search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி"

    • விவசாயிகள் அனைவருக்கும் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
    • முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு தோட்டக்க லைத்துறை அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

    இதில் துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராசு, தோட்டக்கலை துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா, ராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.

    இதில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.

    குமாரபாளையத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட் கட்டப்பட உள்ளது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  2 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட்  கட்டப்பட உள்ளது. 

    கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில்  அமைக்க,  சேர்மன் விஜய்கண்ணன், நகராட்சி கமிஷனர், பொறியாளர் மற்றும் கவுன்சிலர்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டது.

    ×