search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை ஆட்டு சந்தையில் ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    ராணிப்பேட்டை ஆட்டு சந்தையில் ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • பொங்கலை முன்னிட்டு நடந்தது
    • வழக்கமாக 11 மணிக்கு முடியும் சந்தை 1 மணி வரை நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கி ழமை சந்தை நடைபெற்று வருகிறது.

    சூடு பிடித்த ஆட்டு சந்தை

    இங்கு காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், கீரைகள், கடலை, தினை வகைகள் என விதவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்படும். நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த பொருட்களை இங்கு எடுத்து வந்து விற்பனை செய்வார்கள்.

    குறிப்பாக ராணிப் பேட்டை ஆட்டுச்சந்தை மிக வும் பிரபலமானது. ராணிப்பேட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள் விற்பனைக்காக ஆடுகளை சந்தைக்கு கொண்டு வருவார்கள். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, காஞ்சீபு ரம், திருவள்ளூர், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடு களை வாங்க வருவார்கள். பண்டிகை காலங்களில் இந்த ஆட்டுச்சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்படும்.

    வழக்கம்போல நேற்று ஆட் டுசந்தை நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஆட்டுச்சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்பட் டது. வழக்கத்தை விட அதிக மான ஆடுகள் மினி லாரி, வேன்களில் அதிகாலையிலேயே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள், ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஆடுகளின் எடை, தரத்திற்கு தகுந்தபடி பேரம் பேசி போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். குட்டி ஆடுகள் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5,000 வரை விலைபோனது. நடுத்தர ஆடுகள் ரூ.7 ஆயிரத் தில் இருந்து ரூ.10,000 வரையி லும், பெரிய ஆடுகள் அதிக பட்சமாக ரூ.15,000 வரையி லும் விலை போனதாக வியா பாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    இந்த ஆட்டுச் சந்தையில் வழக்கமாக ரூ.50 லட்சம் வரை வியாபாரம் நடைபெ றும். ஆனால் நேற்று ரூ.1கோடியே 25 லட்சம் வரை வியாபாரம் நடந்தது. சுமார் 1,500 ஆடுகள் விற்பனையானது.

    Next Story
    ×