search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mansoor Ali khan"

    • மன்சூர் அலிகானின் வீடு நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளது.
    • வழக்கின் முக்கிய ஆவணங்களாக மன்சூர் அலிகான் பேசியுள்ள ஆடியோக்களை சேர்க்க உள்ளனர்.

    சென்னை:

    நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மன்சூர் அலிகான் மீது தகுந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் நேற்று பிற்பகல் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 354-ஏ, ஐ.பி.சி. (பெண்களின் உணர்வுக்கு குந்தகம் விளைவித்தல்), 509 ஐ.பி.சி. (பெண்களை இழிவுபடுத்தி பேசுவது) ஆகிய 2 சட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த 2 சட்டப் பிரிவுகளும் 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அனுபவிக்கக் கூடிய சட்டப் பிரிவுகளாகும். இந்த வழக்கில் மன்சூர் அலிகான் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, 'மன்சூர் அலிகானிடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்ப உள்ளோம். இந்த சம்மன் இன்று அனுப்பப்படும். மன்சூர் அலிகானை போலீஸ் நிலையத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இதன் பின்னர்தான் அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பது தெரிய வரும் என்று தெரிவித்தனர்.

    மன்சூர் அலிகானின் வீடு நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளது. அவரது வீடு இருக்கும் எல்லையில் உள்ள ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார்தான் திரிஷா மீதான அவதூறு கருத்துக்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேட்டி அளித்த வீடியோ மற்றும் அதன் பிறகு அவர் பேசிய வீடியோக்கள் ஆகியவைகளை இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களாக போலீசார் கருதுகிறார்கள். வழக்கின் முக்கிய ஆவணங்களாக மன்சூர் அலிகான் பேசியுள்ள இந்த ஆடியோக்களை சேர்க்க உள்ளனர்.

    இதற்காக அவர் பேசிய வீடியோக்களையும் போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். வழக்கு விசாரணையின் போது இந்த வீடியோக்களை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகர் சங்கம் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள நிலையில், போலீசார் அவர் மீது வழக்கு போட்டிருப்பதால் அவர் மீதான பிடி இறுகியுள்ளது.

    • திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
    • இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    சென்னை:

    லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. நடிகைகள் திரிஷா, மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

    இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டிப்பாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நடிகை த்ரிஷா புகார் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியுமாறு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    • லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாக உருவெடுத்தது.
    • அவரது கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

    சென்னை:

    லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மன்சூர் அலிகானின் இந்தக் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

    இதற்கிடையே, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் சொன்ன ஸ்டேட்மெண்ட்டு, தமிழிசை செளந்தரராஜன் அம்மா வரைக்கும் போயிருச்சி. அது மட்டுமா.. குஷ்பூ மேடம் உடனே, மகளிர் ஆணையத்திடம் சொல்லி ஆக்சன் எடுக்க வைப்பேனு சொல்றாங்க. அடேங்கப்பா.. பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பா இருக்காங்கப்பா.

    ஆனால் ஒரு விஷயம் எனக்கு புரியல. ஆகஸ்டில் நானும் வீரலட்சுமியும் வந்து சீமான் மேல கம்ப்ளெய்ன்ட் பண்ணோம் இல்லையா.. அப்போ சீமானும், நாம் தமிழர் கட்சிக்காரங்களும் என்னையும், வீரலட்சுமியையும் ரொம்ப கொச்சையா பேசுனாங்க. ரொம்ப ஆபாசமா பேசுனாங்க.

    இதனால எனக்கு மன அழுத்தம் அதிகமாகி குஷ்பு மேடமுக்கு வீடியோ போட்டே சீமான் மீது நடவடிக்கை எடுக்க சொன்னேன். ஆனால் மேடம் கண்டுக்காமயே விட்டுட்டாங்க. ஏன்? ஒருவேளை, பா.ஜ.க.வுக்கு ஒரு பிரச்சினைனா சீமான் வந்து குரல் கொடுக்குறாரே.. அந்த நன்றியா இருக்குமோ என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரிஷா குறித்து நான் தவறாக பேசவே இல்லை.
    • கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும்.

    லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. நடிகைகள் திரிஷா, மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.


    இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானை தென்னிந்தியா நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம். மேலும் தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என கூறியிருந்தது.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், திரிஷாவை நான் பாராட்டி பேசியதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். திரிஷா குறித்து நான் தவறாக பேசவே இல்லை. நான் மன்னிப்பு கேட்கக்கூடியவனா? எரிமலை குமுறினால் எல்லோரும் ஓடிப்போய் விடுவீர்கள். நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது. கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும். என்னை கருப்பு ஆடாக காட்டி விட்டு நடிகர் சங்கம் நல்ல பேர் எடுக்க முயற்சி செய்கிறது என கூறினார்.

    • விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • லியோ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் லியோ. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருக்கும் லியோ படம் 12 நாளில் 540 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    இதனை கொண்டாடும் வகையில், படக்குழு லியோ வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது. இந்த வெற்றி விழா சென்னை நேரு உள்-விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் மன்சூர் அலிகான் மற்றும் படக்குழுவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய மன்சூர் அலிகான், "சிவாஜி பேசிய சக்சஸ் வசனம் பேசிய இடத்தில் இருந்து விஜய்யின் நாளைய தீர்ப்பு திரைப்படம் ஆரம்பம் ஆனது. இன்று தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய். நடு ராத்தரியில் போன் செய்து லியோ படத்தில் ஏன் பிளாஷ்பேக் பொய் சொன்ன என்று கலாய்க்கிறார்கள். யாரும் படத்தை பார்த்து தம், சரக்கு அடிக்காதீர்கள். அது எல்லாம் சும்மா, பொய். விஜய் ரசிகர்கள் நாளைய தீர்ப்பை எழுத தயாராக இருங்கள்," என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1000 கோடி வசூலுக்கு பாடுபடுகிறோம்.
    • என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் லியோ. இந்த படத்தில் விஜய் மற்றும் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மன்சூர் அலி கானும் லியோ படத்தில் நடித்திருக்கிறார்.

    இந்த நிலையில், லோகேஷ் கனகராஜூக்கு நடிகர் மன்சூர் அலி கான் வித்தியாசமான கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில்,

    "500 கோடி முதல் போட்டு, லட்சம் பேருக்கு வேலை குடுத்து, ஒன்றை வருஷம் மெனக்கெட்டு, 1000 கோடி வசூலுக்கு பாடுபடுகிறோம்!

    ஆனா, அரசியல்வாதி ஒரு கையெழுத்து போட்டுட்டு, 10,000 கோடி, 20 ஆயிரம் கோடி ஆட்டய போட்டுறான்!

    லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல...

    அதவுட்டுட்டு, 'தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு' !! ..

    இல்லைனா வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி குடுக்கலாம்!

    500 மிலிட்டரி டேங்கர், 500 Armed air Craft எடுத்துட்டு வாங்க, போருக்கு போயி, எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சுட்டு வரலாம்! அப்பாவிங்க சாகறாங்க...

    சும்மா, டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில குடுத்துக்கிட்டு.......

    வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • லியோ படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
    • லியோ படத்தில் நடித்து இருக்கும் மன்சூர் அலி கான் சமீபத்தில் பேட்டி அளித்தார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் லியோ. விஜய் மற்றும் பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. படப்பிடிப்பை தொடர்ந்து படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

     

    இந்த நிலையில், லியோ படத்தில் நடித்து இருக்கும் மன்சூர் அலி கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரபல பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் லியோ படத்தில் நடித்து இருப்பதாக தெரிவித்து விட்டார். பிறகு, தெரியாமல் கூறிவிட்டேன் என்று நொந்து கொண்டார்.

    முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் வேடத்தில் அனுராக் காஷ்யப் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடைசி நாளில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். #Jyothika #Revathi
    ஜோதிகாவின் அடுத்தடுத்த படங்களை எஸ்.ராஜ் மற்றும் கல்யாண் இயக்கியுள்ளனர். ஜித்து ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இதில் கல்யாண் இயக்கத்தில் காமெடி படமாக உருவாகி இருக்கும் படத்தில் ஜோதிகாவுடன் ரேவதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.

    ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். விஜய் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Jyothika #Revathi #Suriya

    நிலக்கோட்டை மார்க்கெட்டில் மூட்டை தூக்கி தொழிலாளர்களிடம் மன்சூர்அலிகான் வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019 #MansoorAliKhan
    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தான் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பாகவே தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களோடு மக்களாக நெருங்கி பழகி வாக்குசேகரித்தார்.

    நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வத்தலக்குண்டு பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த நடிகர் மன்சூர்அலிகான் அங்கு குடிநீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களிடம் தண்ணீர் எத்தனை நாளைக்கு ஒருமுறை வருகிறது என கேட்டார்.

    உப்பு தண்ணீரைத்தான் நாங்கள் இப்போது பிடித்து செல்கிறோம். நல்ல தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். மஞ்சளாறு அணையில் இருந்து வரும் குடிநீர் முறையாக வினியோகம் செய்வதில்லை என்றனர். பிறகு எதற்காக குடிநீர் வரி கட்டுகிறீர்கள் என கேட்டார்.

    அதனைத் தொடர்ந்து சாலையோரம் இட்லி சுட்டு விற்றுக்கொண்டிருந்த மூதாட்டியிடம் சென்று தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் இட்லி தருமாறு கேட்டு திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டார். அதன்பின் அங்குள்ள காய்கறி வியாபாரிகளிடம் சென்று முருங்கைக்காய், மா, வெங்காயம், தக்காளி போன்றவற்றின் விலையை கேட்டறிந்து இது உங்களுக்கு லாபம் தரும் வகையில் உள்ளதா? என கேட்டார். எனக்கு வாக்களித்தால் விவசாயிகளின் விலை பொருளுக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

    இதனையடுத்து நிலக்கோட்டை மார்க்கெட்டுக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மூட்டைகளை தூக்கி வேன்களில் ஏற்றி உதவி செய்தார்.

    நான் திரைப்படங்களில் மட்டுமே வில்லனாக நடிப்பேன். இதனால் பார்க்கும் பலருக்கும் வில்லனாகவே எண்ணத்தோன்றும். நிஜ வாழ்க்கையில் காமெடி கலந்த சராசரி மனிதன்தான். விவசாயிகளின் கஷ்டத்தை நன்கு உணர்ந்தவன். எனவே என்னைப்போன்ற நபருக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என வாக்கு கேட்டு சென்றார்.  #LokSabhaElections2019 #MansoorAliKhan

    பழனியில் குதிரை வண்டி ஓட்டி மன்சூர் அலிகான் பிரசாரம் செய்து வருவது பொதுமக்களை கவர்ந்துள்ளது. #mansooralikhan

    பழனி:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார்.

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகளை தாலாட்டுவது, வளைகாப்பு வீட்டுக்கு செல்வது, புரோட்டா செய்வது, பஞ்சர் ஒட்டுவது என வித்தியாசமான முறையில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழனியில் வித்தியாசமான முறையில் மன்சூர்அலிகான் வாக்கு சேகரித்தது பொதுமக்களை கவர்ந்தது. உழவர் சந்தை, ஆர்.சி. சர்ச் பகுதியில் பாட்டு பாடி பிரசாரம் மேற்கொண்டார்.

    பின்னர் பஸ் நிலையம் அருகே குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரித்தார். சிறிது தூரம் குதிரை வண்டியில் பயணம் செய்து அப்பகுதி மக்களிடம் பிரசாரம் செய்தார். அம்பேத்கார் தெருவில் பைக்கில் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

    அடிவாரம் பகுதியில் ஆதரவற்ற மூதாட்டியிடம் கனிவுடன் பேசினார். அங்கிருந்த திருநங்கைகளிடமும் சிறிது நேரம் பேசி தனக்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


    திடீரென ஜூஸ் கடைக்குள் புகுந்து பழங்களை பிழிந்து ஜூஸ் போட்டு அனைவருக்கும் கொடுத்தார். நல்லவர்களுக்கே வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வித்தியாசமான முறையில் மன்சூர்அலிகான் பிரசாரம் செய்து வருவது பொதுமக்களை கவர்ந்துள்ளது.  #mansooralikhan

    புதிய பட அறிவிப்பு வரும்போது மட்டுமே ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது என்று நடிகர் மன்சூர்அலிகான் கூறினார். #LokSabhaElections2019 #MansoorAliKhan
    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றி வித்தியாசமான முறையில் பிரசரம் செய்து வருகிறார்.

