என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mansoor Ali khan"
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் கடந்த 1 மாதத்துக்கும் மேலாகவே மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.
கட்சி சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். ஊர் மக்கள் அனைவரும் சாப்பிட வேண்டும் என்றால் விவசாயிகள் வாழ வேண்டும் என்று நூதன பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அழகம்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது மக்களை சந்தித்து நேரடியாக வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மன்சூர்அலிகான் நிலக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில் ரத்த அழுத்தம், உடல் சோர்வு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் அவருக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர்கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு முன்பாகவே தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்களோடு மக்களாக பழகி வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல் அருகில் உள்ள நத்தம் சுற்றுவட்டார விவசாய தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களிடமும், செந்துறை, சந்தைபேட்டை, மார்க்கெட்டுகளில் உள்ள வியாபாரிகளிடமும் வாக்கு சேகரித்தார்.
அவர் பொதுமக்களிடம் இயற்கைக்கு மாறான திட்டங்களை கொண்டுவரும் மத்திய மாநில அரசுகளை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம். மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நடந்தே சென்று பொதுமக்களிடம் ஜாலியாக பேசியபடி வாக்கு சேகரித்தார். என்னுடன் செல்பி எடுக்க நினைத்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். ஆனால் ஓட்டு மட்டும் எனக்கு போடுங்கள் என்றார். தொடர்ந்து அவரால் பேச முடியாததால் மன்சூர்அலிகானின் மகன் காஜாமீரான் தனது தந்தைக்காக வாக்கு கேட்டு பேசினார். #mansooralikhan #naamtamilarkatchi
திண்டுக்கல்:
பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது பிரசாரம் திண்டுக்கல் தொகுதி மக்களுக்கு சுவாரசியமாக மாறி இருக்கிறது. திரையில் பார்ப்பது போலவே காமெடியாக பேசி மக்களை சிரிக்க வைக்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
‘‘திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டி என் சொந்த ஊர். நானும் திண்டுக்கல் காரன்தான். நாம் தமிழர் கட்சி சார்பாக நிற்கிறேன். திண்டுக்கல் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
இங்கே மணல் முழுவதையும் அள்ளிட்டாங்க. பொன்மாந்துரை என்கிற கிராமத்துக்கு சென்றேன். அங்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை. இந்தியாவிலேயே தண்ணீர் இல்லாத கிராமமாக இருக்கிறது. என்னுடைய அலுவலகத்தை அந்தக் கிராமத்தில் தான் அமைக்கப் போகிறேன். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழன்தான் பிரதமராக வரவேண்டும். நான் எம்.பி ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து சீட்டை துடைத்து விட்டு வர மாட்டேன். எழுந்து நின்றுதான் கேள்வி கேட்பேன். கிராமங்களுக்குப் போகும் பொழுது நிறைய பேர் கேட்கிறார்கள். நீங்க ஜெயிச்சா நல்லது பண்ணுவீங்களான்னு.
நான் நல்லது பண்ண மாட்டேன். கெட்டதுதான் பண்ணுவேன். இந்த ஊருக்கு செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. கெட்டது பண்றவங்களுக்கு கெட்டது செய்யப்போறேன். பொள்ளாச்சி விஷயத்துல தவறு செய்த அவங்க தலையை வெட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #MansoorAliKhan #naamtamilarkatchi
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் ஆட்சிமாற்றம் வேண்டும் என்பதே நாடு முழுவதும் எதிரொலிக்கும் குரலாக உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கும் தோல்வியே கிடைக்கும். தற்போது மத்திய அரசை குறைகூறும் காங்கிரஸ் அரசும் ஆள்வதற்கு தகுதியற்ற அரசுதான்.
