search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melapalayam Market"

    • வழக்கமாக ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் பண்டிகை, திருவிழா நேரங்களில் ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை விற்பனை நடைபெறும்.
    • மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையத்தில் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது.

    ஆடு, மாடுகளுடன், கோழி, கருவாடு உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படுவதால் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றாக இது திகழ்கிறது.

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாடு விற்பனையும், செவ்வாய்கிழமைகளில் ஆடு விற்பனையும் நடைபெற்று வருகிறது.

    இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் ஆடு, மாடுகளை வாங்க நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உட்பட முக்கிய பண்டிகை காலங்களில் ஆடு, மாடு விற்பனை அதிகளவில் காணப்படும். வழக்கமாக ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் பண்டிகை, திருவிழா நேரங்களில் ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    இந்நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இன்று மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளுடன் திரண்டனர்.

    இதற்காக மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டது. அவற்றை வாங்க ஏராளமான வியாபாரிகள், பொது மக்களும் குவிந்தனர்.

    • குறைந்தபட்சம் ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
    • உசிலம்பட்டியில் இருந்து வந்த நாட்டு செம்மறி ஆடு ரூ.65 ஆயிரத்துக்கு விலை போனது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாடு விற்பனையும், செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனையும் நடக்கிறது.

    இங்கு அண்டை மாவட்டங்களான தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதற்கு வருவார்கள். வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இஸ்லாமியர்கள் அதிக அளவில் ஆடுகள், மாடுகளை வாங்கி குர்பானி கொடுப்பது வழக்கம். இதனையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது.

    இங்கு நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பண்டிகையையொட்டி இந்த ஆண்டு ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று காலை 6 மணி முதல் சந்தை தொடங்கியதில் இருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுமார் 3,500-க்கும் அதிகமான டோக்கன்கள் சந்தையில் வினியோகிக்கப்பட்டது. வெள்ளாடு, செம்மறி கிடா, மயிலம்பாடி, பொட்டுக்குட்டி, வேலி ஆடு, கொர ஆடு, பிள்ளை போர், கரும்போர் என பல்வேறு வகைகளை சேர்ந்த ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

    குறைந்தபட்சம் ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. குறிப்பாக உசிலம்பட்டியில் இருந்து வந்த நாட்டு செம்மறி ஆடு ரூ.65 ஆயிரத்துக்கு விலை போனது. விலை சற்று அதிகமானாலும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் மூரி வகையான காளை மாடுகளை அதிகளவு வாங்கிச் சென்றனர்.
    • சந்தையில் அனைத்து வகையான மாடுகளுக்கும் கிராக்கி நிலவியது.

    நெல்லை:

    நெல்லை, மேலப்பாளையம் மாட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும்.

    இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் மாடுகளை வாங்க நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவு வருவார்கள்.

    இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் விற்பனை களை கட்டியது. பக்ரீத் நெருங்கி வருவதால் வியாபாரிகளும், மாடு வாங்குபவர்களும் மாட்டுச்சந்தையில் கூடினர். ஏற்கனவே கடந்த வாரம் நடந்த மாட்டுச்சந்தையில் மாடு வாங்க முடியாதவர்கள் இந்த வாரம் மாடு வாங்க குவிந்தனர்.

    மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் மூரி வகையான காளை மாடுகளை அதிகளவு வாங்கிச் சென்றனர். மேலும் சந்தையில் அனைத்து வகையான மாடுகளுக்கும் கிராக்கி நிலவியது. குறிப்பாக வழக்கமான நாட்களை விட இன்று ஒரு மாட்டின் விலை ரூ.3 ஆயிரம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சாதரண நாட்களில் ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் மாடுகள் இன்று ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனையானது. சந்தையில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் 1,000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகின்றன.

    இதுகுறித்து மாட்டு உரிமையாளர்கள் கூறும்போது, 'மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு இன்று கிராக்கி நிலவியதால் வழக்கமான நாட்களை விட இன்று நல்ல லாபம் கிடைத்தது' என்றனர்.

    • பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம்.

    நெல்லை:

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக விளங்கும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தப்படியாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை சந்தை புகழ்பெற்றது.

    செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். அன்றைய தினம் சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும். இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடைபெறும்.

    வழக்கமாக சுமார் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும் நிலையில் ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சுமார் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடக்கும்.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். இதையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்தது. இதேபோல் வெள்ளாடுகளும் வந்தன.

