search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mansoor Ali khan"

    நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அழகம்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது மயக்கமடைந்த நடிகர் மன்சூர்அலிகான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் கடந்த 1 மாதத்துக்கும் மேலாகவே மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    கட்சி சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். ஊர் மக்கள் அனைவரும் சாப்பிட வேண்டும் என்றால் விவசாயிகள் வாழ வேண்டும் என்று நூதன பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அழகம்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது மக்களை சந்தித்து நேரடியாக வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மன்சூர்அலிகான் நிலக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில் ரத்த அழுத்தம், உடல் சோர்வு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் அவருக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.



    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு அவரது மகன் அவருக்கு வாக்கு சேகரித்தார். #mansooralikhan #naamtamilarkatchi

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர்கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு முன்பாகவே தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்களோடு மக்களாக பழகி வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.

    திண்டுக்கல் அருகில் உள்ள நத்தம் சுற்றுவட்டார விவசாய தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களிடமும், செந்துறை, சந்தைபேட்டை, மார்க்கெட்டுகளில் உள்ள வியாபாரிகளிடமும் வாக்கு சேகரித்தார்.

    அவர் பொதுமக்களிடம் இயற்கைக்கு மாறான திட்டங்களை கொண்டுவரும் மத்திய மாநில அரசுகளை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம். மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து நடந்தே சென்று பொதுமக்களிடம் ஜாலியாக பேசியபடி வாக்கு சேகரித்தார். என்னுடன் செல்பி எடுக்க நினைத்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். ஆனால் ஓட்டு மட்டும் எனக்கு போடுங்கள் என்றார். தொடர்ந்து அவரால் பேச முடியாததால் மன்சூர்அலிகானின் மகன் காஜாமீரான் தனது தந்தைக்காக வாக்கு கேட்டு பேசினார். #mansooralikhan #naamtamilarkatchi

    பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றிபெற்றால் கெட்டது பண்றவர்களுக்கு கெட்டது செய்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். #MansoorAliKhan #naamtamilarkatchi

    திண்டுக்கல்:

    பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அவரது பிரசாரம் திண்டுக்கல் தொகுதி மக்களுக்கு சுவாரசியமாக மாறி இருக்கிறது. திரையில் பார்ப்பது போலவே காமெடியாக பேசி மக்களை சிரிக்க வைக்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    ‘‘திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டி என் சொந்த ஊர். நானும் திண்டுக்கல் காரன்தான். நாம் தமிழர் கட்சி சார்பாக நிற்கிறேன். திண்டுக்கல் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

    இங்கே மணல் முழுவதையும் அள்ளிட்டாங்க. பொன்மாந்துரை என்கிற கிராமத்துக்கு சென்றேன். அங்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை. இந்தியாவிலேயே தண்ணீர் இல்லாத கிராமமாக இருக்கிறது. என்னுடைய அலுவலகத்தை அந்தக் கிராமத்தில் தான் அமைக்கப் போகிறேன். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தமிழன்தான் பிரதமராக வரவேண்டும். நான் எம்.பி ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து சீட்டை துடைத்து விட்டு வர மாட்டேன். எழுந்து நின்றுதான் கேள்வி கேட்பேன். கிராமங்களுக்குப் போகும் பொழுது நிறைய பேர் கேட்கிறார்கள். நீங்க ஜெயிச்சா நல்லது பண்ணுவீங்களான்னு.

    நான் நல்லது பண்ண மாட்டேன். கெட்டதுதான் பண்ணுவேன். இந்த ஊருக்கு செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. கெட்டது பண்றவங்களுக்கு கெட்டது செய்யப்போறேன். பொள்ளாச்சி வி‌ஷயத்துல தவறு செய்த அவங்க தலையை வெட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MansoorAliKhan #naamtamilarkatchi

    சமூக செயற்பாட்டாளர் முகிலன் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம் தான் பொறுப்பு என்று நடிகர் மன்சூர்அலிகான் கூறியுள்ளார். #mansooralikhan #mukilan #sterliteplant

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் ஆட்சிமாற்றம் வேண்டும் என்பதே நாடு முழுவதும் எதிரொலிக்கும் குரலாக உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கும் தோல்வியே கிடைக்கும். தற்போது மத்திய அரசை குறைகூறும் காங்கிரஸ் அரசும் ஆள்வதற்கு தகுதியற்ற அரசுதான்.

