search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore market"

    வேலூரில் சாலையோரம் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மர்மகும்பல் திருடி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதன் (வயது 33). இவர் நேதாஜி மார்க்கெட் எதிரில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்று விட்டனர். பலவன்சாத்து கிராமத்தை சேர்ந்த ஆசிர்வாதம் மகன் பிரேம்தாஸ் (வயது 28). வேலூர் வந்த இவர் சி.எம்.சி. அவுட்கேட் அருகே காட்பாடி சாலையில் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றுவிட்டனர்.

    இது குறித்து வேலூர் வடக்கு குற்றபிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களை குறிவைத்து திருடி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை மணியக்கார தெருவை சேர்ந்த பாலு (55). இவரது பைக்கை வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்தார். அதனை மர்ம கும்பல் திருடி சென்றுவிட்டனர்.

    அம்மூர் கிருஷ்ணாநகரை சேர்ந்த பாஸ்கரன் (52) வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது. இதுபற்றி ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆற்காடு தாலுகா மய்யூர் கிராமத்தை சேர்ந்த பசுபதி (41) என்பவர் பரதராமியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனி அருகே பைக் நிறுத்திவிட்டு சென்றார்.அதனை திருடி சென்றுவிட்டனர். திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆடிக்கிருத்திகையொட்டி வேலூர் மார்க்கெட்டில் காய்கறி, பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    ஆடிவெள்ளி, ஆடிக்கிருத்திகையொட்டி கோவில்களில் திருவிழாக்கள் நடக்கின்றது. வேலூர் மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்கள், முருகர்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    இதையொட்டி பொதுமக்கள் சைவ பொருட்கள் சமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை களைகட்டியுள்ளது. ஆந்திரா, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து அதிகளவில் காய்கறிவரத்து உள்ளது. ஆனாலும் தேவை அதிகரிப்பால் வேலூர் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

    வரத்து மிகவும் அதிகரிப்பால் தக்காளி மட்டும் கிலோ ரூ.8 முதல் 10 வரை விற்பனை செய்யபடுகிறது. வேலூர் மார்க்கெட்டில் காய்கறி விலை 1 கிலோ விவரம் வருமாறு:

    தக்காளி-ரூ.10, கத்தரிக்காய்-ரூ.50, கேரட்- ரூ.40, பீன்ஸ்-ரூ50, அவரைக்காய்-ரூ.50, முள்ளங்கி-ரூ.15, வெள்ளரிக்காய்-ரூ.25, உருளைக்கிழங்கு-ரூ.20, முருங்கை-ரூ.30, சின்னவெங்காயம்-ரூ.40, பெரியவெங்காயம்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.40, புடலங்காய்-ரூ.20 க்கு விற்பனை செய்யபட்டது.

    ஆடிக்கிருத்திகையொட்டி பூக்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகை, முல்லைப்பூ கிலோ ரூ.200க்கும், சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.30, கேந்தி ரூ.40, ரோஜா ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இன்னும் 3 நாட்கள் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×