என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பக்ரீத் பண்டிகை- சென்னைக்கு 70 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக வருகிறது
- ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையிலும் ஆயிரக்கணக்கான ஆடுகள் ஆண்டுதோறும் வெட்டப்படுவது வழக்கம்.
- தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக வருகிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் இறைச்சிக்காக ஆடுகள் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி இருக்கிறது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையிலும் ஆயிரக்கணக்கான ஆடுகள் ஆண்டுதோறும் வெட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு 50 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்காக வரவழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க பொதுச் செயலாளரான ராயபுரம் அலி கூறும்போது, "இந்த ஆண்டு ரம்ஜானுக்காக வருகிற 23-ந்தேதி மாலையில் இருந்தே ஆடுகள் விற்பனைக்காக வர இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக வருகின்றன. ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரையில் ஆடுகள் தரத்துக்கு ஏற்ப விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில ஆடுகள் மட்டுமே ரூ.40 ஆயிரம் வரையில் விலை போகும் என்று எதிர்பார்க்கிறோம். எப்போதுமே பக்ரீத் பண்டிகையை ஒட்டி கொம்பு வளர்ந்த ஆடுகளையே விரும்புவார்கள்.
அந்த வகையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஆடுகளே கொம்புகளுடன் காணப்படும். இதன் காரணமாகவே தென் மாநிலங்களை சேர்ந்த ஆடுகளுக்கு பக்ரீத் பண்டிகையையொட்டி கிராக்கி இருக்கும் அந்த வகையில் இந்த ஆண்டும் கொம்பு வைத்த ஆடுகளே வர வழைக்கப்படுகின்றன.
ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள ஆடுகளுக்கு கொம்பு இருக்காது. இதனை பக்ரீத் பண்டிகையை யொட்டி வெட்டுவதற்கு விரும்ப மாட்டார்கள். சென்னையில் ரெட்டேரி சந்தை, புளியந்தோப்பு, ஆட்டு தொட்டி, தாம்பரம் சந்தை, வில்லிவாக்கம் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஆடுகள் விற்பனை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்