    தமிழகத்தில் சீமான் தலைமையிலான எங்களது அணிக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகி வருகிறது. மாற்றத்தை எங்களிடம் இருந்து கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களை தமிழகத்தில் காலூன்ற வைத்து நீராதாரத்தை மத்திய- மாநில அரசுகள் அழித்துவிட்டன. இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை உள்பட தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினைகளுக்காக போராடி வந்தவர் முகிலன். தற்போது அவரை காணவில்லை. உயிரோடு உள்ளாரா? என்று கூட தெரியவில்லை. தொழில் நுட்பவசதி பெருகி உள்ள இந்த காலகட்டத்தில் மாயமான ஒருவரை கண்டுபிடிப்பது எளிதான காரியம்தான்.


    ஆனால் போலீசார் அக்கறை காட்டாமல் உள்ளனர். அவரை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் கடத்தி கொலை செய்து இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம்தான் பொறுப்பு. எனவே போலீசார் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #mansooralikhan #mukilan #sterliteplant

    கடமான் பாறை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், அப்பா இயக்கத்தில் நடிப்பது சிரமமாக இருந்ததாக கூறினார். #KadamanParai #AliKhanThuglak #MansoorAliKhan
    மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக். கடமான் பாறை படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். துக்ளக் அளித்த பேட்டியில் இருந்து, படிப்பு முடித்தபிறகு நடிக்க வரவே விரும்பினேன்.

    ஆனால் இந்த படத்துக்கு கல்லூரி மாணவர் வயது கதாநாயகன் தேவை என்பதால் அப்பா வற்புறுத்தி நடிக்க வைத்துவிட்டார். அப்பா இயக்கத்தில் நடித்தது சிரமமாக இருந்தது. மொபைலுக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாகி இருப்பதை மையமாக வைத்து திரில்லர் படமாக உருவாகி உள்ளது.



    சினிமாவுக்காக சண்டை, நடிப்பு, நடன பயிற்சிகள் எடுத்துள்ளேன். எதிர்காலத்தில் நன்றாக நடிக்க தெரிந்த கதாநாயகன் என்று பெயர் எடுக்க வேண்டும். பெரிய இயக்குனர்கள் படங்களில் நடிக்க ஆசை. இவ்வாறு அவர் கூறினார். #KadamanParai #AliKhanThuglak #MansoorAliKhan

    செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ரெஜினா கசாண்ட்ரா - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal
    தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.

    இதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.



    மறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.

    எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்புகளை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.



    கடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார்? ரெஜினாவாவை கரம்பிடித்தாரா? எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே நகைச்சுவையான மீதிக்கதை.

    ராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.



    சாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

    டோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது. 

    லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.



    இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.

    லியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்‌ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' சிரிப்புக்கு உத்தரவாதம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal #ReginaCassandra

    ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் வெளியாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் விமர்சனம். #EvanukkuEngeyoMatchamIrukkuReview #Vemal #AshnaZaveri
    விமல், சிங்கம் புலி இருவரும் மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். சிங்கம் புலி மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால், அவ்வப்போது சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்கிறார்கள்.

    யாராவது ஊருக்கு செல்வது இவர்களுக்கு தெரிய வந்தால், அந்த வீட்டில் நுழைந்து அங்கு சந்தேகம் வராத பொருட்களை, சின்ன சின்ன பொருட்களை மட்டும் திருடி எடைக்கு போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பிழைப்பை ஓட்டி வருகிறார்கள். இந்த நிலையில், விமல் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வரும் ஆஷ்னா சவேரி மீது விமலுக்கு காதல் வருகிறது.



    இந்த நிலையில், ஒருநாள் திருட செல்லும் போது ஒரு வீட்டில் இருந்து விமலுக்கு 5 லட்சம் பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது காதலியுடன் செட்டிலாகி விட நினைக்கிறார் விமல். அதேபோல் மற்றொரு வீட்டில் திருட செல்லும் சிங்கம் புலி அங்கிருந்து ஒரு பையை எடுத்து வருகிறார். அந்த பையில் என்ன இருக்கிறது என்று பார்க்க, அதிலும் லட்சக் கணக்கில் பணம் இருக்கிறது. இருவருமே இதை ஒருவருக்கொருவர் தெரியாமல் மறைக்கின்றனர்.

