search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goat market"

    • புதியம்புத்தூரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை சி.எஸ்.ஐ. சேகர சபையால் தொடங்கப்பட்டது.
    • வாரத்திற்கு ரூ.80 லட்சத்திற்கும் குறையாமல் ஆடு விற்பனை நடைபெற்று வருகிறது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை சி.எஸ்.ஐ. சேகர சபையால் தொடங்கப்பட்டது.

    வாரம் தோறும் வியாழக்கிழமை கூடும் இச்சந்தையில் எல்லா பொ ருட்களும் பொது மக்கள் வாங்கிசெல்வார்கள். சுற்றுவட்டார கிராமமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்கி செல்வார்கள்.

    நாளடைவில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யாமல் ஆடுகள் மட்டு மே விற்பனைக்கு வந்தன. வாரந்தோறும் இங்கு 2 ஆயிரம் ஆடுகளுக்கு குறை யாமல் விற்பனைக்கு வரும்.

    வாரத்திற்கு ரூ.80 லட்சத்திற்கும் குறையாமல் ஆடு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஆடு ஒன்றுக்கு சந்தை நுழைவு கட்டணமாக ரூ.40 சந்தை குத்தகைதாரர் வசூல் செய்கிறார். இந்நிலையில் இந்த சந்தையில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி இல்லை. கழிப்பிட வசதிகள் கிடையாது. குறிப்பாக மழை காலங்களில் சந்தை சேறும், சகதியுமாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து வியாபாரி கள், பொதுமக்கள் சார்பில் கூறுகையில், இந்த சகதி க்குள் நின்று தான் வியா பாரிகள் ஆடுகளை விற்ப னை செய்ய வேண்டும்.

    உடனடியாக சந்தை வளாகத்திற்குள் சரல் மண் அடித்து அங்கு நிலவி வரும் சுகாதாரக் கேட்டை சரி செய்ய வேண்டும். சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

    • குறைந்த அளவிலான ஆடுகளே கொண்டுவரப்பட்டன
    • விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆட்டு சந்தை நடக்கிறது.

    இங்கு காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

    இந்த ஆட்டுச் சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று சிறப்பு ஆட்டுச்சந்தை நடந்தது. இதில் குறைந்த அளவிலான ஆடுகளே கொண்டுவரப்பட்டன. விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டதால் ஏராளமான ஆடுகள் விற்பனையாகாமல் வியாபாரிகள் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி எடுத்துச் சென்றனர்.

    • கே.வி.குப்பத்தில் நாளை நடக்கிறது
    • விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறுகிறது.

    இங்கு காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இந்த ஆட்டுச் சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை 11-ந் தேதி சனிக்கிழமை சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை நடக்கும் சிறப்பு சந்தையில் ஆடுகளின் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தீபாவளியை முன்னிட்டு வீரசோழன் ஆட்டுச்சந்தை களைகட்டியது.
    • ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள வீரசோழன் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. பல ஆண்டுகளாக பாரம்பரிய மிக்க இந்த சந்தையானது வாரந்தோறும் திங்கட் கிழமை நடைபெறு வது வழக்கம். மேலும் வீர சோழன் சந்தையானது தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் பண்டிகைகளில் ஆடு வியாபாரம் களை கட்டும்.

    வாரம்தோறும் நடை பெறும் இந்த சந்தைக்கு விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடுகள், கோழிகளை விற்பனை செய்யவும், வாங்கவும் வந்து செல்கின்றனர்.

    வருகிற 12-ந்தேதி தீபா வளி பண்டிகை கொண்டா டப்பட உள்ளது. இதை யொட்டி வீரசோழன் வாரச் சந்தை நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதலே வீரசோழன் வாரச்சந்தை திடலில் திரளாக கூடிய ஆட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக ளவில் ஆடுகள் மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர்.

    வீரசோழன் வாரச்சந்தை யில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான சுமார் 1200-க்கும் மேற் பட்ட ஆடுகள் விற்பனை யான தாகவும் அதன் மூலம் சுமார் ரூ.95 லட்சம் ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெற்றதாகவும் வீரசோழன் டிரஸ்ட் போர்டு நிர்வாகம் தெரிவிந்துள்ளது.

