search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makkal Needhi Maiam"

    • அடுத்த முறை தேர்தல் ஆணையத்தில் டார்ச்லைட் சின்னத்தை கேட்க வேண்டும் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு இருக்க வேண்டும்.
    • தென்சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்டுப்பெற்று களம் இறங்க மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதிலும் அந்த கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை எதுவும் இன்னும் நேரடியாக நடைபெறவில்லை.

    அதே நேரத்தில் ரகசியமாக மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட முடிவு செய்து உள்ளார். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி அந்த தொகுதியை கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டது. இதற்கு நல்ல பலனும் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கோவை தொகுதியை கமல்ஹாசனுக்கு விட்டுக் கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கு பதில் பொள்ளாச்சி தொகுதியில் களமிறங்க அந்த கட்சி முடிவு செய்து உள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை தொகுதி உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தி.மு.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


    இதனை தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு தொகுதியையும் கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியுடன் உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பாராளுமன்ற தேர்தல், சட்டன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டு டார்ச்லைட் சின்னத்தில் களம் இறங்கி உள்ளது. வருகிற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அடுத்த முறை தேர்தல் ஆணையத்தில் டார்ச்லைட் சின்னத்தை கேட்க வேண்டும் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு இருக்க வேண்டும்.

    இதற்காகவே கமல்ஹாசன் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்டுப்பெற்று களம் இறங்க மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது. அது எந்த தொகுதி என்பது விரைவில் முடிவாகும் என நம்புவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    • பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே கமல்ஹாசன் தோல்வியை தழுவினார்.
    • கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தீவிர தேர்தல் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தாங்கள் போட்டியிட உள்ள தொகுதிகளை கேட்டு பெறுவதில் தீவிரமாக உள்ளன. தி.மு.க. தொகுதி பங்கிட்டு குழுவினருடன் கூட்டணி கட்சிகள் நடத்திய முதல் கட்ட பேச்சு வார்த்தையில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கி உள்ளன.

    அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருப்பதாக கருதப்படும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இதுவரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் அனுப்பப்படாமலேயே உள்ளது. இருப்பினும் கோவை தொகுதியை குறிவைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் காய் நகர்த்தி வருகிறார்கள். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் கோவை தொகுதியில் கணிசமான வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. இதையடுத்து கோவை தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கமல்ஹாசன் நம்புகிறார். இதற்காகவே மக்கள் நீதி மய்யம் கட்சி கோவை தொகுதியை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது இன்னும் உறுதியாகாத நிலையில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தீவிர தேர்தல் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.

    இப்படி கோவை தொகுதியில் கமல் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தி.மு.க. சார்பில் அங்கு நடிகர் ரஜினிகாந்தின் மருமகனை வேட்பாளராக களம் இறக்கலாமா? என்பது பற்றி கட்சி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பல்லடம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடியின் குடும்ப வாரிசு தான் ரஜினியின் மருமகனான விசாகன் ஆவார். பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன்தான் விசாகன். இவர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவை திருமணம் செய்து உள்ளார்.



