search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களைகட்டிய வீரசோழன் ஆட்டுச்சந்தை
    X

    களைகட்டிய வீரசோழன் ஆட்டுச்சந்தை

    • தீபாவளியை முன்னிட்டு வீரசோழன் ஆட்டுச்சந்தை களைகட்டியது.
    • ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள வீரசோழன் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. பல ஆண்டுகளாக பாரம்பரிய மிக்க இந்த சந்தையானது வாரந்தோறும் திங்கட் கிழமை நடைபெறு வது வழக்கம். மேலும் வீர சோழன் சந்தையானது தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் பண்டிகைகளில் ஆடு வியாபாரம் களை கட்டும்.

    வாரம்தோறும் நடை பெறும் இந்த சந்தைக்கு விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடுகள், கோழிகளை விற்பனை செய்யவும், வாங்கவும் வந்து செல்கின்றனர்.

    வருகிற 12-ந்தேதி தீபா வளி பண்டிகை கொண்டா டப்பட உள்ளது. இதை யொட்டி வீரசோழன் வாரச் சந்தை நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதலே வீரசோழன் வாரச்சந்தை திடலில் திரளாக கூடிய ஆட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக ளவில் ஆடுகள் மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர்.

    வீரசோழன் வாரச்சந்தை யில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான சுமார் 1200-க்கும் மேற் பட்ட ஆடுகள் விற்பனை யான தாகவும் அதன் மூலம் சுமார் ரூ.95 லட்சம் ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெற்றதாகவும் வீரசோழன் டிரஸ்ட் போர்டு நிர்வாகம் தெரிவிந்துள்ளது.

    மேலும் வருகிற 12-ந்தேதி கொண்டா டப்படும் தீபாவளி பண்டி கையானது ஞாயிற்றுக்கி ழமை கொண்டாடப்படு வதால் வழக்கமாக திங்கட் கிழமை நடைபெறுகின்ற வீரசோழன் வாரச்சந்தையை பொதுமக்களின் நலன் கருதி 11-ந் தேதி அதாவது முன் கூட்டியே சனிக்கிழமை நடைபெறும் எனவீரசோழன் டிரஸ்ட் போடு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் அன்றைய தினம் (சனி) எட்டையாபுரம், இளையான்குடி பகுதிகளில் வாரச்சந்தை செயல் படுவதால் தீபாவளிக்கு முதல் நாள் அதாவது சனிக்கிழமை நடைபெறவுள்ள வீர சோழன் வாரச்சந்தையில் ஆடு விற்பனை சற்று குறை வதற்கும் அதிக வாய்ப்புள்ள தாக டிரஸ்ட் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×