search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை
    X

    தீபாவளி முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

    • குறைந்த அளவிலான ஆடுகளே கொண்டுவரப்பட்டன
    • விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆட்டு சந்தை நடக்கிறது.

    இங்கு காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

    இந்த ஆட்டுச் சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று சிறப்பு ஆட்டுச்சந்தை நடந்தது. இதில் குறைந்த அளவிலான ஆடுகளே கொண்டுவரப்பட்டன. விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டதால் ஏராளமான ஆடுகள் விற்பனையாகாமல் வியாபாரிகள் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி எடுத்துச் சென்றனர்.

    Next Story
    ×