search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் கவலை
    X

    கோத்தகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

    கோத்தகிரியில் கேரட் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நெடுகுளா, கூக்கல்தொரை, ஈளடா உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் மலை காய்கறி கேரட், முட்டைகோஸ், உருளைகிழங்கு, பீட்ரூட், மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.

    கணிசமான நிலப்பரப்பளவில் கேரட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டுபாளையம் மண்டிகளுக்கு தான் இங்கு விளைவிக்கப்படும். மலை காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ கேரட்டுக்கு அதிக பட்சமாக 8 ரூபாய் விலை மட்டுமே கிடைக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    தோட்ட பராமரிப்பு செலவினங்களை கடந்து அறுவடைசெய்த கேரட் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூலி மற்றும் லாரி வாடகை என கணக்கிட்டால் விவசாயிகளுக்கு ஒரு கிலோ கேரட் குறைந்தப்பட்சம் 50 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால் மேட்டுபாளையம் கமி‌ஷன் மண்டியில் 8 ரூபாய்க்கு விலை கிடைப்பதால் செலவிட்ட முதலீடு கூட விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

    பெரும்பாலான தோட்டங்களில் அறுவடைக்கு தயாராகியும் அறுவடை செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மழை பெய்தாலும் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கேரட் தோட்டம் அழுகிவிடும் அபாயம் உள்ளது.
    Next Story
    ×