என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுவை பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு
- பகுதி வாரியாக கடைகளை கட்ட வலியுறுத்தல்
- மார்க்கெட் கட்டுமானப் பணி நடைபெறும் இடைப்பட்ட காலத்தில் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை நகரின் மைய பகுதியான ரங்கப்பிள்ளை வீதி நேரு வீதி இடையில் பெரியமார்க்கெட் உள்ளது.
இங்கு 500-க்கும் மேற்பட்ட நிரந்தர கடை களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடிக்காசு கடை களும் உள்ளது. நாளுக்குநாள் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மார்க்கெட் நெரிசல் மிகுந்த பகுதியாக மாறியுள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு உள்ளது.
இதை கருத்தில்கொண்டு மார்க்கெட்டை முழுமையாக இடித்துவிட்டு, ரூ.36 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மார்க்கெட்டை நவீனப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
மார்க்கெட் கட்டுமானப் பணி நடைபெறும் இடைப்பட்ட காலத்தில் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்திருந்தனர்.
இதற்காக ரோடியர் மில் திடலுக்கு தற்காலிகமாக பெரிய மார்க்கெட்டை மாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் வருவாய் இழப்பு நேரிடும்.
கடைகளின் பொருட்க ளுக்கு பாதுகாப்பு இருக்காது. குறித்து காலத்தில் பணிகளை முடித்து மீண்டும் கடைகளை ஒப்படைக்க ஆண்டுக் கணக்கில் காலதாமதம் ஏற்படும். எனவே ஒட்டு மொத்தமாக இடிக்காமல், பகுதி, பகுதியாக கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதை வலியுறுத்தி இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியமார்க்கெட்டில் உள்ள மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் அடைத்து வியாபாரிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் வியாபாரிகள் அனைவரும் திருவள்ளுவர் நகரில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்.
கூட்டத்துக்கு மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொறுப் பாளர்கள் சிவகுருநாதன், சுப்பிரமணி, பாலாகுமார், குருசாமிநாயுடு, முருகன், அருள், சுரேஷ், ஆறுமுகம், உதயகுமார், செல்வம், செல்வக்குமார், ஜெயவேல், ரமா, மலர், மணி, இப்ராகிம், கந்தசாமி, கணபதி, ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்த னர்.
ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செய லாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பெரிய மார்க்கெட்டை ஒட்டு மொத்தமாக இடிப்பதை கைவிட்டு தேவையற்ற சில பகுதிகளை இடித்து கடைகளை கட்டி வியா பாரிகளுக்கு வழங்க வேண்டும். பழைய கடை களை இடிக்காமல் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும். கழிப்பறைகளை இடித்துவிட்டு நவீன கழிப்பிடங்களாகவும், உட்புற சாலைகளை சீரமைத்தும் தர வேண்டும்.
இந்த பணிகளை மேற்கொள்ள இடையூறாக இருக்கும் கடைகளை நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகத்தில் தற்காலிகமாக கடை அமைத்து செயல்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர். மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் கடைகளை திறந்த வியாபாரத்தை மேற்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்