    மேலும் வருகிற 12-ந்தேதி கொண்டா டப்படும் தீபாவளி பண்டி கையானது ஞாயிற்றுக்கி ழமை கொண்டாடப்படு வதால் வழக்கமாக திங்கட் கிழமை நடைபெறுகின்ற வீரசோழன் வாரச்சந்தையை பொதுமக்களின் நலன் கருதி 11-ந் தேதி அதாவது முன் கூட்டியே சனிக்கிழமை நடைபெறும் எனவீரசோழன் டிரஸ்ட் போடு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் அன்றைய தினம் (சனி) எட்டையாபுரம், இளையான்குடி பகுதிகளில் வாரச்சந்தை செயல் படுவதால் தீபாவளிக்கு முதல் நாள் அதாவது சனிக்கிழமை நடைபெறவுள்ள வீர சோழன் வாரச்சந்தையில் ஆடு விற்பனை சற்று குறை வதற்கும் அதிக வாய்ப்புள்ள தாக டிரஸ்ட் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • புதுக்கோட்டையில் நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று ஆட்டுசந்தை களைகட்டியது
    • ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை

    புதுக்கோட்டை:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை கலைக்கட்டி வருகிறது, 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஒரு ஆட்டிற்கு வழக்கத்தை விட 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது, விலை அதிகரித்த போதும் ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    புதுக்கோட்டை சந்தை ப்பேட்டையில் வார ம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுசந்தை நடைபெறு வது வழக்கம். இந்த ஆட்டுச் சந்தையில் புதுக்கோ ட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட ங்களிலிருந்தும் ஆடுகளை விற்கவும் வாங்கவும் அதிக அளவு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகின்றனர்.இந்நிலையில் நாளைய தினம் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டா டப்பட உள்ள நிலையில் இந்த ஆட்டு சந்தையில் விற்பனை களைகட்டி வருகிறது. வழக்கத்தை விட ஆடுகளின் வரத்து அதிகரித்துள்ளது.

    செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் இந்த ஆட்டுச் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு ஒன்றுக்கு 3000 ரூபாய் முதல் 25000 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. விலை அதிகரித்துள்ள போதும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று நடைபெறும் ஆட்டு சந்தையில் ஒன்றரை கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





    • ரம்ஜான் விற்பனையை எதிர்பார்த்திருந்த நிலையில் கரூர் மணல்மேடு ஆட்டுச்சந்தை களை இழந்துள்ளது
    • குறைவான விற்பனையால் விவசாயிகள் கவலை

    கரூர்:

    கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டு சந்தையில் நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, பழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு கடந்த வாரம் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையான நிலையில், இந்த வாரம் ஆட்டு சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை ஆனதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த வாரம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. ஆனால் இந்த வாரம் சுமார் 10,000 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன.

    ஆடுகளை வாங்க வியாபாரிகள் வராததாலும், ஆடு உரிமையாளர்கள், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.ரம்ஜான் பண்டிகை காலம் என்பதால் ஆட்டுச் சந்தையில் இறைச்சிக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும். ஆனால் இந்த ஆண்டு இறைச்சி ஆடுகள் கூட விற்பனை மந்தமானதால் ஆடுகள் வளர்ப்பு தொழில் செய்து பிளைக்கும் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துடன் கவலையுடன் திரும்பி சென்றனர்.பண்டிகைைய முன்னிட்டு இந்த வாரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடுகள், வியாபாரிகள் வரத்து குறைவானதால் ரூ.50 லட்சத்திற்கும் குறைவான அளவிலான வியாபாரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


    • பொங்கலை முன்னிட்டு நடந்தது
    • வழக்கமாக 11 மணிக்கு முடியும் சந்தை 1 மணி வரை நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கி ழமை சந்தை நடைபெற்று வருகிறது.

    சூடு பிடித்த ஆட்டு சந்தை

    இங்கு காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், கீரைகள், கடலை, தினை வகைகள் என விதவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்படும். நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த பொருட்களை இங்கு எடுத்து வந்து விற்பனை செய்வார்கள்.

    குறிப்பாக ராணிப் பேட்டை ஆட்டுச்சந்தை மிக வும் பிரபலமானது. ராணிப்பேட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள் விற்பனைக்காக ஆடுகளை சந்தைக்கு கொண்டு வருவார்கள். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, காஞ்சீபு ரம், திருவள்ளூர், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடு களை வாங்க வருவார்கள். பண்டிகை காலங்களில் இந்த ஆட்டுச்சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்படும்.

    வழக்கம்போல நேற்று ஆட் டுசந்தை நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஆட்டுச்சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்பட் டது. வழக்கத்தை விட அதிக மான ஆடுகள் மினி லாரி, வேன்களில் அதிகாலையிலேயே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள், ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஆடுகளின் எடை, தரத்திற்கு தகுந்தபடி பேரம் பேசி போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். குட்டி ஆடுகள் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5,000 வரை விலைபோனது. நடுத்தர ஆடுகள் ரூ.7 ஆயிரத் தில் இருந்து ரூ.10,000 வரையி லும், பெரிய ஆடுகள் அதிக பட்சமாக ரூ.15,000 வரையி லும் விலை போனதாக வியா பாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    இந்த ஆட்டுச் சந்தையில் வழக்கமாக ரூ.50 லட்சம் வரை வியாபாரம் நடைபெ றும். ஆனால் நேற்று ரூ.1கோடியே 25 லட்சம் வரை வியாபாரம் நடந்தது. சுமார் 1,500 ஆடுகள் விற்பனையானது.

