி கொடுப்பது வழக்கம். இதனையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது.

    இங்கு நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பண்டிகையையொட்டி இந்த ஆண்டு ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று காலை 6 மணி முதல் சந்தை தொடங்கியதில் இருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுமார் 3,500-க்கும் அதிகமான டோக்கன்கள் சந்தையில் வினியோகிக்கப்பட்டது. வெள்ளாடு, செம்மறி கிடா, மயிலம்பாடி, பொட்டுக்குட்டி, வேலி ஆடு, கொர ஆடு, பிள்ளை போர், கரும்போர் என பல்வேறு வகைகளை சேர்ந்த ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

    குறைந்தபட்சம் ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. குறிப்பாக உசிலம்பட்டியில் இருந்து வந்த நாட்டு செம்மறி ஆடு ரூ.65 ஆயிரத்துக்கு விலை போனது. விலை சற்று அதிகமானாலும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×