தமிழகத்தில் சீமான் தலைமையிலான எங்களது அணிக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகி வருகிறது. மாற்றத்தை எங்களிடம் இருந்து கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களை தமிழகத்தில் காலூன்ற வைத்து நீராதாரத்தை மத்திய- மாநில அரசுகள் அழித்துவிட்டன. இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை உள்பட தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினைகளுக்காக போராடி வந்தவர் முகிலன். தற்போது அவரை காணவில்லை. உயிரோடு உள்ளாரா? என்று கூட தெரியவில்லை. தொழில் நுட்பவசதி பெருகி உள்ள இந்த காலகட்டத்தில் மாயமான ஒருவரை கண்டுபிடிப்பது எளிதான காரியம்தான்.
ஆனால் போலீசார் அக்கறை காட்டாமல் உள்ளனர். அவரை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் கடத்தி கொலை செய்து இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம்தான் பொறுப்பு. எனவே போலீசார் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #mansooralikhan #mukilan #sterliteplant
சென்னை ஐகோர்ட்டில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் பல நடக்கின்றன. இதை என்னால் நிரூபிக்க முடியும்.
எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை தொடர்ச்சியாக 7 நாட்கள் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த துறையில் நிபுணர்களாக உள்ளவர்களை கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சோதனை செய்து, ஓட்டு எந்திரம் மூலம் தேர்தல் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிப்பேன் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடந்த ஜூலை 10-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து, ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதை நான் நிரூபிக்கும் விதமாக 7 நாட்கள், அந்த எந்திரத்தை என்னிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வக்கீல் இல்லாமல், மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி வாதிட்டார். இவரது கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர். #MansoorAlikhan
பிளாட்பார மனிதர்கள் பற்றி உருவாகி இருக்கும் படம் கபிலவஸ்து. கொள்ளிடம் படத்தை இயக்கிய நேசம் முரளி இயக்கி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இயக்குனர் சங்கத்தில் நடந்தது.
விழாவில் மன்சூர் அலிகான் பேசும்போது கூறியதாவது:-
நேற்று என் படத்துக்கு விலங்குகள் நல வாரியத்தின் தடை இல்லை என்பதற்காக சான்றிதழுக்கு விண்ணப்பிக்க சென்றேன்.
மைலாப்பூரில் இருந்த விலங்குகள் நல வாரியத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே அரியானா மாநிலத்துக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் என தெரிய வந்தது. சினிமா என்றாலே சென்னை தான். இங்கே தான் ஆயிரக்கணக்கில் சினிமா எடுக்கப்படுகிறது.
இங்கு இருந்து எப்படி வடமாநிலத்துக்கு கொண்டு செல்லலாம்? சினிமா சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? ஒரு காட்சியில் காக்கா குறுக்கே வந்தால் கூட படத்தை எடுத்துக்கொண்டு அரியானா ஓட வேண்டும். இது அநியாயம் இல்லையா? இது எல்லாம் பழி வாங்கல் தானே...
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடியதால் பழி வாங்கப்படுகிறோம். தமிழனைப் போல் விலங்கை நேசிப்பவர் யாரும் இல்லை. இதை எல்லாம் யார் கேட்பது? மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. வன்மையாக கண்டிக்கிறேன்.
தூங்கிக் கொண்டிருக்கும் போது நம் வீடு நமக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த மாதிரியான ஆட்சியில் மாட்டிக் கொண்டுள்ளோம். நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குனர் நேசம் முரளி பேசும்போது ‘நாளிதழ்களில் வரும் செய்திகளை வைத்து தான் நான் படம் எடுத்து இருக்கிறேன். இந்த படம் பிளாட்பார மனிதர்கள் பற்றிய உண்மை நிலையை விளக்கும்.
அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் ஆதரவில் தான் அனாதை ஆசிரமங்கள் இயங்குகின்றன. ஆனால் ஆதரவற்ற பிளாட்பார வாசிகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை. எங்கு திரும்பினாலும் பிச்சைக்காரர்கள்.
ஓட்டு வாங்க வரும் தலைவர்கள் அதன்பின்னர் ஒருநாள் கூட சுற்றுப்பயணம் வருவதில்லை. வெளி நாடுகளுக்கு தான் செல்கிறார்கள். வெளிநாட்டிலா நீங்கள் ஓட்டு வாங்கினீர்கள்?’ என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, ரமேஷ் கண்ணா இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்