    தி.மு.க. குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற முறையிலும் ரஜினியின் மருமகன் என்கிற முறையிலும் பாராளுமன்றத் தேர்தலில் அவரை களம் இறக்கினால் நிச்சயம் வெற்றி உறுதி என்று தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். அதுபோன்று விசாகனை பாராளுமன்ற தேர்தல் களத்தில் நிறுத்தினால் ரஜினி ரசிகர்களும் அவரது வெற்றிக்காக உழைப்பார்கள். அனைத்து தரப்பு மக்களின் ஓட்டுகளும் கிடைக்கும் என்பது தி.மு.க.வினர் போடும் திட்டமாகவும் உள்ளது. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வே செல்வாக்கு மிகுந்ததாக காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். இது போன்ற சூழலில் கோவை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று நிச்சயம் தங்களது செல்வாக்கையும் காட்ட தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதற்கு பரிச்சயமான ஒருவரை நிறுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று அந்த கட்சி கணக்கு போட்டுள்ளது. இதன் காரணமாகவே ரஜினியின் மருமகன் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்கிற தகவல் கோவை தொகுதியில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 6 ஆண்டு அரசியல் பயணம் எனக்கு நிறைய அனுபவங்களை கற்று தந்துள்ளது.
    • எல்லா கட்சியும் ஒன்று சேர்ந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கட்சித்தலைவர் கமல்ஹாசன் இதில் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    இதன்பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று 7-வது ஆண்டில் மக்கள் நீதி மய்யம் அடியெடுத்து வைத்து உள்ளது. இந்த 7 ஆண்டுகளில் நேர்மையான அரசியலை முன்னெடுத்து சென்று உள்ளோம். அதனை பெரிய சாதனையாகவே கருதுகிறோம்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும். கெட்ட செய்தி டெலிகிராம் மூலம் வரும். நல்ல செய்தி கடிதம் மூலமாகவே வரும்.

    பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். அதுபற்றியும் விரைவில் உங்களிடம் தெரிவிப்போம். உங்களிடம் எதையும் சொல்லாமல் தப்பிக்க முடியாது. அதனை சொல்வது எனது கடமை ஆகும்.

    நடிகர் விஜய் கட்சி தொடங்கியதும் அவரை தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து சொன்னது நான்தான்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் 6 ஆண்டு நிறைவில் எதை செய்யக்கூடாது என்பதையும் மற்றவர்கள் செய்யாமல் மறந்தது எது என்பதையும், நியாயமான விஷயங்களை யார் சொல்லாமல் விட்டார்கள் என்பதையும் கற்றுக்கொண்டு உள்ளோம்.

    எங்களது நேர்மையை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் எங்களுக்கு டார்ச்லைட் சின்னம் வழங்கி உள்ளது.

    எங்களது கட்சியின் 7 ஆண்டு சாதனை என்ன என்று கேட்கிறீர்கள். பாண்டு பத்திரங்களை நாங்கள் வாங்கியது இல்லை. கடந்த 28 ஆண்டுகளாக தூசுபடிந்து கிடந்த கிராம சபை கூட்டங்களை தூசி தட்டி எழுப்பி உள்ளோம். அதுவும் மிகப்பெரிய சாதனைதான்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    • நாட்டிலேயே 40 சதவீதம் பேர் வாக்களிப்பது இல்லை.
    • முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கட்சி கொடியேற்றி வைத்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    * திமிராக பேசுவதை எல்லாம் பெரியாரிடம் கற்றுக் கொண்டேன்.

    * நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன்.

    * கோவை தெற்கில் நான் தோல்வியடைய காரணம் 90,000 பேர் வாக்களிக்கவில்லை.

    * நாட்டிலேயே 40 சதவீதம் பேர் வாக்களிப்பது இல்லை.

    * முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது.

    * எனது சொந்த காசில் தான் அரசியல் செய்து வருகிறேன்.

    * என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள்... போக வைப்பது அதை விட கஷ்டம்.

    * என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து விட்டது... அழுத்தமாக நடைபோடுவேன்.

    * கட்சியை ஆரம்பித்ததால் எனக்கு எந்த லாபமும் இல்லை... நஷ்டம் தான்.

    * விவசாயிகளுக்கு மாநில அரசு செய்தது கூட மத்திய அரசு செய்வதில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம்.
    • மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பதிவில்,

    மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம்.

    மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது. ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு.

    மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சாதி மதச் சழக்குகள் இருக்கும்வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது என்று தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவில் பணிகளை முடித்து விட்டு இப்போது தான் சென்னை திரும்பி இருக்கிறேன்.
    • எங்கள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பணிகள் நல்ல முறையில், நடந்து கொண்டு இருக்கின்றன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளன.

    ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு யாரும் அழைக்கவில்லை.

    இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில், இடம் பெற்றுள்ளதா? அந்த கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுமா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்தன.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று தெரிவித்திருந்தனர்.

    கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ப்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். அமெரிக்காவில் 19 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார்.

    சென்னை விமான நிலையத்தில் வைத்து பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கமல்ஹாசனிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    நான் தக் லைப் முன்னேற்பாடுகளுக்காக, அமெரிக்கா சென்றிருந்தேன். அமெரிக்காவில் பணிகளை முடித்து விட்டு இப்போது தான் சென்னை திரும்பி இருக்கிறேன்.

    இன்னும் இரண்டு தினங்களில், நல்ல செய்திகளுடன் நான் உங்களை சந்திக்கிறேன். இப்போதைக்கு இதுதான் செய்தி.

    ஏனென்றால் நான் அமெரிக்காவில் இருந்து செய்திகளை கொண்டு வரவில்லை. இங்கிருந்து தான் உருவாக்க வேண்டும்.

    நான் இங்கு கூட்டணி கட்சிகளுடன் பேசிவிட்டு, அடுத்த இரண்டு நாட்களில், உங்களை மீண்டும் சந்திக்கிறேன். அப்போது எல்லா தகவல்களையும் கூறுகிறேன். இரண்டு நாட்களில் அந்த வாய்ப்பு மீண்டும் அமையும்.

    எங்கள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பணிகள் நல்ல முறையில், நடந்து கொண்டு இருக்கின்றன.

    கூட்டணி கட்சிகள் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை குறித்து, அடுத்த இரண்டு நாட்களில் நான் நிச்சயமாக கூறுவேன்.

    காங்கிரஸ் கட்சியுடன் நடக்கும் பேச்சுவார்த்தை குறித்தும், இரண்டு நாட்களில் கூறுவேன். இப்போது எதுவும் நான் கூறக்கூடாது.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நாளை மறுநாள் (21-ந்தேதி) ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதில் கலந்து கொள்ளும் கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்படும் என்று வெளியாகி வரும் தகவல்கள் கட்சியினர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது போல 2 அல்லது 3 இடங்களையாவது ஒதுக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

    ஆனால் இதற்கு வாய்ப்பு இல்லை என்பதே தி.மு.க. தலைவர்களின் பதிலாக உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் தேனி தொகுதியை தவிர 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த முறை 7 அல்லது 8 தொகுதிகள் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் தொகுதிகளில் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனை கமல்ஹாசன் ஏற்றுக் கொள்வாரா? என்பது நாளை மறுநாள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்தான் தெரியவரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம்.
    • மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன்.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது.

    வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம்.

    மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன். அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • சினிமா துறையில் இருந்து வந்த பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்தார்.
    • சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

    மதுரை:

    மதுரை விளாங்குடியில் முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சினிமா துறையில் இருந்து வந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவர் தான் கட்சி ஆரம்பித்து அரசியலில் சாதித்தவர்.

    31 ஆண்டு காலம் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி செய்து, வரலாறு படைத்தது. சினிமா துறையில் இருந்து வந்த சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தார். அவர் சினிமாவில் அழுதால் மக்கள் அழுவார்கள். அவர் சிரித்தால் மக்கள் சிரிப்பார்கள். நடிப்பால் அவர் புகழ் பெற்றவர். ஆனால் கட்சி தொடங்கி அவரால் வெற்றி பெற முடியவில்லை.

    அதேபோல் சினிமா துறையில் இருந்து வந்த பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்தார். அடுக்குமொழியில் பேசும் டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பித்தார். போணியாகவில்லை. ரஜினி கட்சி அறிவித்தார். ஆனால் வாபஸ் வாங்கிவிட்டார்.

    ஊழலை ஒழிப்பேன், நீதி கேட்பேன் என கமல்ஹாசன் கட்சி தொடங்கினார். ஒரு தொகுதிக்காக தனது வாயை இப்போது வாடகைக்கு விட்டுவிட்டார்.

    தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் இளைஞர். நல்ல மனம் படைத்தவர். ஒரு லட்சியத்தோடு வருவதாக சொல்கிறார்.

