search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் சந்தையில் களை கட்டிய மாடுகள் விற்பனை
    X

    மேலப்பாளையம் சந்தையில் களை கட்டிய மாடுகள் விற்பனை

    • மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் மூரி வகையான காளை மாடுகளை அதிகளவு வாங்கிச் சென்றனர்.
    • சந்தையில் அனைத்து வகையான மாடுகளுக்கும் கிராக்கி நிலவியது.

    நெல்லை:

    நெல்லை, மேலப்பாளையம் மாட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும்.

    இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் மாடுகளை வாங்க நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவு வருவார்கள்.

    இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் விற்பனை களை கட்டியது. பக்ரீத் நெருங்கி வருவதால் வியாபாரிகளும், மாடு வாங்குபவர்களும் மாட்டுச்சந்தையில் கூடினர். ஏற்கனவே கடந்த வாரம் நடந்த மாட்டுச்சந்தையில் மாடு வாங்க முடியாதவர்கள் இந்த வாரம் மாடு வாங்க குவிந்தனர்.

    மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் மூரி வகையான காளை மாடுகளை அதிகளவு வாங்கிச் சென்றனர். மேலும் சந்தையில் அனைத்து வகையான மாடுகளுக்கும் கிராக்கி நிலவியது. குறிப்பாக வழக்கமான நாட்களை விட இன்று ஒரு மாட்டின் விலை ரூ.3 ஆயிரம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சாதரண நாட்களில் ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் மாடுகள் இன்று ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனையானது. சந்தையில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் 1,000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகின்றன.

    இதுகுறித்து மாட்டு உரிமையாளர்கள் கூறும்போது, 'மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு இன்று கிராக்கி நிலவியதால் வழக்கமான நாட்களை விட இன்று நல்ல லாபம் கிடைத்தது' என்றனர்.

    Next Story
    ×