search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilgiris Collector"

    நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி. அம்ரித் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியை சேர்ந்தவர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டராக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்றார். இந்த நிலையில் யானைகள் வழித்தட பிரச்சினை தொடர்பாக இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்திருந்தது.

    இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மற்ற மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோதும், இவர் நீலகிரி மாவட்ட கலெக்டராகவே தொடர்ந்தார்.

    சுப்ரீம் கோர்ட்

    இந்த நிலையில் நீலகிரி கலெக்டரை பணிமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு கேட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு அவரை இடமாற்றம் செய்ய அனுமதி கொடுத்தது.

    இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த எஸ்.பி.அம்ரித்தை நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமித்து தமிழக அரசு நேற்று அறிவித்தது.

    இதையடுத்து அவர் இன்று காலை நீலகிரி வந்தார். பின்னர் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற எஸ்.பி.அம்ரித், கோப்புகளில் கையெழுத்திட்டு நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி. அம்ரித் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியை சேர்ந்தவர். 1988-ம் ஆண்டு பிறந்த இவர் 2013-ம் ஆண்டு தமிழக அரசு பணியில் சேர்ந்தார். இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் மொழிகளை நன்கு அறிந்தவர். மேலும் இவர் ஏற்கனவே மதுரை மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார்.


    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலியாக நீலகிரி மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக எஸ்.பி.அம்ரித்தை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் அங்குள்ள யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வந்தார். அங்கு கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனை எதிர்த்து அதன் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இன்னசென்ட் திவ்யாவை இடம் மாற்றம் செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாக இணை ஆணையர் எஸ்.பி.அம்ரித் நீலகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.

    எஸ்.பி.அம்ரித், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். 1988-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த அவர், 2013-ம் ஆண்டு தமிழக அரசு பணியில் சேர்ந்தார். அவர் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை நன்கு அறிந்தவர். ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக இருந்துள்ளார்.
    நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.74,600 அபராதம் விதித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள்,11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது மற்றும் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வினை வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு ஒட்டு மொத்த கள ஆய்வு மண்டல அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர், மற்றும் கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துணை கலெக்டர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து, மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் ஆய்வின் போது, தடை செய்யப்பட்ட, 28.100கி.கி எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதத் தொகையாக ரூ.74,600 வசூல் செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும்,சுற்றுலா மற்றும் வெளியூர் பயணிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்து நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாத்திட வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
    நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் கேரட் அறுவடை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும் முக்கிய காய்கறிப் பயிரான கேரட் 2300 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்சமயம் கேரட் நள்ளிரவில் கூலி ஆட்கள் கொண்டு அறுவடை செய்யப்பட்டு காலை 6 மணியளவில் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் சமூகப் பிரச்சினைகள் மற்றும் காட்டு விலங்குகள் விவசாய கூலி ஆட்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இனி வரும் நாட்களில் கேரட் நள்ளிரவு சமயத்தில் அறுவடை செய்வதை தவிர்த்து காலை 6 மணியளவில் அறுவடை செய்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு காலை 10 மணிக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட வேண்டும். கேரட் கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் இதன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகள் காலை 10 மணியளவில் கேரட் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அனைத்து கேரட் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்து இம்முறையினை தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    லாரிகள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பஸ்களில் இலவசமாக காய்கறிகளை எடுத்து செல்லலாம் என நீலகிரி கலெக்டர் அறிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, லாரிகள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக விவசாயிகள் தங்கள் பகுதிகளிலிருந்து விவசாய பொருட்களை சந்தைக்கு தினமும் எடுத்துச் செல்லவும் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்தில் எவ்வித கட்டணமுமின்றி எடுத்துச் செல்லலாம். கூடுதல் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல அரசு பஸ் இதற்காக தனியாக வாடகைக்கு வழங்கப்படும் எனவும், மேலும் விவரங்களுக்கு அரசு போக்குவரத்துறையை தொடர்பு கொள்ளலாம் என அதில் அறிவித்துள்ளார். #tamilnews
    ×