search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி சிறப்பு ஆட்டுச் சந்தை
    X

    தீபாவளி சிறப்பு ஆட்டுச் சந்தை

    • கே.வி.குப்பத்தில் நாளை நடக்கிறது
    • விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறுகிறது.

    இங்கு காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இந்த ஆட்டுச் சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை 11-ந் தேதி சனிக்கிழமை சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை நடக்கும் சிறப்பு சந்தையில் ஆடுகளின் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×