    இதற்கிடையே விமல், சிங்கம் புலி திருடிய பொருள் ஒன்றில் முக்கியமான பொருள் இருப்பதால், அவர்களிடம் இருந்து அந்த பொருளை மீட்பதற்காக ரவுடி கும்பல் ஒன்று அவர்களை தேடுகிறது. அதே நேரத்தில் போலீசான பூர்ணாவும் இருவரையும் தேடி வருகிறார்.



    கடைசியில், விமல், சிங்கம் புலி இருவரும் போலீசில் சிக்கினார்களா? ரவுடி கும்பல் அவர்களை கடத்தியதா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காதல், திருட்டு போன்ற காட்சிகளில் விமல் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சி புயல் மியாவிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் சிரிப்பை அள்ளுகிறார். சிங்கம் புலி குருவாக வர, விமல் அவருக்கு சிசியனாக படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் பங்காற்றியிருக்கின்றனர். சிங்கம் புலி வழக்கமான தனது காமெடியால் சிரிக்க வைக்கிறார்.

    ஆஷ்னா சவேரி காதலுடன் கவர்ச்சியையும் தூவிவிட்டு சென்றிருக்கிறார். மியா ராய் லியோன் கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார். மற்றபடி ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.



    காதல், காமெடி, கவர்ச்சி இவை மூன்றையுமே பொருளாக கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முகேஷ். முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் ஆனந்த் ராஜ் வருகைக்கு பின் படம் வேகமெடுக்கிறது. அடல்ட் காமெடி ஜானரில் இயக்குநர் கதையில் காட்டிய முக்கியத்துவத்தை திரைக்கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.

    சங்கர நாராயணன் நடராஜனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' சிறியதாக இருக்கு. #EvanukkuEngeyoMatchamIrukkuReview #Vemal #AshnaZaveri

    ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் மூலம் சன்னி லியோனின் சகோதரி மியா ராய் லியோன் தமிழில் அறிமுகமாகிறார். #IvanukkuEngaiyoMachamIruku
    விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்கியுள்ளார்.

    இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆபாச பட நடிகை மியா ராய் லியோன் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். இவர் சன்னி லியோனின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.



    ஐரோப்பிய பட உலகில் ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். இந்திய சினிமாவுக்கு வந்த சன்னி லியோன் ஆபாச படங்களை தவிர்த்து இந்தி, தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில், மியா ராய் லியோனும் இணைந்திருக்கிறார். படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #IvanukkuEngaiyoMachamIruku #MiaRaiLeone

    ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் முன்னோட்டம். #IvanukkuEngaiyoMachamIruku #Vemal #AshnaZaveri
    சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'.

    விமல் - ஆஷ்னா சவேரி நாயகன், நாயகியாக நடிக்க ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பூர்ணா போலீஸ் வேடத்திலும், ஐரோப்பிய பட உலகின் ஆபாச நாயகிகளில் ஒருவரான மியா ராய் லியோன் கவர்ச்சி வேடத்திலும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன், இசை - நடராஜன் சங்கரன், பாடல்கள் - விவேகா, கலை - வைரபாலன், நடனம் - கந்தாஸ், 
    ஸ்டண்ட் - ரமேஷ், படத்தொகுப்பு - தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை - சுப்ரமணி, தயாரிப்பு நிர்வாகம் - பி.ஆர்.ஜெயராமன், தயாரிப்பு - சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண், திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் - ஏ.ஆர்.முகேஷ்.



    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

    இது கிளாமர் கலந்த காமெடி படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம் என்றார்.

    படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #IvanukkuEngaiyoMachamIruku #Vemal #AshnaZaveri

    இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - டிரைலர்

    மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதாவை, 2வது மனைவியின் வாரிகளான லைலா அலிகான், மீரான் அலிகான் ஆகியோர் அவரை தாக்கியுள்ளனர். #MansoorAliKhan
    நடிகர் மன்சூர் அலிகானின் 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா. இவரது 2வது மனைவியின் வாரிசுகளான மகள் லைலா அலிகான் (வயது சுமார் 22), மகன் மீரான் அலிகான் (வயது சுமார் 15) ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர். 