    அவற்றை வாங்குவதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பிற்பகலில் செம்மறி ஆடுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ஆடுகள் தரத்திற்கேற்ப ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    அதிகபட்சமாக பொட்டு வகை ஆடுகள் ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதனால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தை களைக்கட்டி காணப்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்மறி, வெள்ளாடு என ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தோம். இதில் செம்மறி ஆடுகள் விற்றுத்தீர்ந்த நிலையில் வெள்ளாடுகள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. இன்று சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. இதனால் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்துள்ளது.

    ஆயிரக்கணக்கான பொது மக்களும், நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் திரளும் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் அனைவரும் வெயில், மழையில் நிற்கும் நிலை உள்ளது. எனவே ஷெட்டுகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கோழி, இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்று மேலப்பாளையம் கால்நடை சந்தை ஆகும். இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மேலப்பாளையம் சந்தையில் கூடுவார்கள். இங்கு வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை செய்யப்படும்.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது. இன்று சுமார் 2,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    தரத்திற்கேற்ப அவை விற்பனை செய்யப்பட்டது. குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரம் முதல் அதிகபட்சமாக நாட்டுக்கிடா வகை ஒன்று ரூ. 40 ஆயிரம் வரை விலை போனது. வியாபாரிகள் பலரும் மொத்தமாக ஆடுகளை வாங்கி சென்றனர். பொதுமக்களும் தங்களுக்கு ஏற்ற ஆடுகளை வாங்கினர். அடுத்த வாரம் ஆடுகளை வாங்க கூட்டம் அதிகரித்து காணப்படும் என கூறப்படுகிறது.

    தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கோழி, இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது. மேலப்பாளையம் சந்தையில் கோழிகளும் விற்கப்படுவதால் அதனை வாங்கவும் ஏராளமானவர்கள் திரண்டனர்.

    • மேலப்பாளையத்தில் திங்கட்கிழமை தோறும் மாட்டு சந்தை நடந்து வருகிறது.
    • ஒவ்வொரு வாரமும் மேலப்பாளையம் சந்தையில் சுமார் ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையும் ஒன்றாகும். இங்கு ஆடுகளுடன், மாடு மற்றும் கருவாடு விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் வாரந்தோறும் தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தையும், செவ்வாய் கிழமை தோறும் ஆட்டுச்சந்தையும் நடந்து வருகிறது.

    மாடுகளுடன் குவிந்த வியாபாரிகள்

    வழக்கமாக ஒவ்வொரு வாரமும் சுமார் ரூ. 2 கோடி வரை விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், திருவிழா நாட்களிலும் விற்பனை மேலும் அதிகரித்து காணப்படும்.

    இந்நிலையில் இன்னும் 4 நாட்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று மேலப்பாளையம் மாட்டு சந்தைக்கு ஏராளமான வாகனங்களில் ஆயிரக்க ணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் கொண்டு வரப்பட்டது. அவைகள் தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. இதற்காக இன்று 100-க்கணக்கான சில்லறை வியாபாரிகள் சந்தையில் திரண்டனர். மேலும் பொதுமக்களும் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் மேலப்பாளையம் சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.

    • பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர்கள் கோவில்களில் ஆடுகளை நேர்த்தி கடன் கொடுத்து வழிபடுவார்கள்.
    • பங்குனி உத்திரம் நெருங்குவதையொட்டி இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் முக்கூடல், வள்ளியூர், மேலப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கால்நடை சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

    இதில் மேலப்பாளையம் சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது. இங்கு ஆடுகள் மட்டுமல்லாது மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டைவைகளும் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

    இதனை வாங்க ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் திரள்வார்கள். இதனால் வாரந்தோறும் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை நடைபெறும்.

    இந்நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர்கள் கோவில்களில் ஆடுகளை நேர்த்தி கடன் கொடுத்து வழிபடுவார்கள். பங்குனி உத்திரம் நெருங்குவதையொட்டி இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.

    இதற்காக நேற்று இரவு முதலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். இன்று வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் சந்தையில் குவிந்தனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் விற்பனைக்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது. அவை தரத்திற்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    இதனால் மேலப்பாளையம் சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.

    • தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • மறுநாள் கரிநாளாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அசைவ பிரியர்கள் இறைச்சி சாப்பிடுவார்கள்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக விளங்கும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தப்படியாக மேலப்பாளையம் கால்நடை சந்தை புகழ்பெற்றவையாகும்.

    மேலப்பாளையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சந்தையில் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம்.

