என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இஸ்லாமிய மக்களுக்கு சகோதர உணர்வோடு பக்ரீத் நல்வாழ்த்துகள் - மு.க.ஸ்டாலின்
- பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
- தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாள் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகள்.
சென்னை:
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இஸ்லாமியர்களின் இரு பெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள்.
இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக-கல்வி-பொருளாதார உரிமைகளுக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் சகோதர உணர்வோடு எனது பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