    இந்த சம்பவம் நடக்கும் வேளையில் மன்சூர் அலிகான் மற்றும் அவருடைய 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ள வஹிதா தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான், ஹமீதா, லைலா அலிகான் மற்றும் மீரான் அலிகான் மீது புகார் தெரிவித்துள்ளார்.

    பின்னர் வஹிதா அவருடைய சகோதரியுடன் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #MansoorAlikhan
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் பல நடக்கின்றன. இதை என்னால் நிரூபிக்க முடியும்.

    எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை தொடர்ச்சியாக 7 நாட்கள் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த துறையில் நிபுணர்களாக உள்ளவர்களை கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சோதனை செய்து, ஓட்டு எந்திரம் மூலம் தேர்தல் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிப்பேன் என்று இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடந்த ஜூலை 10-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து, ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதை நான் நிரூபிக்கும் விதமாக 7 நாட்கள், அந்த எந்திரத்தை என்னிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வக்கீல் இல்லாமல், மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி வாதிட்டார். இவரது கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.  #MansoorAlikhan
    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடியதால் பழி வாங்கப்படுகிறோம் என்று கபிலவஸ்து பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
    சென்னை:

    பிளாட்பார மனிதர்கள் பற்றி உருவாகி இருக்கும் படம் கபிலவஸ்து. கொள்ளிடம் படத்தை இயக்கிய நேசம் முரளி இயக்கி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இயக்குனர் சங்கத்தில் நடந்தது.

    விழாவில் மன்சூர் அலிகான் பேசும்போது கூறியதாவது:-

    நேற்று என் படத்துக்கு விலங்குகள் நல வாரியத்தின் தடை இல்லை என்பதற்காக சான்றிதழுக்கு விண்ணப்பிக்க சென்றேன்.

    மைலாப்பூரில் இருந்த விலங்குகள் நல வாரியத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே அரியானா மாநிலத்துக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் என தெரிய வந்தது. சினிமா என்றாலே சென்னை தான். இங்கே தான் ஆயிரக்கணக்கில் சினிமா எடுக்கப்படுகிறது.

    இங்கு இருந்து எப்படி வடமாநிலத்துக்கு கொண்டு செல்லலாம்? சினிமா சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? ஒரு காட்சியில் காக்கா குறுக்கே வந்தால் கூட படத்தை எடுத்துக்கொண்டு அரியானா ஓட வேண்டும். இது அநியாயம் இல்லையா? இது எல்லாம் பழி வாங்கல் தானே...

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடியதால் பழி வாங்கப்படுகிறோம். தமிழனைப் போல் விலங்கை நேசிப்பவர் யாரும் இல்லை. இதை எல்லாம் யார் கேட்பது? மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. வன்மையாக கண்டிக்கிறேன்.

    தூங்கிக் கொண்டிருக்கும் போது நம் வீடு நமக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த மாதிரியான ஆட்சியில் மாட்டிக் கொண்டுள்ளோம். நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக நடக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இயக்குனர் நேசம் முரளி பேசும்போது ‘நாளிதழ்களில் வரும் செய்திகளை வைத்து தான் நான் படம் எடுத்து இருக்கிறேன். இந்த படம் பிளாட்பார மனிதர்கள் பற்றிய உண்மை நிலையை விளக்கும்.

    அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் ஆதரவில் தான் அனாதை ஆசிரமங்கள் இயங்குகின்றன. ஆனால் ஆதரவற்ற பிளாட்பார வாசிகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை. எங்கு திரும்பினாலும் பிச்சைக்காரர்கள்.

    ஓட்டு வாங்க வரும் தலைவர்கள் அதன்பின்னர் ஒருநாள் கூட சுற்றுப்பயணம் வருவதில்லை. வெளி நாடுகளுக்கு தான் செல்கிறார்கள். வெளிநாட்டிலா நீங்கள் ஓட்டு வாங்கினீர்கள்?’ என்றார்.

    நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, ரமேஷ் கண்ணா இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ×