search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் விற்பனைக்கு குவிந்த ஆடுகள்

    • பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கோழி, இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்று மேலப்பாளையம் கால்நடை சந்தை ஆகும். இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மேலப்பாளையம் சந்தையில் கூடுவார்கள். இங்கு வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை செய்யப்படும்.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது. இன்று சுமார் 2,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    தரத்திற்கேற்ப அவை விற்பனை செய்யப்பட்டது. குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரம் முதல் அதிகபட்சமாக நாட்டுக்கிடா வகை ஒன்று ரூ. 40 ஆயிரம் வரை விலை போனது. வியாபாரிகள் பலரும் மொத்தமாக ஆடுகளை வாங்கி சென்றனர். பொதுமக்களும் தங்களுக்கு ஏற்ற ஆடுகளை வாங்கினர். அடுத்த வாரம் ஆடுகளை வாங்க கூட்டம் அதிகரித்து காணப்படும் என கூறப்படுகிறது.

    தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கோழி, இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது. மேலப்பாளையம் சந்தையில் கோழிகளும் விற்கப்படுவதால் அதனை வாங்கவும் ஏராளமானவர்கள் திரண்டனர்.

    Next Story
    ×