என் மலர்
நீங்கள் தேடியது "tag 97614"
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ-வை ரோடாப்சின் நிறமியாக மாற்ற உதவுகிறது. இது மாலை நேரம் அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள சூழலில் கண் பார்வையை மேம்படுத்தும் தன்மை கொண்டது.
குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் கொழுப்பில் 25 சதவீதம் வரை குறைப்பதற்கு வைட்டமின் ஏ உதவும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்கும். மேலும் முன்கூட்டியே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் கட்டுப்படுத்தும்.
கரோட்டினாய்டுகள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆன்டி ஆக்சிடென்டுகள், நீரிழிவு எதிர்ப்பு பண்புகள், கொழுப்பைக் குறைக்கும் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மைகளை கொண்டிருப்பதன் மூலம் இதய நோய்களை தடுப்பதற்கும் உதவுகின்றன.
நுரையீரல் மற்றும் சரும புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கவும் கரோட்டினாய்டுகள் உதவுகின்றன. கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த துணை புரிகின்றன. கரோட்டினாய்டு நிறமிதான், கேரட்டுக்கு தனித்துவமான நிறத்தை அளிக்கிறது.
இந்தியாவில் சுமார் 30 சதவீதம் பேர் கல்லீரல் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மரபணு காரணிகள் மற்றும் மாறுபட்ட வாழ்க்கை முறை காரணமாக இந்த நோய் உண்டாகிறது.
போதுமான அளவு கேரட்டை உட்கொள்வது, பிரக்டோஸ் உணவுகளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான கல்லீரலுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கேரட்டில் வைட்டமின் பி-6, நார்ச்சத்து இவை இரண்டும் அதிகம் உள்ளன. டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வைட்டமின் பி-1 மற்றும் பி-6 குறைபாடு ஏற்படக்கூடும்.
நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிக்க நார்ச்சத்து கொண்ட பொருட்களை உட்கொள்வது முக்கியமானது. உணவு மூலம் நார்ச்சத்தை பெறுவது டைப்-2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். மேலும் நார்ச்சத்து உட்கொள்வது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்கவும் உதவும்.
கேரட் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அதிகம் உட்கொள்வது ஆபத்தானது. குறிப்பாக கேரட்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் பீட்டா கரோட்டின் அளவு அதிகரித்து சருமத்தில் நிறமாற்றத்தையும் ஏற்படுத்தும்.
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ கேரட் விவசாயிகளிடம் இருந்து ரூ.20-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் நஷ்டம் அடைந்து வந்தனர். மேலும் தோட்ட பராமரிப்பு செலவை கூட ஈடுகட்ட முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ கேரட் ரூ.45 முதல் ரூ.50 வரை கொள்முதல் விலை கிடைக்கிறது. தரத்துக்கு ஏற்ப விலை கிடைப்பதால் 2 மடங்காக விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கழுவி சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் மூட்டைகளில் வாகனங்கள் மூலம் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச்செல்லப்படுகிறது.
ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் ஏலம் மண்டிகளில் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.6 முதல் ரூ.10, பீட்ரூட் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.30, பீன்ஸ் ரூ.60, டர்னீப் ரூ.50, நூல்கோல் ரூ.50, முள்ளங்கி ரூ.15 முதல் ரூ.20, மேரக்காய் ரூ.10 வரை விலை கிடைக்கிறது. மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து உள்ளது.
இருப்பினும் சமவெளி பகுதிகளில் தொடர் மழை பெய்வதால், அங்கிருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அந்த காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70 ஆக உயர்ந்து உள்ளது. பெரிய வெங்காயம் ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.60, வெண்டைக்காய் ரூ.120, கத்தரிக்காய் ரூ.120, பூண்டு ரூ.160 என விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும் முக்கிய காய்கறிப் பயிரான கேரட் 2300 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்சமயம் கேரட் நள்ளிரவில் கூலி ஆட்கள் கொண்டு அறுவடை செய்யப்பட்டு காலை 6 மணியளவில் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் சமூகப் பிரச்சினைகள் மற்றும் காட்டு விலங்குகள் விவசாய கூலி ஆட்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இனி வரும் நாட்களில் கேரட் நள்ளிரவு சமயத்தில் அறுவடை செய்வதை தவிர்த்து காலை 6 மணியளவில் அறுவடை செய்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு காலை 10 மணிக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட வேண்டும். கேரட் கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் இதன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகள் காலை 10 மணியளவில் கேரட் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அனைத்து கேரட் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்து இம்முறையினை தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை உயர்ந்து வருகிறது. ஆடி மாதம் முடிந்து ஆவணி முகூர்த்த நாட்கள் தொடங்கி உள்ளதால் தேவை அதிகரிப்பால் காய்கறி விலை உயர தொடங்கி உள்ளன.
கடந்த வாரத்தில் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட கேரட் தற்போது ரூ.55-க்கு விற்கப்படுகிறது. இதே போல ரூ.25-க்கு விற்பனையான கத்தரிக்காய் ரூ.35யாக உயர்ந்து உள்ளது.
அதிகபட்சமாக இஞ்சி ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை ஆனது. மற்ற காய்கறி விலை (கிலோவில்) விபரம் வருமாறு:-
காய்கறி விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பெருமளவு காய்கறிகள் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் காய்கறி வரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. வழக்கம் போல கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன.
கேரளாவில் பெய்து வரும் கன மழையால் அங்கிருந்து இஞ்சி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இஞ்சி விலை அதிகரித்து இருக்கிறது. தற்போது ஆவணி மாதம் தொடங்கி உள்ள நிலையில் திருமண முகூர்த்த நாள் அதிகம் என்பதால் காய்கறியின் தேவை அதிகரித்து விலை உயர்ந்து உள்ளன. இனிவரும் நாட்களில் காய்கறி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோத்தகிரி நெடுகுளா, கூக்கல்தொரை, ஈளடா உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் மலை காய்கறி கேரட், முட்டைகோஸ், உருளைகிழங்கு, பீட்ரூட், மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.
கணிசமான நிலப்பரப்பளவில் கேரட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டுபாளையம் மண்டிகளுக்கு தான் இங்கு விளைவிக்கப்படும். மலை காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ கேரட்டுக்கு அதிக பட்சமாக 8 ரூபாய் விலை மட்டுமே கிடைக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
தோட்ட பராமரிப்பு செலவினங்களை கடந்து அறுவடைசெய்த கேரட் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூலி மற்றும் லாரி வாடகை என கணக்கிட்டால் விவசாயிகளுக்கு ஒரு கிலோ கேரட் குறைந்தப்பட்சம் 50 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால் மேட்டுபாளையம் கமிஷன் மண்டியில் 8 ரூபாய்க்கு விலை கிடைப்பதால் செலவிட்ட முதலீடு கூட விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான தோட்டங்களில் அறுவடைக்கு தயாராகியும் அறுவடை செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மழை பெய்தாலும் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கேரட் தோட்டம் அழுகிவிடும் அபாயம் உள்ளது.