    • செஞ்சி வாரச்சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    • வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கி ழமை தோறும் நடைபெறும் வார சந்தையில் ஆட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் பெரும்பாலும் விவசாய நிலங்களிலும், மலைப்பகுதி யிலும் மேய்க்கப்பட்டு வளர்க்கப்படுவதால் செஞ்சி பகுதியில் உள்ள ஆடுகளை வாங்க தேனி, கம்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், ஆம்பூர், வேலூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரி கள் ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம்.

    வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று நடை பெற்ற வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தைக்கு விவசாயி கள் மற்றும் ஆடுகளை வளர்ப்பவர்களும் அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த னர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் ரூ. 5 கோடி வரை விற்பனை அமோகமாக நடைப்பெற்றது. சுமார் 4 மணி நேரத்திலேயே ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகளும் ஆடு வளர்ப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்த னர்.

    • தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் கால்நடை சந்தைகளில் விற்பனை அதிகரித்துள்ளது
    • ஆடுகள் விலை ரூ.4 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் கால்நடை சந்தைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு இன்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் குவிந்தனர். அங்கு ஆடுகள் விலை ரூ.4 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.இன்று ஒரே நாளில் லட்ச க்கணக்கில் வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.



    • விராலிமலையில் ஆட்டு சந்தை களை கட்டியுள்ளது
    • வர்த்தகம் ஒரு கோடியை தாண்டியது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை அப்பகுதிகளில் மிகவும் பிரபலமாகும். அதிகாலை தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் முதல் நாள் இரவே லோடு வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை வாங்கி செல்லுவது வழக்கம்.

    அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்து விராலிமலை சந்தையில் ஆடுகளை வாங்கி செல்வது என்பது விராலிமலை ஆடுகளின் தனி சிறப்பாகும். இயற்கையான முறையில் மட்டுமே வளர்க்கப்படும் இந்த ஆடுகளை இறைச்சி கடைக்காரர்கள் மாமிசமாக விற்கும் போது மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்வதாக இறைச்சிக்கடைக்காரர்கள் கூறுகின்றனர். பல்வேறு சிறப்புகள் பெற்ற விராலிமலை வார சந்தை வழக்கம் போல் இன்று அதிகாலை கூடியது. ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வர தொடங்கியதை தொடர்ந்து வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகளின் விலையைப் பொறுத்தவரை சராசரியான தொகைக்கே ஆடுகள் விற்கப்பட்டன. காலை 7:30 மணி நிலவரப்படி ஒரு கோடியையும் தாண்டி வர்த்தகம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

    • வடமதுரை, அய்யலூர் பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • இதனால் ஆடு, கோழிகள் வாங்க அய்யலூர் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர்

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவ ட்டம் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடி வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கால்நடைகள், காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்து கால்நடைகளை வாங்கிச் செல்கின்றனர்.

    கோவில் திருவிழாவுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் கிராமங்களில் அதிக அளவில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள்தங்கள் வேண்டுதல் நிறைவேறி யவுடன் கிடா வெட்டு தல் உள்ளிட்ட நேர்த்திக்க டன்களை செலுத்தி வரு கின்றனர்.

    இதனால் அய்யலூர் சந்தையில் அதிக அளவு வியாபாரிகள் வந்தனர். மேலும் ஆடு மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கோவில் திருவிழாக்களில் பெரும்பாலும் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதால் சந்தையில் கிடா அதிக அளவில் விற்பனையானது. எடை மற்றும் தரத்துக்கு ஏற்ப ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. நாட்டுக்கோழி 1 கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விலை கேட்கப்பட்டது. மேலும் செம்மறி ஆடுகள் மற்றும் சேவல்களும் அதிக அளவு விற்கப்பட்டன.

    வாரம் தோறும் கூடும் அய்யலூர் சந்தையில் குடிநீர் மற்றும் மின் விளக்கு வசதி இல்லாததால் வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் ஆடு வாங்க வரும் வியாபாரிகள் பணத்தை ஒரு வித அச்சத்துடனேயே கொண்டு வருகின்றனர். இருளை பயன்படுத்தி மர்ம நபர்கள் கை வரிசை காட்டி வருகின்றனர்.

    எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




    ×