    ஆனாலும் வருகின்ற 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாமல், எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் ஆவார்.

    சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இதற்கு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். கூட்டணி பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களது கையே எங்களுக்கு பலம். தொண்டர்களின் பலம் எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்கிற எந்தவித தகவலும் வெளியாகாமலேயே உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்கிற எந்தவித தகவலும் வெளியாகாமலேயே உள்ளது.

    இதனால் கமல் கட்சி கூட்டணியில் இடம் பெறுமா? இல்லையா? என்கிற கேள்வியும் எழுந்தது.

    இந்த நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தென்சென்னை தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அப்படி ஒதுக்கப்படும் பட்சத்தில் கமல்ஹாசன் அங்கு போட்டியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
    • விண்ணப்பம் செய்வதற்காகக் குறிப்பிட்டிருந்த முதல் நாளான டிசம்பர் 17-ந்தேதி அன்றே டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    ெசன்னை, ஜன.31-

    பாராளுமன்றத் தேர்த லில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கி தருமாறு தேர்தல் ஆைண யத்தில் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    பாராளுமன்றத் தேர்த லில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. விண்ணப்பம் செய்வ தற்காகக் குறிப்பிட்டிருந்த முதல் நாளான டிசம்பர் 17-ந் தேதி அன்றே டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக் கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி யின் தலைவர் கமல் ஹாசன் வெளிநாடு செல்லவிருப்ப தால், கட்சியின் துணைத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் ஆகி யோருடன் 'பாராளு மன்றத் தேர்தல்' குறித்து ஆலோ சனை மேற்கொண்டார்.

    ஆலோசனைக்குப் பின், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செயல் திட் டங்களை உருவாக்குவதற் கும், செயல்படுத்துவதற்கும், பிற குழுக்களை அமைப்ப தற்கும் கமல்ஹாசன் 'தேர் தல் பணி ஒருங்கிணைப்பு குழுவினை' உருவாக்கி உள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி யின் துணைத் தலைவர்க ளான மவுரியா, தங்கவேலு, பொதுச் செயலாளர் அரு ணாச்சலம் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பி னர்களாகச் செயல்படு வார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி யின் மனுவை ஏற்றுக் கொண்டு தேர்தல் ஆணை யம் கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கு மா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை.
    • இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்.

    சென்னை :

    இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,


    மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

    • மக்களிடம் நன்கு பரிச்சயமான தலைவராக கமல் உள்ளார்.
    • இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர் கொள்ள ஆயத்தமாகி வருகிறது.

    இதற்கு முன்பு நடை பெற்றுள்ள சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களை தனித்தே சந்தித்த கமல்ஹாசன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளார்.

    கடந்த ஆண்டு நடை பெற்ற ஈரோடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல்ஹாசன், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளோடு இணக்கமாகவே செயல்பட்டு வருகிறார்.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுவது 100 சதவீதம் உறுதியாகி உள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே வெளியாக வேண்டியது உள்ளது. இப்படி கூட்டணி உறுதியானாலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது இன்னும் முடிவாகவில்லை.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் கமல் கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மறுக்கிறார்கள்.

    இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேர்ந்து பயணிக்கும்போது கூட்டணிக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும். எங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கூட்டணிக்கு நிச்சயம் கைக்கொடுக்கும். இதனை யாரும் மறுக்க மாட்டார்கள். கமல்ஹாசனின் பேச்சை கேட்பதற்கு மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். மக்களிடம் நன்கு பரிச்சயமான தலைவராக கமல் உள்ளார்.

    சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் குறிப்பிடத் தக்க அளவுக்கு வாக்குகளை வாங்கி எங்களது ஓட்டு வங்கி என்ன? என்பதை நிரூபித்துள்ளோம்.

    எனவே 3 தொகுதிகளை கேட்டு வாங்குவது என்பதில் உறுதியாக உள்ளோம். ஒரு சீட் மட்டும் கொடுத்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியுடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் விரைவில் வெளியிட உள்ளார்.

    ×