    அந்த நாளில் சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும். மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடைபெறும்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் கரிநாளாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அசைவ பிரியர்கள் இறைச்சி சாப்பிடுவார்கள். இதையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடு, மாடுகளோடு சந்தையில் குவிந்தனர். சந்தையை ஒட்டியுள்ள நேதாஜி சாலை, மேலப்பாளையம் சக்திநகர் பகுதியிலும் வியாபாரிகள் கோழிகள் மற்றும் மீன்களுடன் விற்பனைக்காக குவிந்தனர்.

    சந்தையில் தரமான கிடாக்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. நடுத்தர ஆடுகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. குட்டியுடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகள் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

    கன்னிகிடா, வெள்ளாடு, செம்மறியாடு, கிடா ரகங்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. அதாவது கொடி ஆடு, நாட்டு ஆடு போன்ற நாட்டினங்கள், செவ்வாடு, மயிலம்பாடி உள்ளிட்ட செம்மறி ஆட்டினங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு குவிந்தன. சுமார் 6 ஆயிரம் ஆடுகள் வரை இன்று விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

    சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் ஆடுகளின் விலை கணிசமாக குறைந்தது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதே நேரத்தில் விலை ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்ததால் ஆடு வாங்க வந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • கிறிஸ்துமசுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் மேலப்பாளையம் சந்தையில் இன்று வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சந்தைகளில் ஒன்று நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தை. இங்கு ஆடுகளுடன் மாடு, கோழி, கருவாடு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொள்வது வழக்கம்.

    ஒவ்வொரு வாரமும் சுமார் ரூ. 2 கோடி அளவில் வியாபாரம் நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் விற்பனை இரு மடங்காக அதிகரிக்கும்.

    இந்நிலையில் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமசுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் மேலப்பாளையம் சந்தையில் இன்று வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

    இன்று ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

    அவை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக கொண்டுவரப்படும் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் மட்டுமின்றி ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தில் இருந்து செம்பிலியாங்கிடா கொண்டு வரப்பட்டது. இவை ஜோடிகள் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இதேபோல் கன்னி ஆடுகள் ரூ.23 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வியாபாரிகள் ஆடுகளை மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் இன்று மேலப்பாளையம் சந்தை களை கட்டி காணப்பட்டது.

    • மேலப்பாளையம் கால்நடைசந்தை பிரசித்தி பெற்றது. இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டஙளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சந்தையில் கூடுவார்கள்.

    நெல்லை:

    மேலப்பாளையம் கால்நடைசந்தை பிரசித்தி பெற்றது. இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டஙளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சந்தையில் கூடுவார்கள். வழக்கமாக வாரந் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை செய்யப்படும்.

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த 5-ந் தேதி சுமார் ரூ. 4 கோடி அளவில் ஆடுகள் விற்பனை நடைபெற்றது. தென்மாவட்டங்களில் ஆடிமாதம் பல்வேறு அம்மன் கோவில்கள், சாஸ்தா கோவில்களில் கொடைவிழா நடைபெறுவது வழக்கம்.

    அப்போது பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை பலியிடுவது வழக்கம்.

    தற்போது ஆடிமாதம் பிறப்பையொட்டி இன்று மேலப்பாளம் சந்தையில் ஏராளமானவர்கள் திரண்டனர். நெல்லை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். அவற்றை வாங்க சிறுவியாபாரிகளும், பொதுமக்களும் திரண்டனர். இதனால் மேலப்பாளையம் கால்நடை சந்தை களைகட்டி காணப்பட்டது.

    • பக்ரீத் பண்டிகை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் தற்போது ஏராளமான கோவில் கொடை விழாக்களும் நடைபெற்று வருகிறது.
    • இதனை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்று மேலப்பாளையம் கால்நடைசந்தை ஆகும்.

    இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சந்தையில் கூடுவார்கள்.

    மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    அதேபோல் ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை நடைபெறும்.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் தற்போது ஏராளமான கோவில் கொடை விழாக்களும் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    அவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டமும் அலைமோதியது. இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது. இன்று சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    ஆடுகள் தரத்திற்கேற்ப அவை விற்பனை செய்யப்பட்டது. குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    எட்டயபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளாடு ஒன்று அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    இதேபோல் வியாபாரிகள் பலரும் மொத்தமாக ஆடுகளை வாங்கி சென்றனர். பொதுமக்களும் தங்களுக்கு ஏற்ற ஆடுகளை வாங்கினர். இதனால் விற்பனைக்கு வந்த அனைத்து ஆடுகளும் விற்று தீர்த்தன.

    கால்நடை சந்தையில் இன்று ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

    அதன்பேரில் பொதுமக்களும், வியாபாரிகளும் முககவசம் அணிந்து சென்றனர்.

    ×