என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜூன் 7ம் தேதி பக்ரீத் பண்டிகை- தலைமை காஜி அறிவிப்பு
- இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
- நாளை துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை, அடுத்த மாதம் ஜூன் 7 (சனிக் கிழமை) கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவிப்பு.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," சென்னையில் இன்று துல் ஹஜ் பிறை காணப்பட்டதை அடுத்து நாளை துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் வரும் ஜூன் 7ம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story






