என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டுச் சந்தை"

    • இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7ம் தேதி (சனிக் கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள் விற்பனை படுஜோராக இருந்து வருகிறது.

    பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி, இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7ம் தேதி (சனிக் கிழமை) கொண்டாடப்படுகிறது.

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள் விற்பனை படுஜோராக இருந்து வருகிறது.

    இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி மகாராஷ்டிராவில் கால்நடை சந்தைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா கோசேவா ஆயோக் (Maharashtra Goseva Ayog) மாநிலத்தில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு (APMCs) ஜூன் 3 முதல் 8 வரை கால்நடை சந்தைகளை மூட உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை இருக்கிறது. ஆனால், சந்தைகளையே நடத்தக் கூடாது என்றால் ஆடுகளை எப்படி விற்பது? என வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    மேலும் இது மகாராஷ்டிரா கோசேவா ஆயோகின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்று சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

    • கே.வி.குப்பத்தில் நாளை நடக்கிறது
    • விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறுகிறது.

    இங்கு காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இந்த ஆட்டுச் சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை 11-ந் தேதி சனிக்கிழமை சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை நடக்கும் சிறப்பு சந்தையில் ஆடுகளின் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • குறைந்த அளவிலான ஆடுகளே கொண்டுவரப்பட்டன
    • விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆட்டு சந்தை நடக்கிறது.

    இங்கு காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

    இந்த ஆட்டுச் சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று சிறப்பு ஆட்டுச்சந்தை நடந்தது. இதில் குறைந்த அளவிலான ஆடுகளே கொண்டுவரப்பட்டன. விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டதால் ஏராளமான ஆடுகள் விற்பனையாகாமல் வியாபாரிகள் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி எடுத்துச் சென்றனர்.

    ×