    சூ பாலீஷ் போடுவது, புரோட்டா செய்வது, டீ போடுவது, தெருக்களை கூட்டுவது, டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுவது, குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது என விதவிதமான முறையில் பிரசாரம் செய்து பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்.

    மேலும் பொதுக்கூட்டத்தில் விவசாயி போல் உடையணிந்து வந்தார். தொகுதிக்குள் பொதுமக்களிடம் உரிமையாக பேசி பழகி அவர்களது கஷ்ட நஷ்டங்களை கேட்டு வருகிறார்.

    ஆத்தூர், பஞ்சம்பட்டி, ஆரியநல்லூர், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று மன்சூர்அலிகான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சாலையோரம் இருந்த கடையில் கம்பங்கூழ் வாங்கி பருகினார். மேலும் கம்பங்கூழை பொதுமக்களுக்கு விற்பனை செய்தார். வியாபாரம் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார்.

    பொதுமக்களிடையே பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய பிரச்சினையாக உள்ளது குடிநீர் பிரச்சினை. எனவே என்னை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் செந்துறை, குடகனாறு பகுதியில் அணை கட்டி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்.

    மற்ற கூட்டணிகள் எல்லாம் 500, 1000 கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு சேர்ந்துள்ளனர். ஆனால் நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன். உங்களில் ஒருவனாக இருப்பேன். உங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.



    புதிய பட அறிவிப்பு வரும் போது மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். அதன் பின்னர் அமைதியாகி விடுகிறார். மற்றொரு புதிய படம் வெளியாகும் போது அறிக்கை வெளியிடுவார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது.
    இவ்வாறு அவர் பேசினார்.

    பூஞ்சோலை பகுதியில் மன்சூர் அலிகானை கண்டதும் அப்பகுதி வாலிபர்கள் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.  #LokSabhaElections2019 #MansoorAliKhan



    ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் திரும்பிய மன்சூர்அலிகான் மீண்டும் தனது வழக்கமான பாணியில் பிரசாரம் செய்தார். #MansoorAliKhan
    பழனி:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூதனமான முறையில் பிரசாரம் செய்து மக்களோடு மக்களாக இணைந்து வாக்குசேரித்து வருகிறார். இது பெரும்பாலான பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

    நிலக்கோட்டை பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது கட்சி தொண்டர்கள் மன்சூர்அலிகானை ஆஸ்பத்தரியில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து மீண்டும் தனது பழைய பாணியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

    பழனியை அடுத்துள்ள வண்டிவாய்க்கால் பகுதியில் மீன் சந்தையில் மன்சூர்அலிகான் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அங்குள்ள வாத்துகளை தூக்கி கையாலே எடை பார்த்து விலை நிலவரங்களை கேட்டறிந்தார். அதன்பிறகு மீன் விலை நிலவரங்களை கேட்டறிந்து பொதுமக்களை அழைத்து விற்பனை செய்தார்.

    மீனை அதன் செதில்களை சீவி சுத்தப்படுத்தி கழிவுகளை அகற்றி பொதுமக்களிடம் கொடுத்தார். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அவர்கள் கொண்டு வந்த பைகளில் மீன்களை வழங்கினார். அனைவரும் எனக்கு ஓட்டு போடுங்கள் நான் வாரம் தோறும் வந்து உங்களுக்கு மீன் வெட்டி தருகிறேன் என்று கூறினார்.

    அதனைத் தொடர்ந்து மீன் வியாபாரிகளிடம் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார். #MansoorAliKhan
    ×